நான் யாரிடமாவது லஞ்சம் வாங்கினேன் என நிரூபித்தால் நெருப்பில் குதித்து விடுகிறேன் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சுவேலூர், ஏப்.17-வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் துரைமுருகன் போட்டியிடுகிறார். அவர் காட்பாடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் .தற்போது அவர் பொதுமக்களிடையே பேசுகையில்: நான் யாரிடமாவது ரூ.1 லஞ்சம் வாங்கினேன் என நிரூபித்தால் நெருப்பில் குதித்து விடுகிறேன். அதேபோன்று நான் ஒழுக்கம் இல்லாதவன் பெண்களுடன் சுற்றித்திரிந்தேன் என்று கூறினால் தூக்கில் தொங்கி விடுகிறேன் என்று கூறினார். இந்த முறை நீங்கள் வழக்கம் போல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கேட்டு பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தின் போது திமுகவின் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றனர்.