சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் படி கோவை மாநகர் வட்டம் நகரிய கோட்டம் தண்ணீர் பந்தல் பிரிவு உதவி செயற்பொறியாளராக மீண்டும் திருமதி சோபனா நியமனம் இது தொடர்பான விவரம் வருமாறு கோவை மாநகர் வட்டம் தண்ணீர் பந்தல் பிரிவு அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்தவர் திருமதி ஷோபனா இவர் மீது செயற்பொறியாளராக இருந்த பசுபதீஸ்வரன் பீளமேடு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அப்போதைய மேற்பார்வை பொறியாளராக இருந்த சதீஷ்குமார் என்பவர் மூலம் இவரை எந்த வித விசாரணையும் இல்லாமல் துடியலூர் துணை மின் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் இதனால் அதிர்ச்சி அடைந்த திருமதி சோபனா தனது மாற்றம் தொடர்பாக உரிய விளக்கம் அளித்தும் எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கேட்ட பொழுது எந்த பதிலும் அளிக்காமல் தவிர்த்து வந்தனர் இதனால் திருமதி சோபனா சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது பணியிடம் மாற்றத்திற்கு ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வழக்கு தாக்கல் செய்தார் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இவரது பணியிட மாறுதல் உத்தரவை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது ஆனால் மீண்டும் தண்ணீர் பந்தல் பிரிவு அலுவலகத்திற்கு இவர் நியமனம் செய்யக்கூடாது என்று மறைமுகமாக மேற்பார்வை பொறியாளர் அலுவலக செயற்குறியாளர் பொது வசந்த முரளி மற்றும் நகரிய செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் பீளமேடு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தி வந்தனர் இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதால் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே நேற்று இவரை மீண்டும் தண்ணீர் பந்தல் பிரிவு அலுவலகத்திற்கு நியமனம் செய்து சென்னை மின்வாரிய தலைமை பொறியாளர் பணியமைப்பு உத்தரவு பிறப்பித்தார் அதன் அடிப்படையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது நீதிமன்ற உத்தரவின் படி மீண்டும் தண்ணீர் பந்தல் பிரிவு அலுவலகத்திற்கு சோபனா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர் இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிந்து வைக்கப்பட்டது இதற்கிடையே ஷோபனா தண்ணீர் பந்தல் பிரிவு அலுவலகத்திற்கு வர கடும் எதிர்ப்பு தெரிவித்த நகரிய கோட்ட செயற் பொறியாளராக இருந்த பசுபதீஸ்வரன் அதிரடியாக பல்லடம் துணை மின் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் அதேபோல இவருக்கு உடந்தையாக இருந்த கார்த்திகேயன் டாடாபாத் துணை மின் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் ஆனால் அங்கு பணிகள் சேராமல் காலதாமதம் செய்யாமல் பல அரசியல் பெரும் அவர்களை சந்தித்து வருவதாக தெரிகிறது ஆகவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது