காட்பாடி ஆக்சிலியம் கல்லூரியில் முத்தமிழ் விழா கோலாகல கொண்டாட்டம்!வேலூர், ஜூலை 24-வேலூர் மாவட்டம்,காட்பாடி காந்தி நகரிலுள்ளஆக்சிலியம் மகளிர் கல்லூரியில்,முத்தமிழ் விழாவின் நிறைவு நாள் விழா நடைபெற்றது.அதில்,மாணவிகளுக்கிடையேஉரியடி, கயிறு இழுத்தல், மெதுவாக மிதிவண்டி ஓட்டும் போட்டி, பல்லாங்குழி,பம்பரம், கோணிப்பை ஓட்டம், குடுவையில் நீர் நிரப்புதல்போன்ற பலவகையான தமிழ் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும், கோலாட்டம், ஒயிலாட்டம் கரகாட்டம், கும்மியடித்தல் போன்ற பாரம்பரிய நடன போட்டிகளும் நடத்தப்பட்டது.மேலும், தமிழ் பாரம்பரியஉடையணியவும், உணவு உண்ணவும் மாணவிகளுக்குவலியுறுத்தப்பட்டது.இவ்விழாவில் கல்லூரி செயல் முனைவர். ஆ.மேரி ஜோஸ்பின் ராணி கருத்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர். முனைவர். அ.ஆரோக்கிய ஜெய்சீலி வாழ்த்துரை வழங்கினார்.துணை முதல்வர்.முனைவர் அ.அமலா வளர்மதி, துணை முதல்வர்.முனைவர்.க.அபிபியூலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ் துறை தலைவர். முனைவர். கோ.செந்தில் செல்வி, தமிழ் துறை மற்றும் பேராசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.மேலும், அக்கல்லூரி மாணவிகளும், ஆசிரியர்களும்கலந்து கொண்டு நிகழ்ச்சியைசிறப்பித்தனர்.’அலைப்பேசியை விடுப்போம் பாரம்பரியத்தை கையில் எடுப்போம்!’- என்ற வாசக தோரணத்துடன் விழாக்களம் கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்ததுபார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

காட்பாடி ஆக்சிலியம் கல்லூரியில் முத்தமிழ் விழா கோலாகல கொண்டாட்டம்!வேலூர், ஜூலை 24-வேலூர் மாவட்டம்,காட்பாடி காந்தி நகரிலுள்ளஆக்சிலியம் மகளிர் கல்லூரியில்,முத்தமிழ் விழாவின் நிறைவு நாள் விழா நடைபெற்றது.அதில்,மாணவிகளுக்கிடையேஉரியடி, கயிறு இழுத்தல், மெதுவாக மிதிவண்டி ஓட்டும் போட்டி, பல்லாங்குழி,பம்பரம், கோணிப்பை ஓட்டம், குடுவையில் நீர் நிரப்புதல்போன்ற பலவகையான தமிழ் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும், கோலாட்டம், ஒயிலாட்டம் கரகாட்டம், கும்மியடித்தல் போன்ற பாரம்பரிய நடன போட்டிகளும் நடத்தப்பட்டது.மேலும், தமிழ் பாரம்பரியஉடையணியவும், உணவு உண்ணவும் மாணவிகளுக்குவலியுறுத்தப்பட்டது.இவ்விழாவில் கல்லூரி செயல் முனைவர். ஆ.மேரி ஜோஸ்பின் ராணி கருத்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர். முனைவர். அ.ஆரோக்கிய ஜெய்சீலி வாழ்த்துரை வழங்கினார்.துணை முதல்வர்.முனைவர் அ.அமலா வளர்மதி, துணை முதல்வர்.முனைவர்.க.அபிபியூலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ் துறை தலைவர். முனைவர். கோ.செந்தில் செல்வி, தமிழ் துறை மற்றும் பேராசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.மேலும், அக்கல்லூரி மாணவிகளும், ஆசிரியர்களும்கலந்து கொண்டு நிகழ்ச்சியைசிறப்பித்தனர்.’அலைப்பேசியை விடுப்போம் பாரம்பரியத்தை கையில் எடுப்போம்!’- என்ற வாசக தோரணத்துடன் விழாக்களம் கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்ததுபார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

பட்டப்பகலில் செம்பராயநல்லூர் ஏரியில் மொரம்பு மண் கடத்தல்!வேலூர், ஜூலை 22-வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சமத்துவபுரம் எதிரில் உள்ள செம்பராயநல்லூர் ஏரியில் கடந்த 16.7,2026 அன்று மொரம்பு மண் பட்டப் பகலில் மண் மாஃபியாக்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். இதுதொடர்பாக திருவலம் வருவாய் ஆய்வாளர் ராம்குமாரிடம் கேட்ட போது நானும் தாசில்தாரும் நேரில் சென்று ஆய்வு செய்தோம் என்று கூறினார். அதன் பிறகு தொலைபேசி வாயிலாக கேட்டபோது எங்களுக்கு சரியாக தெரியவில்லை என்றும், நாங்கள் நேரில் சென்று பார்க்கின்றோம் என்றும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுகிறார். இதில் எது உண்மை என்று தெரியவில்லை. இதை சம்பந்தப்பட்ட கனிம வள அலுவலர்கள் இந்த பகுதியில் நேரில் சென்று கள ஆய்வு செய்ய வேண்டும். அப்போது