Archives
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Month:
April 2026
பேரணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1361 மது பாட்டில்கள் பறிமுதல்!வேலூர்,ஏப்.18-வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மூன்று நாட்கள் அரசு மதுபான கடைகளான டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பேரணாம்பட்டு அருகே மத்தூர் பகுதியில் அரசு மதுபான பாட்டில்களை அதிகளவில் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக ரகசிய தகவல்கள் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மத்தூர் பகுதியில் வேளாங்கண்ணி என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1361 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வேளாங்கண்ணி, குபேந்திரன், யசோதா ஆகிய மூன்று பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1361 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ளபேருந்து நிலையத்தில் சரியான பராமரிப்பு இல்லாமலும் அன்றாடம் பொது மக்கள் பயணம் செய்ய கூடிய சிறுவர் சிறுமியர் மற்றும் பெரியவர்கள் சாப்பிடக்கூடியதேநீர் கடை பழச்சாரு கடை மற்றும் சிற்றுண்டி உணவகம் உள்ள இடத்தில் சரியான படி உணவுகள் ஆயத்தமாக்கப் படுகிறதா பராமரிக்க படுகிறதா என்று பார்த்தால் கேள்வி குறிதான் காரணம் ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள உணவு கடைகளில் வெளியே மக்கள் பார்வையில் சாப்பிடும் உணவை அழகுக்கு வைத்து அதேயே எடுத்து சாப்பிடும் மக்களுக்கு உணவு கொடுப்பது மக்களிடையே முகச்சுழிப்பு உண்டாக்குகிறது மேலும் அந்த உணவு கடைக்கி அருகாமையில் கழிவு நீர் வெளிவருவது குப்பைகள் கொட்டப்படுவது அவசரத்திற்க்கு ஆண்கள் சிறுவர்கள் சிறுநீர் கழிப்பதும் வழக்கமாக உள்ளதுஇதனால் சிறுவர் சிறுமியார் ஆண்கள் பெண்கள் கர்ப்பிணி பெண்கள் வயதானவர்களுக்கு எல்லாம் நோய் தொற்று உண்டாகும் எனவே இதை குறித்து ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு முடிவு.
காட்பாடி தொகுதி விருதம்பட்டில் அதிமுக வேட்பாளர் ராமு வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப். 18-வேலூர் மாவட்டம் ,காட்பாடி சட்டமன்ற தொகுதியில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளராக ராமுவும், திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் களம் இறங்கியுள்ளனர். இதில் இவர்கள் இருவருக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. மற்ற அனைத்து வேட்பாளர்களும் இருக்கும் இடம் தெரியாமல் போயுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் இருமுனைப் போட்டி நிலவுவதால் வாக்காளர்கள் தெளிவாக இம்முறை வாக்களிக்க தயாராகி வருகின்றனர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தொடர்ந்து இந்த தொகுதியில் வெற்றி வாகை சூடி வருகிறார். கடந்த முறை சொற்ப வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ராமு தோல்வியை தழுவினர். ஆனால் இம்முறை ராமு பொதுமக்களை நேரடியாக சந்தித்து தனக்கு வாக்களிக்குமாறு வேண்டி கேட்டுக்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் காட்பாடி விருதம் பட்டு பகுதியில் வீதி வீதியாகச் சென்று அதிமுக வேட்பாளர் ராமு வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிக்கும் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
வேலூர் பலவன்சாத்துகுப்பத்தில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப். 17-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி மற்றும் திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆசி பெற்ற அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேட்பாளர், வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்தகுமார், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அல்லாபுரம் பகுதி எழில் நகர் ஏரிக்கரை பகுதியில்திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் பகுதி செயலாளர் சி. எம்.தங்கதுரை திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
வாக்காளர்களுக்கு UPI மூலம் பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை: வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!வேலூர், ஏப். 17-தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதைத் தடுக்க, ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை பொது முகப்பு (UPI) மூலம் நடைபெறும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கத் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் மூலம் நாள் தோறும் நடைபெறும் UPI பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு அதுகுறித்த அறிக்கைகள் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் செலவினப் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.ஒரே கணக்கிலிருந்து பலருக்கு UPI மூலம் பணம் அனுப்பப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், பணம் பெற்றவர்கள் மீதும் தேர்தல் விதிமுறைகளின்படி நடவடிக்கை பாயும். வாக்காளர்களுக்கு லஞ்சம் அளிப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 123(1)-இன் கீழ் ஊழல் நடைமுறையாகவும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023, பிரிவு 169-இன் கீழ் தேர்தல் குற்றமாகவும் கருதப்படுகிறது.தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் வேளையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கவோ அல்லது வாக்காளர்கள் பணம் பெறவோ கூடாது என்று ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
நான் யாரிடமாவது லஞ்சம் வாங்கினேன் என நிரூபித்தால் நெருப்பில் குதித்து விடுகிறேன் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சுவேலூர், ஏப்.17-வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் துரைமுருகன் போட்டியிடுகிறார். அவர் காட்பாடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் .தற்போது அவர் பொதுமக்களிடையே பேசுகையில்: நான் யாரிடமாவது ரூ.1 லஞ்சம் வாங்கினேன் என நிரூபித்தால் நெருப்பில் குதித்து விடுகிறேன். அதேபோன்று நான் ஒழுக்கம் இல்லாதவன் பெண்களுடன் சுற்றித்திரிந்தேன் என்று கூறினால் தூக்கில் தொங்கி விடுகிறேன் என்று கூறினார். இந்த முறை நீங்கள் வழக்கம் போல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கேட்டு பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தின் போது திமுகவின் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றனர்.
எலுமிச்சம் பழம் விலை கடும் உயர்வு :வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி!
அரியலூர் மாவட்டம், 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 150- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் கைலாஷ் வான்கடே, இ.ஆ.ப., மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் / உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் மனோகரன் ஆகியோர் தலைமையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் இரண்டாம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி முடிவுற்றது.
16.04.2026 இன்று(வியாழன்) பாராளுமன்றத்தில் தொகுதி வரையரை மசோதா தாக்கல் செய்வதை கைவிட்டு மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மசோதாவை திருத்தி தாக்கல் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரிய நாயக்கன் பாளையம் பகுதி கிளைகளின் சார்பாக கறுப்புக்கொடி ஏந்தப்பட்டது.
1
…
6
7
8
…
14
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.