Archives
August 2026
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Month:
August 2026
பன்றி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் பலி!வேலூர், ஆக. 14-பொன்னை அருகே இருசக்கர வாகனத்தின் குறுக்கே பன்றி வந்ததால் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.வேலூர் மாவட்டம்,காட்பாடி தாலுகா K.N. பாளையத்தைச் சேர்ந்தவர் துரை. இவரது மகள் தவமணி (24). இவர் ராணிப்பேட்டை மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் உள்ள ‘Fun School’ என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இவருடன் ராணிப்பேட்டை, நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 11.08.2026 அன்று காலை தட்சிணாமூர்த்தி தனது இருசக்கர வாகனத்தில் தவமணியை அழைத்துக் கொண்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். வாகனம் பொன்னை – சித்தூர் சாலை சீனிவாசபுரம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகச் சாலையின் குறுக்கே பன்றி ஒன்று ஓடி வந்துள்ளது.பன்றி குறுக்கே வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தட்சிணாமூர்த்தி வாகனத்தை பன்றியின் மீது மோதி கீழே விழுந்தார். இதில் பின்னால் அமர்ந்திருந்த தவமணி சாலையில் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் அவரது பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள CMC மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தவமணி சிகிச்சை பலனின்றி 13ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து பொன்னை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம்நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால் சீர்குலையும் சுகாதாரம் கொடிய நோய் தொற்று அச்சத்தில் பொதுமக்கள்!
தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசியக் கீதத்திற்கு அவமரியாதை: விசாரணை கோரி, ஜனாதிபதி, பிரதமர் தமிழகமுதல்வர் உள்ளிட்டோருக்கு சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புக்கள் மனு!கோவை, ஆக., 14-அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசியக் கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிவசேனா கட்சியின் தமிழ்நாடு இளைஞரணி மாநிலத் தலைவர் அட்சய திருமுருக தினேஷ், இந்திய ஜனாதிபதி, பிரதமர் தமிழகமுதல்வர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பியுள்ளார்.அதில், சென்னை ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் தமிழகச் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்பாகக் கிறிஸ்தவப் பாடல் பாடப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது.இது தொடர்பாகப் விளக்கமளித்த அமைச்சர் ராஜேந்திரன், இக்கல்லூரி ஒரு கிறிஸ்தவக் கல்வி மையம் என்பதால் முதலில் பிரார்த்தனை செய்ததாகவும், பொது நிறுவனங்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மட்டுமே தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், இச்சம்பவம் குறித்துத் தனி விசாரணை நடத்தி, அரசு விதிமுறைகள் மற்றும் தேசிய கௌரவச் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனச் சிவசேனா கட்சி சார்பில் இந்திய ஜனாதிபதி, பிரதமர் தமிழகமுதல்வர் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும், எதிர்காலத்தில் அனைத்து அரசு மற்றும் பொது விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியக் கீதம் மற்றும் தேசியப் பாடலுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதை உறுதி செய்யத் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இதேபோல் இந்து மக்கள் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் சூர்யா, பாரத் சேனா, சக்தி சேனா ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகளும் தனித்தனியாக மனு அனுப்பியுள்ளது குறிப்பிட தக்கதுபடம் இணைக்கப்பட்டுள்ளது 0005தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசியக் கீதத்திற்கு அவமரியாதைக்கு விசாரணை கோரி, இந்திய ஜனாதிபதி, பிரதமர் தமிழகமுதல்வர் உள்ளிட்டோருக்கு சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புக்கள் சார்பில் தபால் மூலம் மனுப்பியவர்கள்
