Archives
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Uncategorized
கந்துவட்டி விடும் தமிழ்நாடு அரசு மின்வாரிய ஊழியர் :வீடு புகுந்து ஆட்டோ தொழிலாளிக்கு கொலை மிரட்டல்!வேலூர், ஜூலை 6-வேலூரை சேர்ந்தவர் அருள் பிரகாசம். இவர் தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் உப தொழிலாக கந்துவட்டி விடும் தொழிலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு செல்வதை காட்டிலும் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து விட்டு அதை திரும்ப வசூல் செய்வதும், கொடுப்பதும்தான் இவரது 24 மணி நேர வேலையாக இருந்து வருகிறது. இவர் தொமுசவில் இருந்து கொண்டு திமுகவின் பெயரை தவறாக பயன்படுத்தி இவர் முறைகேடாக நடந்து வருவதாக பொதுமக்கள் தரப்பிலும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் கூறப்படுகிறது. இதே போன்று வேலூர் பிஷப் டேவிட் நகரைச் சேர்ந்த தேவசகாயம் என்பவருக்கு கந்துவட்டிக்கு ரூபாய் 5 ஆயிரத்தை கொடுத்துவிட்டு தற்போது ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்று அடாவடியாக அவரிடம் பணம் கேட்பது, தொந்தரவு செய்து வருவதுடன் அவரது வீட்டிற்கு மது போதையில் சென்று நள்ளிரவு 12 மணி அளவில் தகராறு செய்வது, நான் கதவை இழுத்துப் பூட்டி விட்டு சென்று விடுவேன் என்று அவருக்கு கொலை மிரட்டல் விடுப்பது என்று சில விருப்பத்தகாத செயல்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார. அவர் மது போதையில் செல்லும்போது தனக்கு துணையாக மூன்றிலிருந்து நான்கு பேர் வரை அடியாட்களை தன்னுடன் அழைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அவர் மீது ஏற்கனவே வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை வட்டாரம் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள சிவராமன் கந்துவட்டி கொடுமையில் இருந்து ஆட்டோ தொழிலாளியை காப்பாற்ற கடும் நடவடிக்கையை விரைந்து எடுக்க உத்தரவிட வேண்டும் என்பதே தேவசகாயம் குடும்பத்தினரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் முதியவர்கள் மற்றும் பெண்கள், இளம் பெண்கள் உள்ள வீட்டிற்கு வந்து அந்த வீட்டின் கதவைத் தட்டி இவ்வாறு ரகளையில் ஈடுபடுவதை தொடர்ந்து வழக்கமாக வைத்துள்ளார் இந்த அருள் பிரகாசம். அத்துடன் இல்லாமல் ஒரு படி மேலே சென்று மதுபோதையில் இருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். குறிப்பாக சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தேவசகாயம் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த கொடூர தாக்குதலுக்கு பின்புலமாக கிருஷ்ணமூர்த்தி செயல்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆட்டோ ஓட்டுநராக சித்தேரி மற்றும் பாகாயம் பகுதியில் வேலை செய்து வருகிறார். இவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் விட்டுவி ட்டது. இதற்கு அடிப்படை காரணம் என்றும் கூறப்படுகிறது .தட்டிகேட்டால் இப்படி அடியாட்களை ஏவி விட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு வழக்கின் பின்னணியில் பல்வேறு முன்விரோத செயல்கள் பின்புலமாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது .காவல்துறை இதுபோன்ற கந்துவட்டிக்காரர்களை கைது செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பகது வெட்கக்கேடான விஷயமாக உள்ளது பொதுமக்களுக்கு உதவ வேண்டியவர்கள் இது போன்ற கட்டப்பஞ்சாயத்தை செய்பவர் கந்துவட்டி விடுபவருக்கு நாசக்கரம் நீட்டுகிறது இது மிகவும் நாட்டில் ஆபத்தான நிலைக்கு கொண்டு போய்விடும் என்பதும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் நிம்மதியாக வாழ விடாது என்பதும் குறிப்பிடத்தக்கது. நகரில் ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக வேலூர் தெற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து அருள் பிரகாசத்தை கைது செய்து உரிய விசாரணை நடத்தி அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் இவர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறி உள்ளது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமனின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆங்கிலேயர்களை அலறவிட்ட குடியாத்தத்தின் மறைக்கப்பட்ட மாவீரர் – தியாகி பாரத் ஆதிமூலம்!