
காட்பாடியில் போலீசார் ‘வாக் பேட்ரோல்’ தீவிர ரோந்துப் பணி!வேலூர், ஜூன் 14-பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காட்பாடியில் போலீசார் தீவிர ‘வாக் பேட்ரோல்’ (நடை ரோந்து) பணியில் ஈடுபட்டனர்.வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமனின் அறிவுறுத்தலின்படி, காட்பாடி காவல் ஆய்வாளர் தயாளன் தலைமையில், போலீசார் இந்த தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.காட்பாடி வள்ளிமலை கூட்டுச் சாலையில் தொடங்கி குடியாத்தம் சாலை வரை போலீசார் நடந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் இந்த தீவிர நடை ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.










Leave a Reply