காட்பாடியில் முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் அனைத்து சங்கங்கள் ஒருங்கிணைந்து கொண்டாடிய 80வது சுதந்திர தின விழா!வேலூர்,ஆக.17-வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் முப்படை ராணுவ வீரர்களின் அனைத்து சங்கங்கள் ஒருங்கிணைந்து 80 வது சுதந்திர தின விழாவை வெகு விமரிசையாக கொண்டாடினர். இந்த விழாவிற்கு வேலூர் மாவட்ட சங்கத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாஸ்கரன், ரவீந்திரன், ஜெகதீசன், கமலநாதன், ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் ஜம்புலிங்கம், வடிவேலன், குமார், முனுசாமி, சதீஷ்குமார், தங்கவேலு, வாசு, சேட்டு, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த சங்கத்தின் நிறுவனரும், தலைவருமான கே. சிவக்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி விட்டு அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதையடுத்து அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சங்கம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கும், இந்நாள் ராணுவ வீரர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பல உதவிகளை அவசரகால உதவிகளை அறிந்து அவர்களுக்கு உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சங்கம் உருவான பிறகு கோவிட் 19 மக்களுக்கும் எந்தவித அச்சமின்றி உதவிகளை செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த சங்கம் அதற்காக காவலர் செய்தி மூலம் பாராட்டும், பதக்கங்களும் வென்ற சரித்திரமும் இந்த சங்கத்திற்கு உண்டு. மேலும் ராணுவ வீரர்களுக்கும், பொது மக்களுக்கும் உதவிகளை செய்ய தயக்கமின்றி செயல்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சங்கம் கடந்த 2021 முதல் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply