அரியூர் காவல் சரக எல்லையில் விபச்சாரம் அதிகரிப்பு: கண்டு கொள்ளாத காவல் ஆய்வாளர் நாகராஜன்!வேலூர்,அக்.17-வேலூர் அரியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் சில வீடுகள் குறிப்பாக சித்தேரி பகுதியில் 24 மணி நேரமும் விபச்சாரம் நடக்கின்றது. அரியூர் பகுதியில் உள்ள சில தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளிலும், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சில புரோக்கர்கள் பகல், இரவு என 24 மணி நேரமும் விபச்சார விடுதியாக மாற்றி தைரியமாக தொழில் நடத்தி வருகின்றனர். இதனால் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதில் வரும் லாபத்தில் மாதந்தோறும் ரூபாய் 1.50 லட்சம் வீதம் ஒவ்வொரு தங்கும் விடுதி மற்றும் இல்லங்களில் நடைபெறும் விபச்சார விடுதிகள் போன்றவற்றிற்கு கப்பமாக காவல் ஆய்வாளர் நாகராஜனிடம் பணம் செலுத்த வேண்டுமாம். இவ்வாறு எழுதப்படாத சட்டம் ஒன்று உள்ளது என்று அரியூர் காவல் சரக பகுதியில் கூறப்படுகிறது. இதற்கு அடித்தளம் இட்டவர் முன்னாள் துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு என்று சொன்னால் அது மிகையாகாது. ஆய்வாளர் நாகராஜன் காட்டில் கனமழை பெய்ய ஆரம்பித்துவிட்டது என்றே சொல்லலாம். மழை என்றால் சாதாரண மழை அல்ல கன மழை என்றே சொல்லலாம். நீங்கள் எனது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எந்த குற்றங்களை வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளுங்கள். ஆனால் எனக்கு மாதந்தோறும் தவறாது பணம் வந்து கொட்ட வேண்டும் என்று ஒரு எழுதப்படாத சட்டத்தை அமல்படுத்தி வசூல் செய்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இவரிடம் வருபவர்கள் புரோக்கர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமே வந்து மாமூலை செலுத்தி விட்டு சத்தம் இன்றி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற களைகளை பறித்தெறிய வேண்டிய காவல்துறையின் கண்ணியமிகு அதிகாரி இப்படி ஒரு காவல்துறையில் கருப்பு ஆடு போல செயல்படுவது மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது என்கின்றனர் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும். அரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா, கள்ளச்சாராயம், மணல் கடத்தல், விபச்சாரம் உள்ளிட்ட விரும்பத்தகாத சமூக விரோதச் செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை கட்டுக்குள் கொண்டு வரப்படுமா? அல்லது இன்னும் அதிகமாகுமா? என்று தெரியவில்லை. ஆன்மீக தலமாக உள்ள பகுதியில் கள்ளச்சாராயம், கள்ள மது விற்பனை மற்றும் விபச்சாரம், விரும்பத்தகாத சமூக விரோதச் செயல்கள் தங்குதடையின்றி நடைபெற்ற வண்ணம் உள்ளது. நாகராஜன் சமூக விரோதிகளுக்கு காட்ஃபாதர் போன்று செயல்படுகிறார். பணம் பணம் என்று அலைகிறார் என்று கூறப்படுகிறது. இரவு நேரங்களில் சமூக விரோத கும்பலிடமஇ இணக்கமான முறையில் பேசுவதை அன்றாட வழக்கமாக வைத்து கொண்டுள்ளார். இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் சரக காவல்துறை டிஐஜி மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் ஆகியோர் அரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சமூக விரோதச் செயல்களை தடுத்து நிறுத்துவார்களா? அல்லது அவர்களும் வேடிக்கை பார்ப்பார்களா என்று தெரியவில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் அரியூர் காவல் நிலையத்திற்கு நான் இடமாறுதல் கேட்டு மாற்றிக் கொண்டு வந்தது மாமூல் மழை பொழிகிறது என்று கேள்விப்பட்டது தான் என்கிறார் இந்த காவல் ஆய்வாளர் நாகராஜன் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படி ஒரு கண்ணியமிகு காவல் துறை அதிகாரி இப்படி சமூக விரோதிகளிடம் வசூல் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கிருஷ்ணமூர்த்தி என்ற ஆட்டோ ஓட்டுநர் பட்டப் பகலில் மட்டுமின்றி இரவு என 24 மணி நேரமும் தனது ஆட்டோ டி.என். 