திருவலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பல்வேறு முறைகேடுகள் எதிரொலி: மாவட்ட வழங்கல் அலுவலர் திடீர் ஆய்வு!வேலூர், ஆக. 13-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு அமைந்துள்ளது. இங்கிருந்து காட்பாடி மற்றும் கே. வி .குப்பம் தாலுகாக்களுக்கு அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. அப்படி அனுப்பி வைக்கப்படும் பொருள்களில் எடை குறைவு, பொருட்கள் சேதம், மழையில் நனைந்து துர்நாற்றம் வீசுதல் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை ரேஷன் கடை ஊழியர்கள் வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் கவனத்திற்கு அவ்வப்போது தெரிவித்த வண்ணம் உள்ளனர். இப்படி சேதமடைந்த பொருள்கள் மற்றும் துர்நாற்றம் வீசும் பொருட்கள் மற்றும் எடை குறைவாக உள்ள பொருட்கள் ஆகியவற்றை மீண்டும் திருவலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கிற்கு கொண்டு வந்து ஒப்படைத்து விட்டு மீண்டும் வேறு பொருட்களை அவர்கள் கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் பணியாற்றும் சூப்பர்வைசர் பணியாளர்களுக்கு இடையில் இதனால் கடும் விவாதங்கள், வாக்குவாதங்கள் மற்றும் சண்டை போக்கு தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை தினசரி ஒரு அன்றாட நிகழ்வாக மாறிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி மலர்ந்த நிலையில் இந்த அசாதாரண சூழ்நிலை ரேஷன் கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு மேலாளர்களுக்கும் இடையில் ஒரு பனிப்போராக தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் தரும் புகார்களின் அடிப்படையில் வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் 12 .8 .2026 புதன்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் திருவளத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார். அவர் அங்குள்ள இருப்பு மற்றும் உணவுப் பொருட்களின் தரம் மழையில் ஏதாவது நனைந்து துர்நாற்றம் வீசுகின்றதா எடை பொட்டலங்கள் சரியான எண்ணிக்கையில் ழழ செய்யப்படுகிறசன்ர்தா? உள்ளிட்ட பல்வேறு கள ஆய்வுப் பணிகளை நேரில் ஆராய்ந்து பார்த்துவிட்டு பின்னர் அங்குள்ள் கோப்புகளையும் சரி பார்க்கும் பணியில் அவர் ஈடுபட்டார் அப்போதும் இந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் பாதுகாவலராக பணியில் உள்ளவர்கள் முதல் இரண்டு சூப்பிரஸ்வங் இரண்டு ஆண்டுகளான செல்வம் மற்றும் சரவணன் ஆகியோர் மற்றும் பணியாளர்கள் மற்றும் லோடுமேன்கள் என அனைவரும் தங்களுக்கு நிகர் யாருமில்லை என்பது போல நெஞ்சம் நிமிர்த்திக் கொண்டு யாரையும் மதிக்காமல் தெனாவட்டாக நடந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது .எங்களை யாரும் ஒன்றும் செய்ய இயலாது என்ற ரீதியில் அவர்கள் நடந்து கொண்டது மற்றும் அவர்களது நடவடிக்கை வெட்கக்கேடானது வேதனைக்குரியதாகும் என்று மாவட்ட வழங்கள் அலுவலர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திருவலம் குடோனிலிருந்து கொண்டு செல்லப்படும் அரிசி பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களில் எடை குறைவு மற்றும் மழையில் நனைந்து துர்நாற்றம் வீசுவது தொடர்கதையாகவே மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது பல ரேஷன் கடை விற்பனையாளர்கள் பாடடைந்த பழுதடைந்த மொட்டைகளை திரும்பக் கொண்டு வந்து மாற்றிக் சென்ற வண்ணம் உள்ளனர் சிலர் தனது கடைக்கு வந்த அத்தியாவசிய பொருட்களை எந்த நிலையில் இருந்தாலும் அதை அப்படியே நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் இந்த நிலை மாற வேண்டும் குறிப்பாக இந்த சூப்பர் நண்டுகளாக பணிபுரியும் தெருவிளத்தில் உள்ள செல்வம் மற்றும் சரவணன் ஆகியவர் மீது துரை ரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோர்களும் ஒட்டுமொத்த கோரிக்கையாக அரசின் கவனத்திற்கு முன் வைத்துள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது வேலூர் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட வளங்கள் அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை அமைச்சரும் இதுபோன்ற கிடங்குகள் மீது ஒரு கண் வைத்து உன்னிப்பாக கவனித்து பொதுமக்களுக்கு முறையாக தரமாக கிடைக்க வேண்டிய பொருள்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக மாறி உள்ளது தொடர்ந்து தரமான பொருட்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 12ஆம் தேதி மாவட்ட வளங்கள் அலுவலர் கள ஆய்வு மேற்கொண்டார் 11 .8.2026 செவ்வாய்க்கிழமை சங்கங்களின் சார்பதிவாளர் கோபிநாத் இதய திருவலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது..