அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதையொட்டி, 149-அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பபதிவு பணிகளில் ஈடுபடவுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்பாடுகள், வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதை 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரியங்கா சிங்லா, இ.ஆ.ப., அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் ஓம் பிரகாஷ் திரிபாதி, இ.கா.ப, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபடவுள்ள அரசு அலுவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவுகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.