வேலூர், ஜூலை 6-இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றைப் பேசும்போது மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காமராஜர், ராஜாஜி, திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் போன்ற தலைவர்களின் பெயர்கள் முதலில் நினைவுக்கு வருகின்றன. ஆனால், தங்கள் ஊரிலேயே அமைதியாக வாழ்ந்து, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்து போராடிய எண்ணற்ற தியாகிகளின் வரலாறு இன்னும் முழுமையாக வெளிச்சத்துக்கு வரவில்லை. அத்தகைய மறைக்கப்பட்ட வீரர்களில் ஒருவர் குடியாத்தத்தைச் சேர்ந்த தியாகி பாரத் எம்.ஆதிமூலம்.ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் 1913-ஆம் ஆண்டு பிறந்த ஆதிமூலம், சிறு வயதிலேயே விடுதலை உணர்வால் ஈர்க்கப்பட்டார். தனது குடும்பம் நடத்திவந்த சாராய வியாபாரத்தை ஏற்க மறுத்த அவர், ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். சித்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞர்களை ஒருங்கிணைத்து, கள்ளுக்கடை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.ஆங்கிலேய அரசின் தகவல் தொடர்பை சீர்குலைக்கும் வகையில், தபால் மற்றும் தந்தி அலுவலகங்களின் தொலைபேசி கம்பிகளை இரவு நேரங்களில் துண்டித்த துணிச்சலான செயல்களிலும் அவர் பங்கேற்றார். இதனால் ஆங்கிலேய காவல்துறை அவரைத் தேடி பலமுறை வீட்டுக்கு வந்தபோதும், சாதுரியமாக தப்பித்து போராட்டத்தைத் தொடர்ந்தார்.பின்னர் பெங்களூருக்குச் சென்ற ஆதிமூலம், அங்கும் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். ஆங்கிலேய குதிரைப்படையினரை திணறடிக்கும் வகையில் சிறுதானியங்களை வீசி அவர்களின் நகர்வைத் தடுத்த சம்பவங்கள் அவரது துணிச்சலை வெளிப்படுத்துகின்றன. 1942-ஆம் ஆண்டு “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் பங்கேற்றதற்காக 16 மாதங்கள் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது பின்னாளில் கர்நாடக முதல்வராகவும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் உயர்ந்த நிஜலிங்கப்பாவுடன் சிறை வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டார்.பேட்மின்டன் போட்டியில் ஒரு ஆங்கிலேய அதிகாரியை வென்ற சம்பவமும் அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது. பின்னர் அந்த அதிகாரி உயர்பதவிக்கு வந்ததும், ஆதிமூலத்தை கர்நாடக மாநிலத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்ற உத்தரவிட்டதாக குடும்பத்தினர் நினைவுகூர்கின்றனர். இதனால் அவரது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.குடியாத்தத்தில் குடியேறிய பிறகும் அவர் ஓய்வெடுக்கவில்லை. சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டார். 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது குடியாத்தம் தென் இந்தியன் சில்க்ஸ் மில்ஸில் தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணியிலும் முக்கிய பங்காற்றினார்.சுதந்திரத்திற்குப் பிறகு அரசியலை அதிகாரத்திற்கான கருவியாக அல்ல, மக்களுக்கான சேவையாகவே ஆதிமூலம் கருதினார். பெருந்தலைவர் காமராஜரின் குடியாத்தம் இடைத்தேர்தல் வெற்றிக்காக உழைத்ததோடு, கல்வி, சமூகப்பணி, விவசாயம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார்.’பாரத் மெக்கானிக்கல் ஒர்க்ஸ்’ என்ற நிறுவனத்தை உருவாக்கி, கரும்பு ஆலை இயந்திரங்கள், விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களை உற்பத்தி செய்து, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு துணையாக இருந்தார். தொழிலாளர்களின் நலனிலும் அக்கறை கொண்டு, தொழிற்சங்கம் அமைப்பதற்கே அனுமதி அளித்த அவரது ஜனநாயக மனப்பான்மை அக்காலத்திலேயே முன்னோடியான சிந்தனையாக இருந்தது.பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்துதல், இலவச தொலைபேசி பயன்பாடு, அன்னதானம், மாணவர்களிடம் தேசப்பற்றை வளர்த்தல், கோயில் திருப்பணிகள், கல்வி நிறுவனங்களில் தேசியக் கொடியேற்றுதல் என மக்கள் சேவையை வாழ்வின் இறுதி வரை தொடர்ந்தார்.1991-ஆம் ஆண்டு அவர் மறைந்தபோதும், ஆயிரக்கணக்கான மக்கள் தன்னார்வமாக திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தியது, அவர் மக்களின் மனதில் பெற்றிருந்த இடத்தை எடுத்துக்காட்டுகிறது.இன்று சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய வரலாறு பேசப்படும் நிலையில், உள்ளூர் அளவில் போராடி, சிறை சென்றும், சொத்துகளை இழந்தும், தன்னலமின்றி வாழ்ந்த ஆதிமூலம் போன்ற வீரர்களின் வரலாறு புதிய தலைமுறைக்கு சென்றடைவது காலத்தின் தேவை.இந்த நோக்கத்திலேயே அவரது பேரனும் சமூக ஆர்வலருமான தி.நந்தகுமார், பல ஆண்டுகள் தகவல்களைத் திரட்டி “ஆங்கிலேயர்களை அலறவிட்ட தியாகி பாரத் ஆதிமூலம்” என்ற நூலை எழுதியுள்ளார். குடும்ப ஆவணங்கள், வரலாற்றுத் தகவல்கள், மூத்தோரின் நினைவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூல், ஒரு குடும்ப வரலாறு மட்டுமல்ல; மறக்கப்பட்ட ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் தியாகத்தை மீண்டும் சமூக நினைவில் பதியச் செய்யும் வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது.மறக்கப்பட்ட தியாகிகளை நினைவுகூர்வதும், அவர்களின் சேவையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும் நமது கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றும் முயற்சியாகவே இந்த நூல் அமைந்துள்ளது.
பொறுப்பேற்பு!வேலூர், ஜூலை 6-வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக பார்த்தசாரதி பொறுப்பேற்று கொண்டார்.
டெல்லியில் இருந்து பறந்து வேலூர் வந்த புறாவுக்கு பரிசு!வேலூர், ஜூலை 6-டெல்லியில் இருந்து பறந்து வேலூர் வந்த புறாவுக்கு பரிசளித்ததை பார்த்து மகிழ்ந்த புறா வளர்ப்பாளர்கள்.ஓமர் புறா ரேசில் திருச்சி மற்றும் டெல்லியில் இருந்து திறக்கப்பட்ட வேலூர் புறா பரிசு பெற்றது. வேலூர் மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் தண்டா என்கின்ற தண்டபாணி மற்றும் சீனிவாசன் ஆகியோர் புறாக்கள் வளர்க்கும் உரிமையாளர் முருகானந்தம் மற்றும் பாஸ்கரன் ஆகியோருக்கு கோப்பையை வழங்கி பாராட்டினர். இந்த நிகழ்வின் போது விழா நடத்துனர்களான செந்தில், விக்கி, விஜய், அர்ஜூன், காதர், தாது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சமயநல்லூரில்_________மு.தங்கத்துரைக்குபணி நிறைவு பாராட்டு விழா!
கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை மாற்றி ஒரிஜினலை அபேஸ் செய்து 3.50 கோடி ரூபாய் கபளீகரம்… 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்
குடியாத்தம் பிரம்மாஸ் வித்யாலயா பள்ளியிலிருந்து வெளியில் வந்து சாலையில் பைக்கில் சென்ற மாணவர் மீது கைப்பந்து விழுந்து படுகாயம்!வேலூர்,ஜூலை 5-வேலூர் மாவட்டம், குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை மல்லப்பன் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கஜேந்திரன். இவர் பிளஸ் டூ தேர்வு எழுத கடந்த 3ம் தேதி வேலூர் நகருக்கு சென்று விட்டு தேர்வு முடிந்ததும் மீண்டும் மோட்டார் பைக்கில் வீட்டுக்கு குடியாத்தம் நோக்கி திரும்பி கொண்டு இருந்தார். அப்போது பிற்பகல் சுமார் 2.30 மணி அளவில் குடியாத்தம் ரயில் நிலையம் மேம்பால இறக்கத்தில் வரும்போது எதிரில் உள்ள பிரம்மாஸ் வித்யாலயா பள்ளியில் இருந்து வெளியே வந்து கைப்பந்து ஒன்று விழுந்தது. அது கஜேந்திரன் வந்த மோட்டார் சைக்கிள் மீது சக்கரத்தில் விழுந்து சிக்கியது. இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கஜேந்திரனின் தந்தை முருகையன் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று தனது மகனை சேர்த்துள்ளார். இந்த குடியாத்தம் பிரம்மாஸ் வித்யாலயா பள்ளிக்கு என விளையாட்டு மைதானம் இல்லை என்று கூறப்படுகிறது. இதில் மாணவ, மாணவிகள் விளையாடினால் இப்படி கைப்பந்து மற்றும் கால்பந்து பள்ளியில் இருந்து வெளியில் வந்து சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் மீது விழுந்து விபத்துக்களை தொடர்ந்து ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஒரு நிரந்தர நடவடிக்கையை கல்வித்துறை மற்றும் காவல்துறை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் உரிய விசாரணை நடத்தி பொதுமக்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் நிகழாத வண்ணம் வழிவகை செய்து தர வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.