
காட்பாடி வட்டத்தில் ஜமாபந்திதொடக்கம்: பொதுமக்கள் குவிந்தனர்!வேலூர், ஜூன் 18-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாய ஜமாபந்தி நிகழ்ச்சி 17ம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு வருவாய் தீர்வாய அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான அ. செந்தில்குமார் தலைமை வகித்தார்.இந்நிகழ்வில் காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி, துயர் துடைப்பு வட்டாட்சியர் சந்தோஷ்குமார், துணை வட்டாட்சியர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் தமிழ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இளங்கோவன், பவிதா, திலீப்குமார், கோபி, லாவண்யா, மற்றும் கிராம உதவியாளர்கள் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.ஜமாபந்தியின்போது பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க அலுவலர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், வருவாய் நிர்வாகம் தொடர்பான பணிகள் மற்றும் மக்கள் குறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.










Leave a Reply