பயணிகள் நிழற்கூடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுவது எப்போது?வேலூர், ஜூலை 26-வேலூர் கிழக்கு மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதி த.வெ.க .கட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள பயணிகள் நிழற்கூடம் கடந்த 06. 09. 2019ல் துரைமுருகன் எம். எல். ஏ.வால் தொடங்கப்பட்டது. இந்த பயணிகள் நிழற்கூடம் தற்போது பயன்பாடு இல்லாமல் அசுத்தமான நிலையில் உருமாறி உள்ளது. மின்விசிறிகள் உண்டு. ஆனால் மின் இணைப்பு இல்லை. பயன்பாடு இல்லாத இந்த நிழற்கூடத்தை த.வெ.க.சட்டமன்ற உறுப்பினர் சுதாகர் கடந்த 3 மாதங்களாகியும் த.வெ.க. கட்சி அலுவலகம் எதிரே உள்ள இந்த கட்டடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கும் நிலையை கண்டறிந்தார். ஆதலால் குறிப்பாக இந்த பயணிகள் நிழற்கூடத்தை கண்டும் காணாமல் இருந்து வருகிறார். ரீல்ஸ் மோகத்தில் உள்ளார். ஏன் கோடையில் கடும் வெப்பத்தில் பயணிகள் மின் விசிறி இருந்தும் மின் இணைப்பு இல்லாமல் அவதியுடன் நாட்களை கழித்து வருகின்றனர். இந்த நிலையில் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் ஏனோ பாராமுகத்தில் உள்ளார் என பொதுமக்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். இந்த அலுவலகம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா? என்பது பொதுமக்களின் விடை தெரியாத கேள்வியாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வேலூரில் சன்பீம் சி.பி.எஸ்.இ., தொடக்கப் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா : டி.எஸ்.பி., விஜிகுமார் பரிசுகள் வழங்கி சிறப்புரை!!வேலூர், ஜூலை 27-வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கடலூர்–சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மெட்டுக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் சன்பீம் சி.பி.எஸ்.இ., தொடக்கப் பள்ளியின் 2026-ஆம் ஆண்டுக்கான ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தலைமை வகித்தார். அவர் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி வரவேற்புரையாற்றினார். பள்ளி மாணவர்கள் தலைவி ரித்திமா ரூஹல் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து, பள்ளியின் ஆண்டு விளையாட்டு அறிக்கை காணொளி வடிவில் திரையிடப்பட்டது.இதில் சிறப்பு விருந்தினராக காட்பாடி துணைக் காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) விஜிகுமார் கலந்து கொண்டார். அவருக்கு பள்ளியின் தாளாளர் தங்க பிரகாஷ் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். பின்னர், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற நேரு அணிக்கு கோப்பை வழங்கிய டி.எஸ்.பி. விஜிகுமார், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 250 மாணவ, மாணவிகளுக்கும், சிறப்பாகப் பணியாற்றிய 13 ஆசிரியர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்து பாராட்டி கௌரவித்தனர். இதன் தொடர்ச்சியாக அவர் பேசியதாவது: “பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தேவையில்லாமல் கைப்பேசி பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்தாமல், விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர்களும் கைப்பேசி பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும். விளையாட்டு மட்டுமே குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம், மனவலிமை மற்றும் ஒழுக்கத்தை வளர்க்கும். குழந்தைகளின் தனித்திறமையை அறிந்து, அவர்களுக்கு ஏற்ற விளையாட்டில் ஈடுபடுத்துவது பெற்றோர்களின் முக்கியப் பொறுப்பாகும். மாணவர்களை திறமையான விளையாட்டு வீரர்களாக உருவாக்குவதில் உடற்கல்வி ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. மாணவர்களின் ஒழுக்கம், பண்பு மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் அவர்களின் சேவையை ஒருபோதும் மறக்கக் கூடாது,” என்றார். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்த ஆண்டு விளையாட்டு நிகழ்ச்சி விழாவில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இறுதியாக, பள்ளி மாணவர் தலைவர் ரோஹித் ராம் நன்றியுரையாற்ற ஆண்டு விளையாட்டு விழா நிறைவுபெற்றது.

காட்பாடியில் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம்!வேலூர், ஜூலை 27-வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பழைய காட்பாடி பாலாஜி நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில், புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நல மாநில சங்கத்தின் சார்பில் மாபெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது.இம்முகாமிற்கு மாநிலத் தலைவர் எம்.டி. வேல்முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில அமைப்புச் செயலாளரும், 6-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான கே.ஜி. சீனிவாசன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இம்முகாமில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், உறுப்பினர் அடையாள அட்டைகள் புதுப்பித்தல், புதிய தொழிலாளர்களை சங்கத்தில் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.‌ இதனைத்தொடர்ந்து, புதியதாக சங்கத்தில் இணைந்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவியாக இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியருடன்அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் கலந்துரையாடிய’காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சி!வேலூர், ஜூலை 25-வேலூர் மாவட்டம், பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் 2026-2027-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவ, மாணவியர் பிரதிநிதிக்கான தேர்தல்ஜூலை.18-அன்றுநடைபெற்றது.இத்தேர்தலில்தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும்மாணவ, மாணவிகள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து,பல்வேறு துறைகளுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்தனர்.தேர்ந்தெடுக்கப்பட்டமாணவ பிரதிநிதிகள் தமிழ்நாடு மாதிரி பள்ளியின்உறுப்பினர், செயலரின் செயல்முறைப்படி,ஜூலை.24 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்.பி.எஸ்.லீலா அலெக்ஸூடன்’காபி வித் கலெக்டர்!’- என்றநிகழ்ச்சியின் மூலம்கலந்துரையாடினர்.இக்கலந்துரையாடலின்போது மாவட்ட ஆட்சியர் பேசியதாவது,”மாணவ,மாணவிகள்போட்டித் தேர்வுகளை சந்திக்க தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.தமிழ்நாடு அரசு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தினசரி நாளிதழ்களை படிக்க வேண்டும். மாணவர்கள்சிறு சிறு குழுக்களாக தங்களுக்குள்ளேயேபோட்டித்தேர்வு நடத்திபொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.கணினி பயன்பாடு,செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் ஆக்கப்பூர்வமான,அறிவுப்பூர்வமான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.அதிக மனக்குழப்பங்களை தவிர்த்து,படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும்.உங்களது வெற்றியை மட்டும் நினைத்து முயற்சியுடன்நன்கு கவனமுடன் படிக்க வேண்டும். தினசரி நூலகம் சென்று நல்ல புத்தகங்களை படிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.நீங்களே சமுதாயத்தின் எதிர்காலம். அதனால் அதிக பொறுப்பும் உங்களுக்கு உண்டு. மாணவர்கள் தாங்கள் பயிலும்10,11,12 ஆகிய வகுப்பு பாடங்களில் கவனத்துடன் பயின்றால் மத்திய, மாநில அரசு நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க பயனுள்ளதாக இருக்கும். மேலும் மாணவர்களுக்குமிகப்பெரிய சொத்துகல்வி ஒன்று தான்.நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாதவற்றை தவிர்க்க வேண்டும்.உங்கள் பள்ளி அருகேபோதை இல்லாத பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.அனைத்து மாணவர்களும்100 சதவீத தேர்ச்சி பெற்று கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்தில் உயர்நிலையை அடைய வேண்டும்!” – எனஅறிவுரைகள் வழங்கினார்.இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா, பள்ளி தலைமையாசிரியர் ஏ.தமிழ்பிரியா, ஆங்கில ஆசிரியை எஸ்.ஸ்ரீதேவி,பள்ளி எப்ஐஎஸ்.,வெ.சவேதா,மற்றும் கி.வெங்கடேஷ்உட்பட பலர் உடனிருந்தனர்.