
வேலூர் மாவட்ட ஆட்சியர் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை!வேலூர்,ஏப்.15-வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்துக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு இந்நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.










Leave a Reply