ஐயா வணக்கம்🙏 கிராம ஊராட்சி விதிகளின்படி கிராம சபா கூட்டமானது அந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குக்கிராமங்களில் சுழற்சி முறையில் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை.. ஆனால் தொடர்ந்து பலமுறை காளப்பநாயக்கன்பாளையத்தில் மட்டுமே நடைபெற்று வருகிறது.. ஆதலால் இந்த முறை காளப்பநாயக்கன்பாளையத்தை தவிர்த்து மீதமுள்ள நான்கு குக் கிராமங்களில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.. அப்போதுதான் அந்தப் பகுதி மக்கள் தங்களுடைய குறைகளையும் அந்த பகுதியில் நடைபெற வேண்டிய வளர்ச்சி பணிகளையும் விவாதிக்க ஏதுவாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.. நன்றி🙏
பிரம்மபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் தட்டு முட்டு சாமான்களை அடுக்கி வைக்கும் இடமாக மாறியுள்ள அவலம்!வேலூர், ஆக.13-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதற்கு முன்னர் இங்கு பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர் ரேகா எதையும் கண்காணிக்காமல், கவனிக்காமல் விட்டுவிட்டு ஏனோதானோ என்று கடமைக்கு பணிபுரிந்து வந்தார். அதன் விளைவு தற்போதும் எதிரொலித்து வருகிறது. அதாவது பணியிட மாற்றத்தில் ரேகா சென்ற பிறகும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் தட்டு முட்டு சாமான்களை அடுக்கி வைக்கும் இடமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த அவலம் மாறிய பாடு இல்லை. புதியதாக கிராம நிர்வாக அலுவலராக பிரம்மபுரத்துக்கு வந்துள்ள புதிய கிராம நிர்வாக அலுவலரும் கண்டும் காணாமல் விட்டுவிட்டு அவரது பாக்கெட்டை நிரப்பும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அங்குள்ள பொதுமக்கள் தரப்பில் புகாராக கூறப்படுகிறது. வீடு கட்டும் பொருள்கள் தட்டுமுட்டு சாமான்கள் என அனைத்தையும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை சுற்றி அடுக்கி வைத்து அந்த அலுவலகத்தின் தோற்றத்தையே மறைத்து அந்த இடத்தையே அசிங்கப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்து கண்டிக்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலர் யார் வீட்டு இழவோ பாய் போட்டு அழுகிறது என்ற ரீதியில் அவர் உண்டு அவரது வேலை உண்டு என்று எதையும் கண்டும் காணாமல் உள்ளார். தற்போது பிரம்மபுரம் கிராம நிர்வாக அலுவலர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புறம்போக்கு இடம் என்பது இல்லாத அளவிற்கு அனைத்தையும் கூறு போட்டு விற்று விட்டு சென்று விட்டார் ரேகா என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இப்படி அரசின் சொத்துக்கள் பல சமூக விரோதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், மிரட்டும் ரவுடிகளுக்கும் பாகம் பிரித்து தரப்பட்டுள்ளது பிரம்மபுரத்தில் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. புறம்போக்கு இடம் மட்டுமல்ல, தரிசு நிலங்கள் மற்றும் பஞ்சமி நிலங்களை கூட விட்டு வைக்காமல் அனைத்தையும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். மீட்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர். வருவாய்த்துறை என்ற பெயர் இதற்கு சரியாக பொருந்துகிறது என்றே சொல்லலாம். வருவாயை தனக்கு எடுத்துக் கொண்டு செல்வதிலேயே கிராம நிர்வாக அலுவலர்கள் குறியாக உள்ளனர் என்று சொன்னால் அதுதான் உண்மையிலும் உண்மை. இதை யாராலும் மறுக்க முடியாது. இன்றைக்கு எவ்வளவு கல்லா கட்டுவது என்ற ரீதியிலேயே கிராம நிர்வாக அலுவலர்கள் தினமும் பணிக்கு வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் தான் என்று சொன்னால் அதுதான் உண்மை. ஏதோ ஒரு பத்து சதவீதம் பேர் கடமையை உணர்ந்து தனது குடும்ப சூழ்நிலையை எண்ணிப் பார்த்து பணியாற்றுகின்றனர். ஆனால் பலர் தான்தோன்றித்தனமாகவும், தெனாவெட்டாகவும் பணியாற்றி வருவதை யாரும் மறுக்க முடியாது. இப்படி அரசு சொத்தை யார் வீட்டு சொத்து என்ற ரீதியில் விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பதை