விலை மதிப்பில்லாத மனித உயிர்களை இந்த பிரம்மாஸ் வித்யாலயா பள்ளி காவு வாங்குவதற்குள் ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ,வாகன ஓட்டிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இது பொதுமக்களின் நலன் கருதி மட்டுமே இந்த செய்தி வெளியிடப்படுகிறதே தவிர எந்த காழ்ப்புணர்ச்சியும், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் இந்த செய்தி வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளிக்கென தனியாக விளையாட்டு மைதானத்தை ஏற்படுத்தி ஒதுக்குப்புறமாக வைத்து விளையாட வழிவகை செய்ய வேண்டும் என்று ஒற்றை கோரிக்கையை குடியாத்தம் பகுதி மக்கள் விடுத்துள்ளனர் .தற்போது இந்த விபத்து குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் முருகன் தனது மகன் விபத்தில் சிக்கியது எப்படி என்று புகார் மனுவை முறைப்படி கொடுத்துள்ளார். இந்த புகார் மனுவின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குடியாத்தம் நகர காவல் துறை உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமா? அல்லது இந்த புகார் மனுவை உதாசீனப்படுத்தி கண்டும் காணாமல் விட்டுவிடுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பள்ளிக்காக பொதுமக்கள் இல்லை, பொதுமக்களுக்காகத்தான் பள்ளி என்பதையும் இந்த பிரம்மாஸ் வித்யாலயா பள்ளி நிர்வாகம் உணர வேண்டும் என்பது இதன் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மற்றும் மாநில அரசு தணிக்கை துறைகளில் நிதி அமைச்சரின் உத்தரவை மதிக்காத தலைமை தணிக்கை இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநரை கண்டித்தும் தணிக்கையாளர்களின் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் உண்ணாவிரதப் போராட்டம்!வேலூர், ஜூலை 5-வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மற்றும் மாநில அரசு தணிக்கை துறைகளில் நிதி அமைச்சரின் உத்தரவை மதிக்காத தலைமை தணிக்க இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநரை கண்டித்தும் தணிக்கையாளர்களின் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாநில தலைவர் ஆர். பாபு தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சீனி. செந்தில், பொதுச்செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் ஆர். கோவிந்தராஜ் வரவேற்றார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து தொடங்கி வைத்தார். மாநில தலைவர் பா. ஐயப்பன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில தலைவர் மகேந்திர குமார் வாழ்த்து பேருரை வழங்கினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆய்வாளர் மன்ற மாநில துணைத்தலைவர் த.ஞானவேல், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் மா. விநாயகம், வேலூர் மாவட்ட தலைவர் ஆ .கோவிந்தராஜ், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் கி. ராஜேஷ், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் மு. அமாவாசை, விழுப்புரம் எஸ் .கோட்டீஸ்வரன், மாநில மகளிர் அணி செயலாளர் கே. லதா ,கடலூர் பி. இரா. ரேவதி மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த 15.4.2025 முதல் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மற்றும் மாநில அரசு தணிக்கை துறையில் அமல்படுத்தப்பட்ட சிஏ எம்எஸ் என்ற ஆன்லைன் தணிக்கை முறை மற்றும் தணிக்கை துறைகளில் நிலவும் நீண்ட கால இடர்பாடுகள் ரத்து செய்யப்பட வேண்டும். தமிழக நிதி அமைச்சரின் உத்தரவுக்கு மாறாக பெண்களுக்கு 100 கிலோ மீட்டர் தாண்டிய தொலைதூர தணிக்கை பணி வழங்குவது, மாற்றுத் திறனாளி தணிக்கையாளர்களுக்கு தணிக்கை பணி மறுப்பது, சொந்தக்காரண விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்புகளுக்கு அனுமதி மறுப்பதசி ஏ எம் எஸ் ரேண்டமை சேஷன் மாநில அளவில் பணித் திட்டம் ஒதுக்கீட்டில் குளறுபடி, இதற்கு காரணமான சிஏ எம்எஸ் குழுவினரை சுழற்சி முறையில் மாற்ற கோருதல், மாநில அரசு தணிக்கை துறையில் 6300 தணிக்கை நிறுவனங்கள் கைவிடல் வேண்டும். பேரூராட்சிகளின் தணிக்கை முறை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் துறைகள் இணைப்பு மற்றும் துறை மறு சீரமைப்பு முறை பாதிப்புகள் களையப்பட வேண்டும். பணியாளர்கள் ஓய்வு பெறும் நாளில் குற்ற குறிப்பாணைகள் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும். உடன் நிகழ் தணிக்கை முறை ஒழிக்கப்பட வேண்டும். மனித நாட்கள் தராமல் தணிக்கை பத்திகளை நீக்க வலியுறுத்தும் ஏபிஎம்எஸ் பணி நிர்பந்தம் நீக்கப்பட வேண்டும். புதிய வருவாய் மாவட்டங்களில் புதிய உதவி இயக்குநர் அலுவலகங்கள் பல ஆண்டுகளாக தொடங்கப்படாமல் உள்ளதை விரைவில் தொடங்க வேண்டும். மூன்று பேருக்கு மட்டுமே கண் துடைப்பு கவுன்சிலிங் நடத்திய பின்னர் கணக்கின்றி பணியிட மாறுதல் செய்தல் கைவிடப்பட வேண்டும். புதியதாக உருவாக்கப்பட்ட வருவாய் மாவட்டங்களான திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை மற்றும் தென்காசி மாவட்ட அளவில் தணிக்கை பணித்திட்டங்கள் வகுக்காமல் உள்ளதை உடனடியாக வகுத்து தர வேண்டும் உள்ளிட்ட இந்த 13 நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டி இந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை மற்றும் மாநில அரசு தணிக்கை துறை ஆய்வாளர் மன்றத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். டி என் ஜி ஓ யூ மாநில பொருளாளர் பெ. திலகர் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து நிறைவு உரையாற்றினார்.
காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு – நிலுவை கோப்புகள், பட்டா தாமதம், நிர்வாக அலட்சியம் என தொடர் புகார்!வேலூர், ஜூலை 4-காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய்த் துறை செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, பல மாதங்களாகவும் சில நேரங்களில் வருடக் கணக்கிலும் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.பொதுமக்கள் கூறுவதாவது, வருவாய் கோட்டாட்சியரிடம் நிலுவை கோப்புகள் குறித்து கேட்டால், “வருவாய்த் துறை விசாரணைக்குப் பிறகே பதில் அளிக்க முடியும்” என தெரிவிக்கப்படுகிறது. எப்போது விசாரணை நடைபெறும் என்று கேட்டால், “பணிச்சுமை அதிகமாக இருப்பதால் தற்போது வர முடியாது; அந்தப் பகுதிக்கு வரும்போது கண்டிப்பாக வருவோம்” என்று அதிகாரிகள் கூறுவதாகவும், ஆனால் பின்னர் அந்தப் பகுதிக்கு வந்தாலும் சம்பந்தப்பட்ட கோப்புகள் பரிசீலிக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும், அலுவலகத்திற்கு பலமுறை நேரில் சென்றாலும், “கோப்புகள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்று தேடிக் கொண்டிருக்கிறோம்; அடுத்த வாரம் வாருங்கள்” என்ற பதிலே தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.ஆன்லைன் பட்டா மற்றும் நில விவரங்களில் சில சர்வே எண்கள் கணினி அமைப்பில் பதிவேற்றம் செய்யப்படாததால், நிலங்களை விற்க முடியாமல் ஆறு மாதங்களுக்கும் மேலாக மக்கள் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், “வருவாய் ஆய்வாளரிடம் தெரிவித்துள்ளோம்”, “கோட்டாட்சியரிடம் கூறியுள்ளோம்” என்ற பதில்களே கிடைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், பட்டாவில் தொடர்பில்லாத நபர்களின் பெயர்கள் சேர்க்கப்படுவது, ஏற்கனவே உள்ள உரிமையாளர்களின் பெயர்கள் நீக்கப்படுவது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாகவும், இத்தகைய புகார்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் முகாமில் பட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டும், சிலருக்கு மட்டுமே பட்டா கிடைத்ததாகவும், மீதமுள்ளவர்களிடம் பின்னர் “உங்கள் பெயர் பட்டியலில் இல்லை” என்று கூறப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.