உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மற்றும் மாநில அரசு தணிக்கை துறைகளில் நிதி அமைச்சரின் உத்தரவை மதிக்காத தலைமை தணிக்கை இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநரை கண்டித்தும் தணிக்கையாளர்களின் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் உண்ணாவிரதப் போராட்டம்!வேலூர், ஜூலை 5-வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மற்றும் மாநில அரசு தணிக்கை துறைகளில் நிதி அமைச்சரின் உத்தரவை மதிக்காத தலைமை தணிக்க இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநரை கண்டித்தும் தணிக்கையாளர்களின் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாநில தலைவர் ஆர். பாபு தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சீனி. செந்தில், பொதுச்செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் ஆர். கோவிந்தராஜ் வரவேற்றார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து தொடங்கி வைத்தார். மாநில தலைவர் பா. ஐயப்பன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில தலைவர் மகேந்திர குமார் வாழ்த்து பேருரை வழங்கினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆய்வாளர் மன்ற மாநில துணைத்தலைவர் த.ஞானவேல், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் மா. விநாயகம், வேலூர் மாவட்ட தலைவர் ஆ .கோவிந்தராஜ், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் கி. ராஜேஷ், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் மு. அமாவாசை, விழுப்புரம் எஸ் .கோட்டீஸ்வரன், மாநில மகளிர் அணி செயலாளர் கே. லதா ,கடலூர் பி. இரா. ரேவதி மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த 15.4.2025 முதல் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மற்றும் மாநில அரசு தணிக்கை துறையில் அமல்படுத்தப்பட்ட சிஏ எம்எஸ் என்ற ஆன்லைன் தணிக்கை முறை மற்றும் தணிக்கை துறைகளில் நிலவும் நீண்ட கால இடர்பாடுகள் ரத்து செய்யப்பட வேண்டும். தமிழக நிதி அமைச்சரின் உத்தரவுக்கு மாறாக பெண்களுக்கு 100 கிலோ மீட்டர் தாண்டிய தொலைதூர தணிக்கை பணி வழங்குவது, மாற்றுத் திறனாளி தணிக்கையாளர்களுக்கு தணிக்கை பணி மறுப்பது, சொந்தக்காரண விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்புகளுக்கு அனுமதி மறுப்பதசி ஏ எம் எஸ் ரேண்டமை சேஷன் மாநில அளவில் பணித் திட்டம் ஒதுக்கீட்டில் குளறுபடி, இதற்கு காரணமான சிஏ எம்எஸ் குழுவினரை சுழற்சி முறையில் மாற்ற கோருதல், மாநில அரசு தணிக்கை துறையில் 6300 தணிக்கை நிறுவனங்கள் கைவிடல் வேண்டும். பேரூராட்சிகளின் தணிக்கை முறை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் துறைகள் இணைப்பு மற்றும் துறை மறு சீரமைப்பு முறை பாதிப்புகள் களையப்பட வேண்டும். பணியாளர்கள் ஓய்வு பெறும் நாளில் குற்ற குறிப்பாணைகள் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும். உடன் நிகழ் தணிக்கை முறை ஒழிக்கப்பட வேண்டும். மனித நாட்கள் தராமல் தணிக்கை பத்திகளை நீக்க வலியுறுத்தும் ஏபிஎம்எஸ் பணி நிர்பந்தம் நீக்கப்பட வேண்டும். புதிய வருவாய் மாவட்டங்களில் புதிய உதவி இயக்குநர் அலுவலகங்கள் பல ஆண்டுகளாக தொடங்கப்படாமல் உள்ளதை விரைவில் தொடங்க வேண்டும். மூன்று பேருக்கு மட்டுமே கண் துடைப்பு கவுன்சிலிங் நடத்திய பின்னர் கணக்கின்றி பணியிட மாறுதல் செய்தல் கைவிடப்பட வேண்டும். புதியதாக உருவாக்கப்பட்ட வருவாய் மாவட்டங்களான திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை மற்றும் தென்காசி மாவட்ட அளவில் தணிக்கை பணித்திட்டங்கள் வகுக்காமல் உள்ளதை உடனடியாக வகுத்து தர வேண்டும் உள்ளிட்ட இந்த 13 நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டி இந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை மற்றும் மாநில அரசு தணிக்கை துறை ஆய்வாளர் மன்றத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். டி என் ஜி ஓ யூ மாநில பொருளாளர் பெ. திலகர் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து நிறைவு உரையாற்றினார்.