விட்டு விட்டு அரசு சொத்துக்களை மீட்க வேண்டும் என்ற மனரீதியில் விஏஓக்கள் மாற வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. தான் வேலை செய்யும் இடம் கோயில் போன்றது என்பதை நினைவில் கொண்டு பணியாற்றினால் இது போன்ற அவலங்கள் தொடராது, வளராது, அடியோடு மறைந்து போகும் அளவிற்கு நிலைமை மாறும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. மறந்தும் இருந்து விடக்கூடாது. இது போன்ற அலட்சியப் போக்கை கைவிட்டு விட்டு நாம் இருக்கும் இடத்தையும், நமது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள அலுவலகம் அலுவலகம் போல் காட்சியளிக்க வேண்டும் என்ற மனரீதியில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்ற முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், கிராம பொதுமக்களும், நாடு நலம்பெற வேண்டும் என்று விரும்பும் நடுநிலையாளர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்கள் இனியாவது தான் வேலை செய்யும் இடத்தையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும், யாரையும் ஆக்கிரமிப்பு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும் முன்வர வேண்டும் என்பதே அனைவரது ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் அவ்வப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றும் இடங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பல்வேறு முறைகேடுகள் எதிரொலி: மாவட்ட வழங்கல் அலுவலர் திடீர் ஆய்வு!வேலூர், ஆக. 13-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு அமைந்துள்ளது. இங்கிருந்து காட்பாடி மற்றும் கே. வி .குப்பம் தாலுகாக்களுக்கு அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. அப்படி அனுப்பி வைக்கப்படும் பொருள்களில் எடை குறைவு, பொருட்கள் சேதம், மழையில் நனைந்து துர்நாற்றம் வீசுதல் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை ரேஷன் கடை ஊழியர்கள் வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் கவனத்திற்கு அவ்வப்போது தெரிவித்த வண்ணம் உள்ளனர். இப்படி சேதமடைந்த பொருள்கள் மற்றும் துர்நாற்றம் வீசும் பொருட்கள் மற்றும் எடை குறைவாக உள்ள பொருட்கள் ஆகியவற்றை மீண்டும் திருவலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கிற்கு கொண்டு வந்து ஒப்படைத்து விட்டு மீண்டும் வேறு பொருட்களை அவர்கள் கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் பணியாற்றும் சூப்பர்வைசர் பணியாளர்களுக்கு இடையில் இதனால் கடும் விவாதங்கள், வாக்குவாதங்கள் மற்றும் சண்டை போக்கு தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை தினசரி ஒரு அன்றாட நிகழ்வாக மாறிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி மலர்ந்த நிலையில் இந்த அசாதாரண சூழ்நிலை ரேஷன் கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு மேலாளர்களுக்கும் இடையில் ஒரு பனிப்போராக தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் தரும் புகார்களின் அடிப்படையில் வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் 12 .8 .2026 புதன்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் திருவளத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார். அவர் அங்குள்ள இருப்பு மற்றும் உணவுப் பொருட்களின் தரம் மழையில் ஏதாவது நனைந்து துர்நாற்றம் வீசுகின்றதா எடை பொட்டலங்கள் சரியான எண்ணிக்கையில் ழழ செய்யப்படுகிறசன்ர்தா? உள்ளிட்ட பல்வேறு கள ஆய்வுப் பணிகளை நேரில் ஆராய்ந்து பார்த்துவிட்டு பின்னர் அங்குள்ள் கோப்புகளையும் சரி பார்க்கும் பணியில் அவர் ஈடுபட்டார் அப்போதும் இந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் பாதுகாவலராக பணியில் உள்ளவர்கள் முதல் இரண்டு சூப்பிரஸ்வங் இரண்டு ஆண்டுகளான செல்வம் மற்றும் சரவணன் ஆகியோர் மற்றும் பணியாளர்கள் மற்றும் லோடுமேன்கள் என அனைவரும் தங்களுக்கு நிகர் யாருமில்லை என்பது போல நெஞ்சம் நிமிர்த்திக் கொண்டு யாரையும் மதிக்காமல் தெனாவட்டாக நடந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது .எங்களை யாரும் ஒன்றும் செய்ய இயலாது என்ற ரீதியில் அவர்கள் நடந்து கொண்டது மற்றும் அவர்களது நடவடிக்கை வெட்கக்கேடானது வேதனைக்குரியதாகும் என்று மாவட்ட வழங்கள் அலுவலர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திருவலம் குடோனிலிருந்து கொண்டு செல்லப்படும் அரிசி பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களில் எடை குறைவு மற்றும் மழையில் நனைந்து துர்நாற்றம் வீசுவது தொடர்கதையாகவே மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது பல ரேஷன் கடை விற்பனையாளர்கள் பாடடைந்த பழுதடைந்த மொட்டைகளை திரும்பக் கொண்டு வந்து மாற்றிக் சென்ற வண்ணம் உள்ளனர் சிலர் தனது கடைக்கு வந்த அத்தியாவசிய பொருட்களை எந்த நிலையில் இருந்தாலும் அதை அப்படியே நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் இந்த நிலை மாற வேண்டும் குறிப்பாக இந்த சூப்பர் நண்டுகளாக பணிபுரியும் தெருவிளத்தில் உள்ள செல்வம் மற்றும் சரவணன் ஆகியவர் மீது துரை ரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோர்களும் ஒட்டுமொத்த கோரிக்கையாக அரசின் கவனத்திற்கு முன் வைத்துள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது வேலூர் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட வளங்கள் அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை அமைச்சரும் இதுபோன்ற கிடங்குகள் மீது ஒரு கண் வைத்து உன்னிப்பாக கவனித்து பொதுமக்களுக்கு முறையாக தரமாக கிடைக்க வேண்டிய பொருள்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக மாறி உள்ளது தொடர்ந்து தரமான பொருட்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 12ஆம் தேதி மாவட்ட வளங்கள் அலுவலர் கள ஆய்வு மேற்கொண்டார் 11 .8.2026 செவ்வாய்க்கிழமை சங்கங்களின் சார்பதிவாளர் கோபிநாத் இதய திருவலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது..
மண்டலம் 9.
செய்யாறில் சாலை விரிவாக்கப் பணி மீண்டும் தொடங்கிவிருவிறுப்பாக நடந்து வருகிறது:அதிகாரிகள் பார்வையிட்டு துரிதப்படுத்தும் பணியில் ஈடுபட்டு ள்ளனர் !செய்யாறு, ஆக. 12 -ஆற்காடு – திண்டிவனம் இடையே சாலை விரிவாக்கப் பணியானது செய்யாறில் மீண்டும் தொடங்கி விருவிறுப்பாக நடந்து வருகிறது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் சாலை பணிகளை பார்வையிட்டு வேகப்படுத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்டது செய்யாறு நகரம். இங்கு ஆண்டிற்கு ஆண்டு மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், செய்யாறு நகரத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக இங்கு அரங்கேறி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் செய்யாறில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இது தவிர கடந்த ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டமான ஆற்காட்டில் இருந்து செய்யாறு, வந்தவாசி வழியாக திண்டிவனம் வரை உள்ள நெடுஞ்சாலை, நான்கு வழி சாலையாக விரிவுப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது.கடந்த மே மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த சாலை விரிவாக்கம் செய்யும் பணி மீண்டும் தொடங்கி விருவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது செய்யாறு அடுத்த சிறுங்கட்டூர் கிராமத்திலிருந்து செய்யாறு நகரத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலை விரிவாக்கப் பணிகளை ‘சுகன்யா கன்ஸ்ட்ரக்ஷ்ன் மதுரையைச்’ சேர்ந்த நிறுவனத்தினர் செய்து வருகின்றனர். இப்பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் துரிதப்படுத்தி உள்ளனர். இந்த சாலைப் பணி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்தப் பணிகளை செய்யாறு நெடுஞ்சாலைத் துறையின் கோட்ட பொறியாளர் சந்திரன், உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி பொறியாளர் கோபி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சாலைப் பணிகளை தரமாகவும், பருவ மழைக்குள் முடிக்க வேண்டும் என, ஒப்பந்ததாரருக்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.