பணம் கொடுத்து பணிகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், ஏழை மற்றும் சாதாரண மக்களின் தொலைபேசி அழைப்புகளுக்குக் கூட பதிலளிக்கப்படுவதில்லை என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள பட்டா மற்றும் வருவாய்த் துறை தொடர்பான கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் விண்ணப்பம் செய்தால் அதை எடுத்து பார்ப்பது கூட இல்லை. இதற்கு முன்னர் அமைச்சர் துரைமுருகன் பெயரைச் சொல்லி எந்தவொரு பணியையும் செய்யாமல் காலம் கடத்தி வந்தனர். பணம் தருபவர்களின் பணிகள் மட்டுமே முடித்து தரப்பட்டது. பணம் தராதவர்களின் பணிகளை முடித்து தராமல் இழுத்தடித்து வந்தனர். காட்பாடியில் ஒரு பட்டா பெற வேண்டும் என்றால் ரூபாய் 15,000 முதல் ரூ.30,000 வரையில் செலவாகிறது. குறிப்பாக இந்த சர்வேயர் செக்ஷ்ஷனுக்கே பணம் கொடுத்து அழுது மாளாது. அந்த அளவிற்கு ஏழைகளின் ரத்தத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடிக்கின்றனர் அரசு அலுவலர்கள். லஞ்ச ஒழிப்புத்துறையும் இவர்களை இதுநாள் வரையில் சரிவர கவனிக்கவில்லை என்பது ஒரு மைனஸ் பாயிண்ட் என்றும் சொல்லலாம். காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் பார்வை முழுவதுமாக வைத்தால் மட்டுமே இந்த விலங்கு மீன்கள் சிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை பணம் என்றால் இனம் கூட வாயை பிளக்கும் என்று சொல்வார்கள் ஆனால் இங்கும் அதே நிலைதான் பணம் இல்லை எனில் எந்த வேலையும் நடக்காது ஏன் அனுபவம் அசையாது என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு நிலைமை மிகவும் கேவலமாக படு மோசமாக சென்று கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டு இருக்குதஅதை திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டு இருக்குது என்று மருதகாசி பாடலின் வைர வரிகளுக்கு இணங்க காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இதுபோன்ற ஒரு நிலாளபை பிரிவு செயல்பட்டு வருவது மிகவும் வெட்கக்கேடானது வேதனைக்குரியது என்று தான் சொல்ல வேண்டும் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் இங்கு மாறவே இல்லை என்று சொல்லலாம். அப்படியே அதன் நிலைமை உள்ளது வரிசைப்படி பதிவு விருப்பத்தை ுுடைுஅயாது அவர்கள் விருப்பம் போல் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தந்து இங்கு பணியாற்றிக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கெல்லாம் ஒரு நிரந்தர தீர்வை தமிழக முதல்வராக உள்ள விஜயின் அரசு கொண்டுவர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொண்டசமுத்திரம் ஊராட்சியில் நெசவாளர்கள் ஆலோசனை கூட்டம்!வேலூர், ஜூலை 4-கைத்தறி நெசவாளர்களுக்கு குறைத்த கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெசவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் கொண்டசமுத்திரம் ஊராட்சி எம்ஜிஆர் நகரில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ஆர். அண்ணாமலை தலைமை வகித்தார்.எம்ஜிஆர் நகர் பகுதி, கந்தசாமி நகர் பகுதி, ராஜீவ் காந்தி நகர் பகுதி நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.கைத்தறி நெசவாளர்களுக்கு குறைக்கப்பட்ட கூலியை உடனே உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், அதற்காக முத்தரப்பு பேச்சு வார்த்தையை உடனே நடத்த துறை சார்ந்த அரசு அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவது என்றும், கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் திருநாளுக்கு பத்து சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும்எம்ஜிஆர் நகரில் இருந்து கைத்தறி நெசவாளர்கள் ஊர்வலமாக சென்று வட்டாட்சியரிடம் மனு அளிப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. அனைத்து பகுதி நெசவாளர்களும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் மணி, மூர்த்தி, தணிகைவேல், மோகன் உள்ளிட்ட நெசவாளர்கள் மற்றும் பல நெசவாளர்கள் கலந்து கொண்டனர் .
1
…
5
6
7
…
115
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.