Archives
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Uncategorized
காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் பொறியாளர் ராமு தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் மாறனிடம் தாக்கல் செய்தார். வேட்பாளர் ராமுவுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளான பாஜக மாவட்ட தலைவர் தசரதன், அமமுக ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காட்பாடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் வேலூர் தொகுதி எம்.பி .கதிர் ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பாளர் நீல.சந்திரகுமார், முன்னாள் வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டீக்காராமன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் வேட்புமனு தாக்கல்!வேலூர், ஏப். 7-தேசிய ஜனநாயக கூட்டணி குடியாத்தம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி. பரிதா புருஷோத்தமன் 6ம் தேதி தனது வேட்பு மனுவினை தொகுதி தேர்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான செல்வி. சுபலட்சுமியிடம் தாக்கல் செய்தார். இந்த வேட்பு மனு தாக்கலின் போது அதிமுக குடியாத்தம் நகர கழக செயலாளர் ஜே. கே. என். பழனி, பேரணாம்பட்டு ஒன்றிய கழகச் செயலாளர் பொகளூர் பிரபாகரன், பாரதிய ஜனதா கட்சியின் தொகுதி பொறுப்பாளர் மகேஷ், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி, மேலும் மாற்று வேட்பாளர் சம்பத், அதிமுக பேரணாம்பட்டு நகரக் கழகச் செயலாளர் சீனிவாசன், புதிய நீதி கட்சி மாவட்ட செயலாளர் பி. செந்தில்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.அருணோதயம், குடியாத்தம் தொகுதி கழக தேர்தல் பொறுப்பாளர் சதீஷ் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த வேட்புமனு தாக்கலின் போது இரட்டை இலை தழைத்தது. முரசு சத்தமே இன்றி முடங்கிப் போனது. திமுகவினர் குடியாத்தம் தொகுதி யில் பணியாற்றாமல் பக்கத்து தொகுதிகளான கே.வி.குப்பம் மற்றும் அணைக்கட்டு ஆகிய தொகுதிகளுக்கு பணியாற்ற சென்று விடுகின்றனர். இதனால் தனித்து விடப்பட்ட நிலையில் தேமுதிக வேட்பாளர் சுற்றித் திரிகிறார். இதனால் வெற்றி வாய்ப்பு என்பது மதில் மேல் பூனை போல மாறி உள்ளது குடியாத்தம் தொகுதியில் என்று சொன்னால் அது மிகையல்ல.
தமிழகத்தில் 2026 நடக்கவிருக்கும் தேர்தலில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் முன்னாள் நரசிபுரம் ஊராட்சி தலைவருமான கார்த்திகேயன் என்பவர் இன்று பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உடன் வடக்கு மாவட்ட செயலாளர் ரவி இருந்தார்.
தமிழகத்தில் 2026 நடக்கவிருக்கும் தேர்தலில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் முன்னாள் நரசிபுரம் ஊராட்சி தலைவருமான கார்த்திகேயன் என்பவர் இன்று பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உடன் வடக்கு மாவட்ட செயலாளர் ரவி இருந்தார்.
தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் 20 26 தேர்தலில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிலும் வேட்பாளர் எஸ் பி வேலுமணி இன்று பேரூர் தாசில்தார் அலுவலகத்தில் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார் என்று வெளியில் வந்த அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து தான் இத்தனை வருடங்களாக தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து உள்ளதாகவும் அவர் இருந்த நாட்களில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பதவியில் இருந்து கோவையில் உள்ள மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செய்து கொடுத்ததாகவும் அதே வேலையில் வரும் நாட்களில் தங்களது பொதுச்செயலாளர் நிச்சயம் முதலமைச்சர் ஆவார் என்றும் அவர் வந்த பிறகு மீண்டும் தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த நல்லாட்சியை கொடுப்போம் என்று சொன்னார்.
காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் ராமு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு!வேலூர்,ஏப்.6-தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. காட்பாடி தொகுதியில் இருமுனை போட்டி நிலவுகிறது. அதாவது அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. கடந்த முறை சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய அதிமுக வேட்பாளர் ராமு இந்த முறை நூதன முறையில் பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டார். அந்த பிரச்சாரத்தில் கடந்த 5ம் தேதி காட்பாடி பவானி நகர், முத்தமிழ் நகர், காட்பாடி ரயில் நிலையம், பழைய காட்பாடி அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டு திறந்த ஜுப்பில் இருந்து இறங்கி வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்காளர்கள் ஆரவாரத்துடன் ராமுவை வரவேற்று தாங்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிப்பதாக உறுதி அளித்தனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது அமமுக பிரமுகர் ராஜா மற்றும் பல கூட்டணி கட்சி நிர்வாகிகள் அதிமுக வேட்பாளர் ராமுவுடன் சென்றனர்.
வேலூர் சிஎஸ்ஐ மத்திய ஆலயத்தில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் கார்த்திகேயன்!வேலூர், ஏப். 6-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி மற்றும் திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆசி பெற்ற வேலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர், திமுக வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன், வேலூர் சிஎஸ்ஐ மத்திய ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சபை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் பகுதி கழக செயலாளர் சுந்தர் விஜி ,மண்டல குழு தலைவர் வீனஸ் நரேந்திரன், ஆண்கள் ஐக்கிய சங்கத்தின் செயலாளர் ஆர்.டேவிட் ராஜ்குமார்உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தோழமைக் கட்சியினர் உடன் இருந்தனர்.
ஈஸ்டர் திருநாளில் சி. எஸ். ஐ. தேவாலயத்தில் திமுக வேட்பாளர் துரைமுருகன் வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப். 6-துன்பங்கள் போக்கி துணைநிற்க உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை போற்றும் இனிய நாளில் காட்பாடியில் உள்ள சி. எஸ். ஐ. தேவாலயத்தில் மக்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தார் திமுக காட்பாடி தொகுதி வேட்பாளர் துரைமுருகன். அப்போது தேவாலயத்தில் திரண்டிருந்த பொதுமக்களிடம் தனக்கு வழக்கம் போல் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அத்துடன் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களையும் அங்கிருந்த பொதுமக்களுக்கு தெரிவித்து மகிழ்ந்தார் திமுக வேட்பாளர் துரைமுருகன். திமுக வேட்பாளர் துரைமுருகனுடன் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் ,காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னிய ராஜா மற்றும் திமுகவினர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் பரிதா புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்!
1
…
17
18
19
…
87
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.