
மேனல்லூர் அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கிய த.வெ.க.,வின் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் !செய்யாறு, ஜூன் 15 -மேனல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில், நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய கம்ப்யூட்டரை த.வெ.க.,வின் இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் வழங்கினார்.திருவண்ணாமலை மாவட்டத்தின் கடை கோடியில் அமைந்துள்ளது மேனல்லூர் கிராமம். இங்கு அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மேனல்லூர், பகவந்தபுரம், பூனைத்தாங்கல், சுருட்டல் உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்த 370 ஏழை மாணவ – மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியரியராக உள்ள தயாளன். இந்த பள்ளியில் பயின்ற பழைய மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரை சந்தித்து, பள்ளிக்கான வளர்ச்சி பணிகளை செய்து வருகிறார்.அந்த வரிசையில் மேனல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் ( 37 ). இவர், தமிழக வெற்றி கழகத்தின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்தின் இளைஞர் அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். திருவண்ணாமலை த.வெ.க.,வின் கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமாரின் ஆலோசனை பேரில், மேனல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஏழை மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பம் கொண்ட கம்ப்யூட்டரை பள்ளிக்கு மணிகண்டன் வழங்கினார். தலைமை ஆசிரியர் தயாளன், ஆசிரியர்கள், மாணவ – மாணவிகள், ஒன்றிணைந்து, மணிகண்டனுக்கு நன்றியை தெரிவித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் தயாளனின் இதுபோன்ற முன்னெடுப்பால், மேனல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி, தனியார் பள்ளிக்கு இணையாக புதுப்பொலிவை பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.










Leave a Reply