மாங்காய் பறிக்க மரத்தில் ஏறிய நபர் கீழே விழுந்து உயிரிழந்த பரிதாபம்!வேலூர், ஜூன் 21-வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை சாலையில் உள்ள பழைய போன் மில் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (57). இவர் முன்பு தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றினார். அவர் தனது வீட்டில் உள்ள மா மரத்தில் மாங்காய்களைப் பறிப்பதற்காக மரத்தின் மீது ஏறியுள்ளார். அப்போது அவர் நின்றுகொண்டிருந்த ஒரு சிறிய மரக்கிளை எதிர்பாராதவிதமாக திடீரென முறிந்தது.இதனால் நிலைதடுமாறி மரத்திலிருந்து மணி கீழே விழுந்தார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.போலீசார் மணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து காட்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..வீட்டில் இருந்த மாமரத்தில் மாங்காய் பறிக்கச் சென்றவர் மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘படிப்புடன் ஒழுக்கத்தையும் கற்றுக் கொண்டால் வாழ்க்கையே செழிக்கும்’ :கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்களுக்கு அறிவுரை !செய்யாறு, ஜூன் 21 -செய்யாறு அருகே முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி மாணவ – மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடந்தது.செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டதுஅசனமாபேட்டை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் தில்லை கார்த்தி. இவர் திருவண்ணாமலை த.வெ.க.,வின் கிழக்கு மாவட்டத்தின், மாவட்ட அமைப்பாளராக பொறுப்பும் வகித்து வருகிறார். இங்கு வடமனப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, பெருங்கட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகள் இயங்கி வருகிறது.இந்த பள்ளிகளில் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு – பிளஸ் 2 ஆகிய பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 52 மாணவ – மாணவிகளுக்கு முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி கல்வி விருது வழங்கும் விழா நடந்தது. திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 52 மாணவ – மாணவிகளுக்கு கல்வி விருதாக ‘கேடயம் – பண முடிப்பு’ ஆகியவற்றை வழங்கி அவர் பேசியதாவது; ‘பள்ளி பருவம் என்பது வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகும். படிப்புடன் ஒழுக்கத்தையும் கற்றுக் கொண்டால் வாழ்க்கை செழிக்கும். நீங்கள் கடந்தாண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கும் உங்களது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள்.இதற்காகத்தான் உங்களுக்கான பாராட்டு விழாவை மாவட்ட அமைப்பாளர் தில்லை கார்த்தி ஏற்பாடு செய்துள்ளார். அவரையும் இந்த தருணத்தில் பாராட்டுகிறேன். கிராமப்புறங்களைச் சேர்ந்த அனைவரும் நன்கு படித்து விட்டால் நாடு முன்னேற்றப் பாதைக்கு சென்றுவிடும். இவ்வாறு மாவட்ட செயலாளர் உதயகுமார் பேசினார்.இந்நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.வி.ரஞ்சித்குமார், செய்யாறு, அனக்காவூர், வெம்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், அமைப்பாளர்கள் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் என, பலரும் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம் ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரியின் மருத்துவ கழிவு நீரால் தொற்றுநோய் பீதி.. விவசாய நிலங்கள் பாதிப்பு கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் அலறும் பொது மக்கள்! கண்டு கொள்வாரா தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்.?நாகப்பட்டினம், ஜூன் 21-நாகப்பட்டினம் மாவட்டம், ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 113 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்தக் கல்லூரியை அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டில் திமுக ஆட்சியில் காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி 2022-ல் திறந்து வைத்தார். 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையுடன் செயல்படும் இந்தக் கல்லூரியில், முக்கியமான பதவிகள் உட்பட பல்வேறு துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.இதனால், மருத்துவக் கல்வி மற்றும் சுகாதார சேவைகளின் தரம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போதிய ஊழியர்கள் இல்லாததால், கல்லூரி நிர்வாகம் சிரமப்பட்டு வருகிறது.ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி 2021-ல் தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி 2022-ல் திறந்து வைத்தார். இந்த மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம் மாவட்ட மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்கும் இடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது போதிய ஊழியர்கள் இல்லாமல் தவிக்கிறது.254.8 கோடி ரூபாய் செலவில் இந்த மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டது. இதற்காக மொத்தம் 366.8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கல்லூரியில் 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை உள்ளது. சுமார் 600 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள். அவர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பயிற்சிக்காக வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில்ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாததால் கல்லூரியிலிருந்து வெளியேறும் மருத்துவ கழிவுகள் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்நிலையில் தற்போது அரசு மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவ கல்லூரியிலிருந்து வெளியேறும் மருத்துவ கழிவுகள் மற்றும் கழிவுநீர் ஆகியவை மருத்துவ கல்லூரி அருகேயுள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதோடு குட்டைபோல் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இந்நிலையில் தற்போது அரசு மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவ கல்லூரியிலிருந்து வெளியேறும் மருத்துவ கழிவுகள் மற்றும் கழிவுநீர் ஆகியவை மருத்துவ கல்லூரி அருகேயுள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதோடு குட்டைபோல் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும் அந்த குட்டையில் தண்ணீர் குடிக்கும் கால்நடைகள் உயிரிழப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்செயல்படாத சுத்திகரிப்பு நிலையம்:இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர், மருத்துவ கல்லூரியிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக மருத்துவ கல்லூரிக்குள் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவ கல்லூரி தொடங்கியதிலிருந்தே இது செயல்படாமல் உள்ளதுமருத்துவ கல்லூரியிலிருந்து வெளியேறும் மருத்துவ கழிவுநீர் கிராமத்திற்குள் சென்று பொதுமக்கள் பயன்படுத்தும் குளங்கள் மற்றும் விவசாய நிலத்திற்குள் போய் சேர்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வரும் இந்த மருத்துவ கல்லூரியின் அவல நிலையை மாற்ற உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சரும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சித்தூர் துவாரகா நகரில் நடந்த சங்கிலி பறிப்பு, இருசக்கர வாகன திருட்டு வழக்கில் விழுப்புரம் குற்றவாளி கைது!வேலூர், ஜூன் 21-கடந்த 27-05-2026 அன்று சித்தூர் கட்டமஞ்சி, துவாரகா நகரில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய சம்பவம் நடைபெற்றது.பாதிக்கப்பட்டவர்கள் சித்தூர் 1 டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தது. க்ரீம்ஸ்பேட்டை மயானம் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிக் கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் தமிழகத்தைச் சேர்ந்த ராஜாதுரை (34) என தெரிய வந்தது. மேற்கொண்டு நடத்திய விசாரணையில், அவர் சித்தூர்-1 டவுன் காவல் நிலைய எல்லையில் பதிவான தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கிலும், ஸ்ரீகாளஹஸ்தி காவல் நிலைய எல்லையில் பதிவான இருசக்கர வாகனத் திருட்டு வழக்கிலும் திருடியதையும் தனக்கு இந்த இரண்டு வழக்குகளில் தொடர்புடையதையும் அவர் ஒப்புக் கொண்டார்.மேலும் ராஜதுரை தமிழ்நாட்டில் பல்வேறு இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடமிருந்து சுமார் 39.800 கிராம் தங்கச் சங்கிலி மற்றும் ஒரு ஹீரோ இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 6 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.குற்றவாளியைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.குற்றவாளியின் விவரங்கள்:பெயர்:எஸ். ராஜாதுரைவயது:34தந்தையின் பெயர்:எஸ். சூரியமூர்த்திமுகவரி: விழுப்புரம் தாலுகா, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம்.ஆந்திர மாநிலம், சித்தூர் போலீசாரை காவல் துறை உயர் அலுவலர்கள் பாராட்டியுள்ளனர்.

காட்பாடி அருகே மகிமண்டலத்தில் சிப்காட் அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!வேலூர், ஜூன் 21-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், மகிமண்டலம் சுற்றுவட்டார பகுதியில் கையகப்படுத்தி விளைநிலங்களை சிப்காட் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் எதிரொலியாகசி.என்.பட்டடை பகுதியில் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பதட்டம் ஏற்பட்டது.இந்த போராட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.5 கிராமங்களை உள்ளடக்கிய 3,200 ஏக்கரில் சிப்காட் அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் காட்பாடி டிஎஸ்பி விஜயகுமார், வட்டாட்சியர் மகேஸ்வரி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வராததால்டிஎஸ்பியுடன் காட்பாடி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ டாக்டர் சுதாகர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தார்.

வேலூர் மாநகராட்சியில் நடந்த மாமன்ற கூட்டத்தில் மேயர் ,துணை மேயர் நேருக்கு நேர் மோதல்!வேலூர்,ஜூன் 20-வேலூர் மாநகராட்சியில் நடந்த மாமன்ற கூட்டத்தில் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயர் சுனில் குமார் நேருக்கு நேர் கடுமையாக மோதிக்கொண்டனர். இதனால் கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது .இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதிமுகவினர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை வைக்க வேண்டும் என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மேலும் பரபரப்பு கூடியது.வேலூர் மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் தொடங்கியது. இதில் மாநகராட்சி ஆணையர் முன்னிலை வகித்தார். துணை மேயர் சுனில் குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .திமுகவின் தோல்விக்கு நீ தான் காரணம் என்று மேயர் மீது துணை மேயர் குற்றம் சுமத்தி பேசினார். இதனால் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் நடந்து முடிவதற்குள்ளாக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் எழுந்து முன்னாள் முதல்வர் என்ற ரீதியில் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை மாமன்ற வளாகத்தில் மாட்ட வேண்டும் என்று கூறி அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாமன்றத்தில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டதுடன் கூட்டம் நடைபெறாமல் திடீர் பரபரப்பும் குழப்பமும் தொடர்ந்து நிலவி வந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேயருக்கும், துணை மேயருக்கும் நடந்த வாக்குவாதத்தை பதிவு செய்த செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்களையும் கூட்ட அறையிலிருந்து வெளியேறுமாறு மேயர் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது என்பதில் மேயர் கவனமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செய்திகள் வெளியே எதுவும் வரக்கூடாது என்பதற்காக மேயர் சுஜாதா செய்தியாளர்களுக்கு தலா ரூபாய் 200 கொடுத்து அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் சுகாதார அலுவலர் ஆலோசனை!வேலூர், ஜூன் 20-வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1 காட்பாடி வார்டு 9 இல் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் சுகாதார அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து சுகாதார அலுவலர் டாக்டர் கே. சிவக்குமார் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் முறைகள் மற்றும் தூய்மை பணிகள் குறித்து அதிகாரிகளுக்கும் அங்கு பணியில் உள்ள பணியாளர்களுக்கும் அவர் ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக குப்பைகளை தரம் பிரித்து வீடுகளில் இருந்து வாங்க வேண்டும் என்று அவர் கண்டிப்புடன் தெரிவித்தார். இரண்டு குப்பைகளையும் ஒன்றாக இணைத்து வாங்க கூடாது என்றும் குறிப்பாக வலியுறுத்தி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.