NEET தேர்வு அரைஞாண் கயிறை அறுக்க கல்லைப் பயன்படுத்திய பெற்றோர் – காட்பாடியில் அரங்கேறிய சம்பவம்!வேலூர், மே 4-மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில், வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் ஒரு சுவாரசியமான நிகழ்வு அரங்கேறியது.தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, மாணவர் ஒருவர் அணிந்திருந்த அரைஞாண் கயிறு விதிமுறைகளின்படி அனுமதிக்கப்படாது என தெரியும். அந்த நிலையில் கயிறை அகற்ற கத்தரிக்கோல் அல்லது பிளேடு போன்ற பொருட்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.இதனையடுத்து, தேர்வு மையத்திற்கு வெளியே காத்திருந்த மாணவனின் பெற்றோர் அங்கிருந்த ஒரு கருங் கல்லைக் கொண்டு கயிறைத் தேய்த்து அறுத்து அகற்றினர். பிறகு கயிறு அகற்றப்பட்டதையடுத்து, அந்த மாணவர் நிம்மதியுடன் தேர்வு எழுத உள்ளே அனுமதிக்கப்பட்டார்.தேர்வு விதிகளால் ஏற்பட்ட இந்தச் சிறு பரபரப்பு அங்கிருந்த மற்ற பெற்றோர்களிடையே பேசுபொருளானது.