உண்மை வெட்ட வெளிச்சத்துக்கு வரும். இந்த மண் மாஃபியாக்கள் பின்புலமாக இருப்பது யார்? யார்?. இங்கு எடுக்கும் மொரம்பு மண் யாருக்கு சப்ளை செய்யப்படுகிறது என்ற விவரம் கிடைக்கவில்லை. யார் யாருக்கு இதில் பங்கு போகிறது என்று தெரியவில்லை. திரை மறைவில் என்ன நடக்கின்றது என்று புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறை வெளிக்கொண்டு வரவேண்டும். அப்போது தவறு செய்தவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும். இந்த மண் கடத்தலுக்கு துணை போன கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் திடீர் போர்க் கொடி தூக்கியுள்ள னர். தமிழ்நாடு அரசு மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குடியாத்தம் பிரம்மாஸ் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்று வழங்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட மாணவன் ஆட்சியரிடம் புகார்! வேலூர், ஜூலை 21-வேலூர் மாவட்டம், குடியாத்தம் அக்ராபவரம் புதுமனை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் லோகேஷ். இவர் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் குடியாத்தம் ஆர். எஸ். ரோட்டில் உள்ள பிரம்மாஸ் பள்ளியில் கடந்த ஆண்டு அதாவது 2025- 2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு ஆங்கில வழியில் பயின்று வந்தார். பள்ளியில் சேர கல்வி கட்டணம் ரூபாய் 50,000 செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளனர். இந்நிலையில் ரூபாய் 25 ஆயிரம் செலுத்தியுள்ளார் சதீஷ்குமார்.மீதி பணத்தை மூன்று மாதங்கள் கழித்து தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை வகுப்பில் சேர அனுமதி அளித்துள்ளனர். மூன்று மாதம் கழிந்த நிலையில் பின்பு செப்டம்பர் 2025 ஆம் ஆண்டு பள்ளியின் சேர்மன் செந்தில் மற்றும் அவரது மனைவி ஹேமா ஆகிய இருவரும் மீதி பணத்தை செலுத்த வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். அதற்கு நாங்கள் எனது அப்பாவிற்கு காரில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு கால் உடைந்து வீட்டில் உள்ளார். அவர் குணமடைந்த பிறகு இரண்டு மாதங்கள் கழித்து நவம்பர் 2025 ல் மீதி பணம் கட்டுகிறோம் என மாணவனின் தாய் கூறியுள்ளார். அதற்கு பள்ளியின் தாளாளர் ஹேமா லோகேஷை ஒருமையில் பேசி பணம் இல்லை என்றால் ஏன்டா பள்ளிக்கு வந்து உயிரை வாங்குகிறாய் சனியனே என பல மாணவர்கள் முன்பு லோகேஷை திட்டி அவமானப்படுத்தியுள்ளார். இந்நிலையில் மிகுந்த மன வேதனையோடு வீட்டிற்கு வந்து விட்டார் லோகேஷ். இதையடுத்து தனது தந்தையின் கால் உடைந்து வீட்டிலேயே உள்ளார். லோகேஷூம், அவரது தாயும் மேஸ்திரி கூலி வேலைக்குச் சென்று இரண்டு மாதமாக சேர்த்து வைத்து ரூபாய் 25,000ஐ எடுத்துக் கொண்டு போனதற்கு பள்ளியில் உனக்கு அனுமதி இல்லை, அடையாள அட்டை இல்லை, அரையாண்டு தேர்வுக்கும் உனக்கு அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டு ரூ.ஒரு லட்சத்து 19 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் என லோகேஷிடம் பள்ளியின் நிர்வாகி ஹேமா சொல்லி பள்ளிக்குள் செல்ல விடாமல் திருப்பி அனுப்பிவிட்டார். இதனால் கடந்த ஆண்டு பள்ளிக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து விட்டார் லோகேஷ். இந்நிலையில் அவரை தேர்வு எழுத கூட அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளி நிர்வாகமானது பல மாணவர்களை இப்படி அவர்களின் கல்வியை பாழ்படுத்தி அவர்களது வாழ்க்கையை சூனியம் ஆக்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. சரி எங்களது டிசி மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களையாவது திரும்ப வழங்குமாறு கேட்டும் அதற்கும் பள்ளி நிர்வாகம் தர மறுத்து இழுத்தடித்து வருகின்றது. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த லோகேஷ் தனது தந்தை சதீஷ்குமார் மற்றும் தாய் மற்றும் உறவினர்களுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸிடம் நேரில் சென்று புகார் மனுவை அளித்துள்ளார். இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ உரிய விசாரணை நடத்தி லோகேஷூக்கு சேர வேண்டிய மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை பெற்று தருவதாக உறுதி அளித்துள்ளார். இப்படி கல்வியை பாழ் செய்யும் கல்வி நிறுவனங்கள் மீது கல்வித் துறை உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாக மாறி உள்ளது. குறிப்பாக ஓராண்டு என்பது ஒரு வயது போகிறது, ஒரு கல்வியாண்டும் வீணாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு பிரம்மாஸ் பள்ளி நிர்வாகம் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மாணவன் லோகேஷ் குடும்பத்தினரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இதுபோன்று மற்ற எந்த மாணவ, மாணவிக்கும் இது போன்ற பாதிப்புகள் நடைபெறக்கூடாது என்பதற்காக இது ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்பதே அவர்களது ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. பிரம்மாஸ் பள்ளி மீது வேலூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசு கல்வித்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது நடவடிக்கையை அரசு எடுக்குமா? மாவட்ட நிர்வாகம் எடுக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அசனமாப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிசெய்யாறு ‘வி தி லீடர்ஸ்’ கட்சியினர் சப் – கலெக்டரிடம் புகார் மனு !செய்யாறு, ஜூலை 21 -செய்யாறு அடுத்த அசனமாப் பேட்டையில் பொதுமக்களுக்கும் – கிராம மக்களுக்கும் இடையூறாக இருந்து வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வி தி லீடர்ஸ் கட்சியினர் செய்யாறு சப் – கலெக்டரிடம் புகார் மனுவை கொடுத்தனர்.செய்யாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்டது ‘தி வி லீடர்ஸ்’ கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்களான வெங்கடேசன், ரமேஷ், சரவணன், சக்தி நாராயணன், அருள், ஏ.சி.கே.பிரபாகர் ஆகியோர் ஒன்றிணைந்து செய்யாறு சப் – கலெக்டர் அம்பிகா ஜெயினிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது;’செய்யாறு அடுத்த அசனமாப் பேட்டை கிராமம். இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி, காய்கனி, பழக்கடைகள் ஆகியவை இங்குள்ள அசனமாப் பேட்டை கூட்டு சாலையில் தினமும் 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்லும் பகுதியாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம், செய்யாறு, வேலூர், ஆற்காடு, கலவை ஆகிய வழித் தடங்களில் இயக்கப்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் மேற்கண்ட கூட்டுச் சாலையில் நின்று செல்கின்றன.இதனால், அசனமாப்பேட்டை கூட்டு சாலை எந்த நேரமும் ‘பிசியாகவே’ இருந்து வருகிறது. ஆரம்ப சுகாதாரத்திற்கு வரும் நோயாளிகள் பள்ளிக்கு செல்லும் மாணவ – மாணவிகள் இந்தக் கூட்டு சாடையை தான் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கூட்டு சாலையின் அருகிலேயே அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இரண்டு கட்டடங்களில் இயங்கி வரும் இந்த டாஸ்மாக் கடையில் நண்பகல் 12 மணி முதல் – இரவு வரை குடிமகன்கள் மது பாட்டிலை வாங்க முந்திச் செல்லும் நிலை தொடர்கிறது.இந்த குடிமகன்கள் அங்குள்ள நெடுஞ்சாலையின் அருகாமையிலும், புளிய மரத்தின் கீழே அமர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மதுவை அருந்துகின்றனர். பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் இந்த டாஸ்மாக் கடையை கடந்து செல்ல மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.போலீசாரும் இந்தப் பக்கம் வருவதே கிடையாது. எனவே, அசனமாப்பேட்டையில் பொது மக்களுக்கு இடையூறாக இருந்து வரும் டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்’ இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.’வி தி லீடர்ஸ்’ கட்சியைச் சேர்ந்த துளசி ராஜன், கோவிந்தராஜ், சந்திசேகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் மனு அளித்தவர் களுடன் உடனிருந்தனர்.

