தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசியக் கீதத்திற்கு அவமரியாதை: விசாரணை கோரி, ஜனாதிபதி, பிரதமர் தமிழகமுதல்வர் உள்ளிட்டோருக்கு சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புக்கள் மனு!கோவை, ஆக., 14-அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசியக் கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிவசேனா கட்சியின் தமிழ்நாடு இளைஞரணி மாநிலத் தலைவர் அட்சய திருமுருக தினேஷ், இந்திய ஜனாதிபதி, பிரதமர் தமிழகமுதல்வர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பியுள்ளார்.அதில், சென்னை ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் தமிழகச் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்பாகக் கிறிஸ்தவப் பாடல் பாடப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது.இது தொடர்பாகப் விளக்கமளித்த அமைச்சர் ராஜேந்திரன், இக்கல்லூரி ஒரு கிறிஸ்தவக் கல்வி மையம் என்பதால் முதலில் பிரார்த்தனை செய்ததாகவும், பொது நிறுவனங்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மட்டுமே தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், இச்சம்பவம் குறித்துத் தனி விசாரணை நடத்தி, அரசு விதிமுறைகள் மற்றும் தேசிய கௌரவச் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனச் சிவசேனா கட்சி சார்பில் இந்திய ஜனாதிபதி, பிரதமர் தமிழகமுதல்வர் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும், எதிர்காலத்தில் அனைத்து அரசு மற்றும் பொது விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியக் கீதம் மற்றும் தேசியப் பாடலுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதை உறுதி செய்யத் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இதேபோல் இந்து மக்கள் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் சூர்யா, பாரத் சேனா, சக்தி சேனா ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகளும் தனித்தனியாக மனு அனுப்பியுள்ளது குறிப்பிட தக்கதுபடம் இணைக்கப்பட்டுள்ளது 0005தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசியக் கீதத்திற்கு அவமரியாதைக்கு விசாரணை கோரி, இந்திய ஜனாதிபதி, பிரதமர் தமிழகமுதல்வர் உள்ளிட்டோருக்கு சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புக்கள் சார்பில் தபால் மூலம் மனுப்பியவர்கள்
Leave a Reply