
வேலூர் சார் பதிவாளர் பத்மபிரியா மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு!வேலூர்,ஜூன்18-வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை பி எஸ் பி சங்கர் தலைமையில், ஆய்வாளர் மைதிலி உள்பட 5 பேர் அடங்கிய குழுவினர் கடந்த 4ம் தேதி வேலூர் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீரென அதிரடி சோதனை நடத்தினர். அப்போது உரிய முகாந்திரம் இல்லாமல் வைத்திருந்த ரூபாய் 75 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக சார் பதிவாளர் பத்மபிரியா மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் வேலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தேவையற்ற நபர்கள் (புரோக்கர்கள்) நடமாட்டமும் அதிகம் இருப்பதை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதற்குப் பிறகு இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் பத்மபிரியா கைது செய்யப்பட்டு நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.










Leave a Reply