புதியதாக பொறுப்பேற்ற குடியாத்தம் கோட்டாட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த புதிய நீதி கட்சி நிர்வாகி எஸ்.ரமேஷ்!வேலூர்,ஜூலை 22-வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோட்டாட்சியராக புதியதாக பொறுப்பேற்றுள்ள செந்தில்குமாரை, புதிய நீதி கட்சி குடியாத்தம் நகர செயலாளரும், கைத்தறி காவலருமான எஸ். ரமேஷ் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி, மனமார்ந்த தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.அப்போது, புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு, குடியாத்தம் கோட்டத்திற்குட்பட்ட பொதுமக்களின் தேவைகளை விரைந்து நிறைவேற்றி, மக்கள் நலனுக்கான சிறந்த நிர்வாகத்தை வழங்க வேண்டும் என தனது வாழ்த்துகளையும், நல்வாழ்த்துகளையும், வேண்டுகோளையும் தெரிவித்தார்.புதிய பொறுப்பை ஏற்றுள்ள கோட்டாட்சியர் செந்தில்குமாருக்கு பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காமராஜரின் 124வது பிறந்த நாள் விழா மற்றும் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் இயக்க தொடக்க விழா பொதுக்கூட்டம்!வேலூர், ஜூலை 17-பெருந்தலைவர் காமராஜரின் 124 வது பிறந்த நாள் விழா மற்றும் “லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்” இயக்க தொடக்க விழா பொதுக்கூட்டம் (15.07.2026) புதன்கிழமை மாலை குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் நடைப்பெற்றது.நிகழ்விற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், தொண்டர்களின் தளபதி ப. மாணிக்கம் தாகூர் தலைமை தாங்கி விழாப் பேருரை நிகழ்த்தினார்.. மாவட்டத் தலைவர்கள் திருப்பத்தூர் விஜய் இளஞ்செழியன், வேலூர் மாநகரம் வாஹித் பாஷா, ராணிப்பேட்டை நரேஷ் குமார், திருவண்ணாமலை வடக்கு பொன்னையன், திருவண்ணாமலை தெற்கு குணசேகரன், கிருஷ்ணகிரி ரகு, வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.சுரேஷ்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.நிகழ்வில் உயர்கல்வித் துறை அமைச்சர் பி. விஸ்வநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ். ராஜேஷ் குமார், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய். வசந்த் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள், துணை அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் விழா ஒருங்கிணைப்பாளர் செங்கம் ஜி.குமார் நன்றியுரை ஆற்றினார்.நிகழ்வில் குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் டாக்டர். நவீன் பிரபு, லாலா லஜபதி, பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகிப் மற்றும்வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் M.வீராங்கன் ,S.சங்கர், P. செல்வக்குமார் ,D.ஜோதி கணேசன் ,S.K.தனசேகரன், G.ஆரோன், G.K.ஜகந்நாத ரெட்டி, A.N.சேகரன், C.K.நித்யானந்தம், K.விஜயகுமார், M.தாண்டவமூர்த்தி, பள்ளிகொண்டா பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் Z.சிக்கந்தர், வேலூர் மாநகர மண்டல தலைவர் அரியூர் சோமு, மாவட்ட பொருளாளர் A.இலியாஸ் பாஷா, மாவட்டத் துணைத் தலைவர்கள் M.R. தேவகிராணி ராஜேந்திரன், T.K.நீலகண்டன், G.விஜயேந்திரன், M.காமராஜ், B.குபேந்திரன், துரை.முருகேசன்,P.சேகரன், G.முஜாமில் அஹ்மத், மாவட்ட பொதுச் செயலாளர்கள் A.வாசு, செங்குட்டுவன், பாஸ்கரன், இர்ஷாத் அஹ்மத் சரவணன், தொழிலதிபர் பாரத் நவீன்குமார், அன்பரசி, உஷாராணி,மாவட்ட செயலாளர்கள் M.உவைஸ் அஹ்மத், S.தமிழரசன், K.E.சரத்சந்தர், M.விஜயகுமார், C.முனுசாமி, நூர் அலி. K.மாசிலாமணி, A.ராணி, K K.சத்தியமூர்த்தி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் NMD.விக்ரம், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கோமதி குமரேசன், மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் A.R. அன்பரசன், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் R.ராகேஷ், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவர் நவாலி தாஹீர், மாவட்ட RGPRS தலைவர் D.ஆனந்தவேல் மாவட்ட மனித உரிமை பிரிவு தலைவர் M.K.யுவராஜ், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் ஆம்புலன்ஸ் S.ராஜேஷ், மாவட்ட சமூக ஊடக பிரிவு தலைவர் A.நவீன்குமார், மாவட்ட நெசவாளரணி தலைவர் G.ஜெயவேலு, மாநில எஸ்ஸி பிரிவு பொதுச் செயலாளர்கள் சுப்பிரமணி, சுரேஷ், செயலாளர் காத்தவராயன், மாநில ஓபிசி பிரிவு துணைத் தலைவர் ஜலேந்திரன், பொதுச் செயலாளர் சுனில்மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 7000 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.