காஞ்சிபுரம் மாவட்டத்தில்கால்நடைகள் குறித்த விவரங்கள்மின்னணு மூலம் கணக்கெடுக்ககலெக்டர் சினேகா உத்தரவு!காஞ்சிபுரம், ஜூன் 13 – காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடைகளின் முழு விவரங்களை, மாவட்ட கலெக்டர் சினேகா உத்தரவின் பேரில்,தேசிய மின்னணு இயக்க வழி இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்க உள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பு வருமாறு;’காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம மக்களால் வளர்க்கப்பட்டு வரும் 18 லட்சத்து 78 ஆயிரத்து 909 கால்நடைகளுக்கு, 12 இலக்க காதுவில்லை அடையாள எண் பதிவு செய்யப்பட உள்ளது. பின்னர் இதன் முழு விவரத்தையும் மின்னணு தகவல் மூலம் பதிவேற்றம் செய்திட தேசிய மின்னணு கால்நடை இயக்கம் திட்டம் வகுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, மாவட்டத்தில் உள்ள கால்நடைகளின் செயற்கைமுறை கருவூட்டல், கால்நடை காப்பீட்டு விவரம், சினையுறு சதவீதம், கன்று ஈன்ற விவரம் ஆகியவை கணக்கில் எடுக்க வேண்டும்.கன்று பிறப்பு விகிதம், உரிமையாளர் பதிவு மற்றும் பெயர் மாற்றம், பருவத்திற்கேற்ப மேற்கொள்ளப்படும். கோமாரி நோய், தோல் கழலை நோய், அடைப்பான் நோய் ஆகியவற்றிற்கான தடுப்பூசி பதிவுகள், நோய் கிளர்ச்சி அறிக்கை, பால் உற்பத்தி பதிவு விவரங்கள் ஆகிய தரவுகள் சேகரிப்பட்டு கணக்கில் எடுக்கப்படும். இந்த விவரங்களை கால்நடை பராமரிப்புத் துறை மூலம் தேசிய மின்னணு இயக்க வழி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.இந்த விவரங்களை பதிவேற்றம் செய்யும்போது உரிமையாளரின் கைபேசி எண், ஆதார் எண் ஆகியவற்றை ஒருங்கிணைத்து விவசாயின் கைபேசிக்கு அனுப்பப்படும். விவசாயிகளின் செல்போன் ‘மெசேஜி’ மூலம் கால்நடைகளின் முழு விவரம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. விவசாயிகள் தங்களது கால்நடைகளை கொள்முதல் – விற்பனை ஆகியவை மேற்கொள்ளும் போது, கால்நடைகள் பற்றிய முழு விவரமும் கால்நடை வளர்ப்போர் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட பணி தொடர்பாக கிராமங்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறையினர் வருகை தரும்போது, கால்நடை வளர்ப்போர் தங்கள் செல்போனுக்கு வரும் ‘மெசேஜ்’ மூலம் கேட்கப்படும் விவரங்களை தெளிவாக தெரிவிக்குமாறு கால்நடை வளர்ப்போர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply