காட்பாடி கல்புதூர் பகுதியில் கெங்கையம்மன் கோயில் திருவிழாவில்இளைஞர்களிடையே மோதல்: ஒருவர் அடித்துக் கொலை- கொலையாளிகளுக்கு போலீஸ் வலை!வேலூர், ஜூன் 24-காட்பாடி கல்புதூர் பகுதியில் நடைபெற்ற கெங்கையம்மன் கோயில் திருவிழாவின் போது கல்புதூர், வண்டறந்தாங்கல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவேறு பிரிவு இளைஞர்களுக்கு இடையே முன்விரோதம் தொடர்பாக கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது தினகரன் என்ற இளைஞரை காணவில்லை. காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த இளைஞர் தினகரன் முகத்தில் காயங்களுடன் கல்புதூர் பகுதியில் கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இறந்தவர் உடலை காட்பாடி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேரிடம் காட்பாடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளை காட்பாடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கீழ்மட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிமாணவர்களுக்குநோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா!செய்யாறு, ஜூன் 24 -செய்யாறு அடுத்தகீழ்மட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், எழுது பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52வது பிறந்தநாளையொட்டி செய்யாறு அடுத்த அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட த.வெ.க.,பொறுப்பாளர்கள் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருட்கள் வழங்கும் விழா கீழ்மட்டை கிராமத்தில் நடந்தது.விழாவிற்கு அனக்காவூர் த.வெ.க.,வின் மேற்கு ஒன்றிய செயலாளர் சேதுபதி தலைமை தாங்கினார்.‌ இணை செயலாளர் சூரியா முன்னிலை வகித்தார். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுது பொருட்கள், இனிப்பு ஆகியவற்றை வழங்கினர். இதைத் தொடர்ந்து கீழ்மட்டை கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அறுசுவையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனக்காவூர் மேற்கு ஒன்றிய இளம்பெண்கள் பாசறை அமைப்பாளர் யோகேஸ்வரி, ஊராட்சி செயலர் பார்த்தசாரதி, இணைச் செயலாளர் சுதர்சன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என, பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கீழ்மட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிமாணவர்களுக்குநோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா !செய்யாறு, ஜூன் 24 -செய்யாறு அடுத்தகீழ்மட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், எழுது பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாளையொட்டி செய்யாறு அடுத்த அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட த.வெ.க.,பொறுப்பாளர்கள் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருட்கள் வழங்கும் விழா கீழ்மட்டை கிராமத்தில் நடந்தது.விழாவிற்கு அனக்காவூர் த.வெ.க.,வின் மேற்கு ஒன்றிய செயலாளர் சேதுபதி தலைமை தாங்கினார்.‌ இணை செயலாளர் சூரியா முன்னிலை வகித்தார். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுது பொருட்கள், இனிப்பு ஆகியவற்றை வழங்கினர். இதைத் தொடர்ந்து கீழ்மட்டை கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அறுசுவையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனக்காவூர் மேற்கு ஒன்றிய இளம் பெண்கள் பாசறை அமைப்பாளர் யோகேஸ்வரி, ஊராட்சி செயலர் பார்த்தசாரதி, இணை செயலாளர் சுதர்சன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என, பலரும் கலந்து கொண்டனர்.

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் சார்பில் குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!வேலூர், ஜூன் 23-குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பிச்சனூர் கங்காதர சுவாமி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு குறைந்த கூலி வழங்கும் தனியார் முதலாளிகளை கண்டிக்கிறோம். அம்பேத்கர் சிலை அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் தனியார் பள்ளிகளின் (பிரம்மாஸ்) கல்வி கட்டண உயர்வை உடனடியாக தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியாத்தம் நகரில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்னம்பட்டி கிராமத்தில் 30 வருடமாக உள்ள குடிநீர் பிரச்சனையை தீர்க்க வழிவகை காண வேண்டும். சீவூர் பஞ்சாயத்து கள்ளூர் கிராமம் குறிஞ்சி நகர் சுற்றியுள்ள பகுதிகளில் கால்வாய் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் சார்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் 22.6.2026 மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ராம.சரவணன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில செயலாளர் வினோத்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கோல், நகர தலைவர் சங்கர், நகர செயலாளர் கஜேந்திரன், நகர சக்தி மாநகர தலைவர் மகேஸ்வரி, நகர இளைஞர் அணி செயலாளர் வினோத்குமார், ஒன்றிய தலைவர் கோபி, ஒன்றிய செயலாளர் யுவராஜ், ஒன்றிய மகளிர் அணி தலைவர் நளினி, ஒன்றிய செயலாளர் கோகுல்ராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ,கைத்தறி காவலன் எஸ் .ரமேஷ் வரவேற்றார். அகில பாரத மக்கள் இயக்கத்தின் நிறுவனர் கார்த்திக் ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சம்பத்குமார், ரமேஷ் குமார், உறுதிமொழி ஆணையர் எம். குமார், வழக்கறிஞர்கள் கோபி, சமூக ஆர்வலர் நாராயணன், பிரவீன் குமார், செங்குன்றம் பாலாஜி மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் நலன் ,சமூக நீதி உரிமைகளை வென்றெடுக்க பொதுமக்கள் கைத்தறி விசைத்தறி தொழிலாளர்கள் சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் என அனைவரும் வருகை தந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மக்கள் நலனுக்காக, சமூக நீதிக்காக உரிமைகளை வென்றெடுக்க இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டம் முறையாக குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் முன் அனுமதி பெற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த வேளையிலேயே பிரம்மாஸ் பள்ளிகளின் தாளாளர் அங்கு காரில் வருகை தந்தார். அங்கு கண்டன ஆர்ப்பாட்டத்தை செய்தி மற்றும் புகைப்படம், ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த செய்தியாளர்களை அழைத்துச் சென்று அவர் தனியாக பேட்டி அளிக்கிறேன் என்று சொல்லி, ஒரு பெற்றோரும் இதற்கு இசைவு தெரிவிக்கவில்லை, ஒரு தனிநபர் மட்டும் தன்னிச்சையாக இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து நடத்துகிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டினார். முறையாக காவல் துறையினரிடம் முன் அனுமதி பெற்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு இடையில் இப்படி ஒரு சம்பந்தப்பட்ட நபர் நேரில் வந்து இப்படி நடந்து கொண்டது சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு வழி வகுத்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் எதையும் கண்டு கொள்ளாமல் அமைதி காத்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி ஆர்ப்பாட்டம் நடந்த போது இடையூறு ஏற்படுத்தியவர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் ஒரே கோரிக்கையாக தற்போது மாறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ரமேஷ் நன்றி கூறினார்.

செய்யாறில் த.வெ.க.,வின் பெண் பொறுப்பாளர் பிரீத்தி ஏற்பாட்டில்முதல்வர் விஜய்யின் பிறந்த நாள் விழா கோலாகலம் !செய்யாறு, ஜூன் 23 -செய்யாறில் த.வெ.க.,வின் பெண் பொறுப்பாளரான பிரீத்தி ஏற்பாட்டில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.செய்யாறு நகரத்திற்கு உட்பட்ட ஆரணி கூட்டு சாலையில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்தில், மாவட்ட இளம் பெண்கள் அணி இணை அமைப்பாளர் எஸ்.பிரீத்தி புதியதாக பொறுப்பேற்றுள்ளார். இவரது ஏற்பாட்டில் முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். பொதுமக்கள் மத்தியில் கேக் வெட்டி முதல்வரின் பிறந்தநாள் விழாவை விமரிசையாக கொண்டாடினர். இதைத் தொடர்ந்து 500 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அவ்வழியே சென்ற அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணம் செய்த பயணிகளுக்கும் மாவட்ட இளம் பெண்கள் அணி இணை அமைப்பாளர் பிரீத்தி கேக் மற்றும் இனிப்பு வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரச்சார – பேச்சாளர் அணி அமைப்பாளர் விநாயகமூர்த்தி, நிர்வாகிகள் நிர்மலாதேவி, காமேஷ், பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்யாறில் த.வெ.க.,வின் பெண் பொறுப்பாளர்கள் இருவர் ஏற்பாட்டில் முதல்வர் விஜய்யின் பிறந்த நாள் விழா கோலாகலம் !செய்யாறு, ஜூன் 23 -செய்யாறில் த.வெ.க.,வின் பெண் பொறுப்பாளர்களான புவனேஸ்வரி, பிரீத்தி ஆகிய இருவரின் ஏற்பாட்டில், தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்த நாளான நேற்று கேக் வெட்டி – அன்னதானம் வழங்கி கோலாகலமாக கொண்டாடினர்.செய்யாறில் த.வெ.க.,வின் மத்திய ஒன்றிய செயலாளராக புவனேஸ்வரி பொறுப்பு வகித்து வருகிறார். திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில் தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி செய்யாறில் உள்ள கீழ்புதுப்பாக்கம் ஊராட்சி நுழைவு வாயிலில் 52 கிலோ எடையுள்ள கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினர். அவ்வழியே சென்ற அரசு பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கினர். பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் த.வெ.க.,வின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என, பலரும் கலந்து கொண்டனர்.இதே போல் செய்யாறு – ஆரணி கூட்டு சாலையில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட இளம் பெண்கள் அணி இணை அமைப்பாளர் எஸ்.பிரீத்தி ஏற்பாட்டில் முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். பொதுமக்கள் மத்தியில் கேக் வெட்டி முதல்வரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இதைத் தொடர்ந்து 500 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பிரச்சார பேச்சாளர் விநாயகம், நிர்வாகிகள் தேவி, காமேஷ், பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: குலுங்கியசெய்யாறு நகரம்!செய்யாறு, ஜூன் 23 -தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52வது பிறந்த நாள் விழாவை, த.வெ.க.,வின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடியதால் செய்யாறு நகரமே குலுங்கியது.தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பின்பு, அவரது 52வது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட செய்யாறில் மாவட்ட செயலாளர் உதயகுமார் உத்தரவின் பேரில் த.வெ.க.,வின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என, அணி அணியாக சேர்ந்து நகரம் முழுவதும் முதல்வரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.‌ செய்யாறு பஸ் நிலைய நுழைவு வாயிலில் த.வெ.க.,வின் நிர்வாகி சரவணன் ஏற்பாட்டில் 52 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் த.வெ.க.,வின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதேபோல் செய்யாறில் உள்ள திருவத்திபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டின் நுழைவு வாயிலில், மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில், செய்யாறு ( தெற்கு ) நகர செயலாளர் பெரோஸ்கான், நகர ( வடக்கு ) துணை செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் விழாவை பொதுமக்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினர்.500க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் த.வெ.க., பொறுப்பாளர்களான பிரசாந்த், பிரபாகரன், ஏ.சசிகுமார், பூபாலன், ஆர்.சசிகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதேபோல் செய்யாறு நகர் முழுவதும் முதல்வரின் பிறந்தநாள் விழா எடுக்கப்பட்டதால் செய்யாறு நகரமே குலுங்கியது குறிப்பிடத்தக்கது.

குடியாத்தம் கே எம் ஜி கல்லூரிநிறுவனங்களின் தலைவர் கே. எம். ஜி. ராஜேந்திரனுக்கு பிறந்தநாள் விழா: புதிய நீதி கட்சி நகர செயலாளர் ரமேஷ் நேரில் வாழ்த்து!வேலூர் , ஜூன் 23-வேலூர் மாவட்டம், குடியாத்தம் கே. எம். ஜி .,கல்லூரி நிறுவனங்களின் தலைவர் கே. எம் .ஜி., ராஜேந்திரனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குடியாத்தம் நகர புதிய நீதிக் கட்சியின் நகர செயலாளர் மற்றும் கைத்தறி காவலன் ரமேஷ் கைத்தறி ஆடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருடன் தேசிய திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட துணைச் செயலாளர் ரமணி, தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவர் தினகரன் மற்றும் அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் பொறுப்பாளர்கள் பொன்னம்பட்டி கார்த்திக் ஜி, பாக்கியராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.