ஐயா வணக்கம்🙏 கிராம ஊராட்சி விதிகளின்படி கிராம சபா கூட்டமானது அந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குக்கிராமங்களில் சுழற்சி முறையில் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை.. ஆனால் தொடர்ந்து பலமுறை காளப்பநாயக்கன்பாளையத்தில் மட்டுமே நடைபெற்று வருகிறது.. ஆதலால் இந்த முறை காளப்பநாயக்கன்பாளையத்தை தவிர்த்து மீதமுள்ள நான்கு குக் கிராமங்களில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.. அப்போதுதான் அந்தப் பகுதி மக்கள் தங்களுடைய குறைகளையும் அந்த பகுதியில் நடைபெற வேண்டிய வளர்ச்சி பணிகளையும் விவாதிக்க ஏதுவாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.. நன்றி🙏