தமிழக அரசின் உத்தரவுப்படி போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு, போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி இன்று ஆலாந்துறை கலைமகள் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியிலும் மற்றும் கலைமகள் பொறியியல் கல்லூரியிலும் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் முன்னிலையில் உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆலந்துறை காவல் ஆய்வாளர் திரு. முத்துக்குமார் மற்றும் பொறியியல் கல்லூரியின் முதல்வர் திரு. மணிகண்ட சுப்பிரமணியன், மற்றும் கலை& அறிவியல் கல்லூரியின் முதல்வர் திருமதி. மாலா மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்….
வேலூர் மாநகர காங்கிரஸ் நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்: மாநிலத் தலைமையிடம் புகார் அளிக்கப் போவதாக எத்திராஜ் தகவல்!வேலூர், ஆக.11-வேலூர் மாநகர காங்கிரஸ் கட்சி நிர்வாகம் தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.எஸ்.எஸ். எத்திராஜ், இது குறித்து கட்சியின் மாநிலத் தலைமையிடம் புகார் அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாநகர காங்கிரஸ் தலைவர் வாஹித் பாஷாவின் கட்சி செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக, மாநகர அளவிலான கட்சி கூட்டங்களில் மாநகரத்தின் பல்வேறு அணிகள், வார்டு தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உரிய முறையில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் பிரிவு, மாணவரணி, இளைஞர் காங்கிரஸ், மகளிரணி, ஓபிசி அணி, மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.இரவு நேரங்களில் அதாவது நள்ளிரவுக்கும் மேல் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு பல சமூக விரோதிகளுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் அதிர்ச்சி தகவல் கூறப்படுகிறது. பழைய மாவட்ட தலைவரையே மீண்டும் நியமிக்கப்பட வேண்டும் என்று நிர்வாகிகள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.மேலும், கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களில் உண்மையான கட்சி தொண்டர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், குறைந்த எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே கொண்டு மாநகர அளவிலான கூட்டங்கள் நடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கட்சி நிதி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பெறப்பட்டதாகக் கூறப்படும் தொகைகள் தொடர்பாகவும் எத்திராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சிக்காக பெறப்பட்ட நிதிகளுக்கு முறையான கணக்கு மற்றும் வெளிப்படையான விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், காந்தி சாலையில் கடைகள் தொடர்பான வசூல் மற்றும் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெறும் வரவு–செலவு நடவடிக்கைகள் குறித்தும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.திருவாரூரில் காங்கிரஸ் கொடிகள் எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்றதாகக் கூறப்படும் போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற நிலையில், சில முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவில்லை என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் கேள்விகளை முன்வைத்துள்ள பி.எஸ்.எஸ். எத்திராஜ், சம்பந்தப்பட்ட மாநகர நிர்வாகம் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட மாநிலத் தலைவர்களை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வேலூர் மாநகர காங்கிரஸ் தலைவர் வாகித் பாஷா மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் விளக்கம் கிடைத்தால், அதையும் வெளியிடத் தயாராக இருப்பதாக எத்திராஜ் தெரிவித்துள்ளார். இந்த புகார் வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்குள் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பார்? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
1
2
3
4
5
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.