‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ காட்பாடி பகுதியில் ஆட்சியர் லீலா அலெக்ஸ் ஆய்வு!வேலூர், ஜூலை 16-வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் ” உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் காட்பாடி உழவர் சந்தையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.காட்பாடி உழவர் சந்தையில் தாயுள்ளத்தோடு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ். மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு தினமும் ஏற்படும் அசௌகரியங்களை உழவர் சந்தை யில் கடை வைத்துள்ள மூதாட்டி விளக்கி கூறினார். மற்றபடி உழவர் சந்தையில் எவ்விதமான குறையும் இல்லை என்று கூறினார். கழிவறைகள் மட்டும் சுத்தமான நிலையில் இல்லை என்று உழவர் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார். நுகர்வோர் தரப்பில் ஏதாவது கருத்துக்கள் குறைகள் உள்ளனவா என்று கேட்டறிந்தார் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ். ஆட்சியருடன் மாவட்ட ஆட்சியருடன் அரசு அலுவலர்கள் உடன் வந்தனர்.