காட்பாடி தொகுதி விருதம்பட்டில் அதிமுக வேட்பாளர் ராமு வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப். 18-வேலூர் மாவட்டம் ,காட்பாடி சட்டமன்ற தொகுதியில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளராக ராமுவும், திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் களம் இறங்கியுள்ளனர். இதில் இவர்கள் இருவருக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. மற்ற அனைத்து வேட்பாளர்களும் இருக்கும் இடம் தெரியாமல் போயுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் இருமுனைப் போட்டி நிலவுவதால் வாக்காளர்கள் தெளிவாக இம்முறை வாக்களிக்க தயாராகி வருகின்றனர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தொடர்ந்து இந்த தொகுதியில் வெற்றி வாகை சூடி வருகிறார். கடந்த முறை சொற்ப வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ராமு தோல்வியை தழுவினர். ஆனால் இம்முறை ராமு பொதுமக்களை நேரடியாக சந்தித்து தனக்கு வாக்களிக்குமாறு வேண்டி கேட்டுக்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் காட்பாடி விருதம் பட்டு பகுதியில் வீதி வீதியாகச் சென்று அதிமுக வேட்பாளர் ராமு வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிக்கும் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.