23 சிசி: 3321 என்ற பதிவு எண் கொண்ட வாகனத்தில் விபச்சார அழகிகளை அழைத்துக் கொண்டு செல்வது அவர்கள் வேலை முடிந்ததும் மீண்டும் அவர்களை புதிய பேருந்து நிலையம் ,பழைய பேருந்து நிலையம் என்று கொண்டு வந்து விடுவது என்று வழக்கமாக கொண்டுள்ளார். அவரை இதுநாள் வரையில் போலீசார் கைது செய்யவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வேப்பங்குப்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது சித்தேரி பகுதியில் புதியதாக வீடு எடுத்து அதில் விபச்சாரத்தை அரங்கேற்றி வருவது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி பலருக்கும் தெரிந்தது காவல்துறைக்கு எப்படி தெரியாமல் போனது என்பது தான் விந்தையிலும் விந்தையாக உள்ளது. இந்த ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்திக்கு நெருங்கிய நண்பராக அன்பு என்பவர் டி .என்.23 ஏ.கே.0261 என்ற ஆட்டோவில் விபச்சார அழகிகளை அவருடன் இணைந்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்த இரட்டையர்களை முறையாக காவல் துறை விசாரணை வளையத்துக்கள் கொண்டு வந்தால் உண்மை வெட்ட வெளிச்சத்துக்கு வரும். அத்துடன் இவர்களது செல்போன் எண்களை ஆய்வு செய்தால் அது விபச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதும், அந்த அழைப்புகள் மூலம் யார் யாருக்கு அவர்கள் பேசினார்கள் என்பதும், அவர்களை யார்? யார்? தொடர்பு கொண்டுள்ளனர் என்பதும் வெட்ட வெளிச்சத்திற்கு வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.அரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சமூக விரோதச் செயல்கள் முடிவுக்கு கொண்டுவரப்படுமா? அல்லது தொடர்ந்து இப்படித்தான் நடைபெறும் என்று எழுதப்படாத சட்டம் ஒன்று ஏதாவது போடப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை. வடக்கு மண்டல ஐடியாக்கள் இருந்த அஸ்ராகார்க் மத்திய அரசு பணிக்கு சென்று விட்டதால் இதுபோன்ற கருப்பு ஆடுகள் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டது. இதே நாகராஜன் முன்னாள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பிரவேஷ்குமார் மீது புகார் அளித்தார். விசாரணை நடத்திய காவல் துறை உயரதிகாரிகள் நாகராஜன் மூக்கை அறுத்தது குறிப்பிடத்தக்கது. நாகராஜன் ஒரு காவல் ஆய்வாளர் போல நடந்து கொள்ளாமல் விபச்சார புரோக்கர்களிடம் இணக்கம் காட்டுகிறார், பரஸ்பரம் காட்டுகிறார், நெருங்கி பழகுகிறார். மதிய வேளைகளில் தங்கும் விடுதிகளில் இவர் ஓய்வெடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதில் பல சந்தேகங்கள் இருப்பதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் இதை ஒரு புகாராகவே நீண்ட காலமாக கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையின் நற்பெயருக்கு இவர் களங்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகின்றனர். இவர் காவல் துறை அதிகாரி போல் அல்லாமல் அனைவரையும் மிரட்டி வசூல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இருசக்கர வாகன சோதனை கூட மிரட்டி பணம் வசூல் செய்வதை வழக்கமாக மாற்றி விட்டார் இந்த பஞ்சமாபாதகன் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர் காவல் துறையில் ஒரு வித்தியாசமான அதிகாரி என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இவரால் விசாரணை செய்ய முடியாத வழக்குகள் மற்றும் இவருக்கு விரும்பத்தகாதவர்கள் என்று அறிய வந்தால் அவர்கள் கொடுப்பது பொய் புகார் இது பொய் வழக்கு என்று சொல்லிவிட்டு இவர் நழுவி விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதை சீர்தூக்கிப் பார்த்து காவல்துறை தலைவர் ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்களும், இந்த பகுதி வாழ் மக்களும். தமிழக காவல்துறை தலைவர் அரியூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் மீது சாட்டையை சுழற்றுவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Leave a Reply