பன்றி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் பலி!வேலூர், ஆக. 14-பொன்னை அருகே இருசக்கர வாகனத்தின் குறுக்கே பன்றி வந்ததால் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.வேலூர் மாவட்டம்,காட்பாடி தாலுகா K.N. பாளையத்தைச் சேர்ந்தவர் துரை. இவரது மகள் தவமணி (24). இவர் ராணிப்பேட்டை மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் உள்ள ‘Fun School’ என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இவருடன் ராணிப்பேட்டை, நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 11.08.2026 அன்று காலை தட்சிணாமூர்த்தி தனது இருசக்கர வாகனத்தில் தவமணியை அழைத்துக் கொண்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். வாகனம் பொன்னை – சித்தூர் சாலை சீனிவாசபுரம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகச் சாலையின் குறுக்கே பன்றி ஒன்று ஓடி வந்துள்ளது.பன்றி குறுக்கே வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தட்சிணாமூர்த்தி வாகனத்தை பன்றியின் மீது மோதி கீழே விழுந்தார். இதில் பின்னால் அமர்ந்திருந்த தவமணி சாலையில் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் அவரது பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள CMC மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தவமணி சிகிச்சை பலனின்றி 13ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து பொன்னை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.