கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் SMT கவிதா கல்யாண சுந்தரத்தை ஆதரித்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மேட்டுப்பாளையம் தாலுகாசி.ஐ.டி.யு பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பாக சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தனர் இதில் சிஐடியு தாலுகா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பாஷா மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேட்டுப்பாளையம் தாலுகா சட்டமன்ற கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வெற்றி வேட்பாளர் SMT கவிதா கல்யாண சுந்தரத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதையொட்டி, 149-அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பபதிவு பணிகளில் ஈடுபடவுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்பாடுகள், வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதை 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரியங்கா சிங்லா, இ.ஆ.ப., அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் ஓம் பிரகாஷ் திரிபாதி, இ.கா.ப, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபடவுள்ள அரசு அலுவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவுகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

வேலூர் சிஎம்சி மருத்துவமனை இயக்குனநராக பொறுப்பேற்றுள்ள பிஜூஜார்ஜூக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து!வேலூர், ஏப். 15-தமிழ் புத்தாண்டு அன்று 14.4.26 செவ்வாய்க்கிழமை வேலூர் சி.எம்.சி.,மருத்துவமனையின் இயக்குநராக பொறுப்பேற்றுள்ள டாக்டர்.பிஜூஜார்ஜை டாக்டர் ஐடாஸ்கடர் அன்புக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் சந்தித்து சால்வை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்தநிகழ்ச்சியில் அறக்கட்டளை செயலாளர் ஐடா ஜி.தவசீலன், பொருளாளர் ஆர்.தேவபிரகாசம், துணைத் தலைவர் பி.ரவிக்குமார், இணைச் செயலாளர் பேராசிரியர் பி.சி.இரத்தினம், செயற்குழு உறுப்பினர் எஸ்.மகிமைரூபஸ், சமூக ஆர்வலர் பாடிபில்டர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மரியாதையை ஏற்றுக் கொண்டு சி எம் சி இயக்குநர் டாக்டர் பிஜூஜார்ஜ் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிஎம்சி மருத்துவமனையின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜாஸ்பர் செய்திருந்தார்.

அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்!வேலூர்,ஏப்.15-வேலூருக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு காட்பாடி அடுத்த விருதம்பட்டில் அமைந்துள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் முன்னிலையில் இந்த மலர் மாலை அணிவித்து அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார் தமிழக முதல்வர். இந்த நிகழ்வில் வேலூர் தொகுதி எம்பி கதிர் ஆனந்த், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவும், திமுக மாவட்ட செயலாளருமான நந்தகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பாளர் நீல. சந்திரகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் பிலிப் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வேலூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். ஆர்.கே.அப்பு இளைஞர்களுடன் விளையாடி வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப். 16-வேலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக எஸ். ஆர். கே. அப்பு களம் இறங்கியுள்ளார். இவர் தற்போது சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். குறிப்பாக வழியில் காண்போரை எல்லாம் வணங்கி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு பணிவுடன் கேட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திமுகவின் வாக்குறுதிகள் காற்றிலே பறக்க விடப்பட்டதை விளக்கிக் கூறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அதிமுக வேட்பாளர் எஸ். ஆர். கே. அப்பு. இதில் வாக்கு சேகரிக்கும் போது புதிய நடைமுறையை புகுத்தி இளைஞர்களுடன் கேரம் போர்டு, கிரிக்கெட், பேட்மிட்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடி அவர்களை மகிழ்வித்து இளைஞர்களின் வாக்குகளை கவர்ந்து வருகிறார் எஸ். ஆர். கே. அப்பு என்று சொன்னால் அது மிகையாகாது. வேலூரில் நூதன முறையில் இளைஞர்களிடம், அதாவது அவர்களுடன் சேர்ந்து விளையாடி வாக்கு சேகரித்தது வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. எளிமையுடனும், நட்புடனும் பழகி வருவது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வேலூர் தொகுதியில் அதிமுகவின் கை ஒரு படி ஓங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நூதன வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப். 16-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி மற்றும் திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆசி பெற்ற அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேட்பாளர், வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்தகுமார், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம், கந்தனேரி ஊராட்சி கிராமத்தில்திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்து கூறி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் ஒன்றிய செயலாளர் கோ.குமரபாண்டியன், திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.