சித்தூர் துவாரகா நகரில் நடந்த சங்கிலி பறிப்பு, இருசக்கர வாகன திருட்டு வழக்கில் விழுப்புரம் குற்றவாளி கைது!வேலூர், ஜூன் 21-கடந்த 27-05-2026 அன்று சித்தூர் கட்டமஞ்சி, துவாரகா நகரில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய சம்பவம் நடைபெற்றது.பாதிக்கப்பட்டவர்கள் சித்தூர் 1 டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தது. க்ரீம்ஸ்பேட்டை மயானம் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிக் கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் தமிழகத்தைச் சேர்ந்த ராஜாதுரை (34) என தெரிய வந்தது. மேற்கொண்டு நடத்திய விசாரணையில், அவர் சித்தூர்-1 டவுன் காவல் நிலைய எல்லையில் பதிவான தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கிலும், ஸ்ரீகாளஹஸ்தி காவல் நிலைய எல்லையில் பதிவான இருசக்கர வாகனத் திருட்டு வழக்கிலும் திருடியதையும் தனக்கு இந்த இரண்டு வழக்குகளில் தொடர்புடையதையும் அவர் ஒப்புக் கொண்டார்.மேலும் ராஜதுரை தமிழ்நாட்டில் பல்வேறு இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடமிருந்து சுமார் 39.800 கிராம் தங்கச் சங்கிலி மற்றும் ஒரு ஹீரோ இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 6 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.குற்றவாளியைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.குற்றவாளியின் விவரங்கள்:பெயர்:எஸ். ராஜாதுரைவயது:34தந்தையின் பெயர்:எஸ். சூரியமூர்த்திமுகவரி: விழுப்புரம் தாலுகா, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம்.ஆந்திர மாநிலம், சித்தூர் போலீசாரை காவல் துறை உயர் அலுவலர்கள் பாராட்டியுள்ளனர்.