Archives
August 2026
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Uncategorized
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண சிரவண தீபம் ஏற்றி வழிபாடு!வேலூர், ஜூலை 4-வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஶ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு 3ம் தேதி சிரவண தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. அர்த்த மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மஹாலஷ்மிக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிரவண தீபத்தை ஏற்றி பின்பக்கமாக இடமிருந்து வலமாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மஹாலட்சுமி விக்கிரகத்தை மூன்று முறை வலம் வந்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு கேசரி, பஞ்சாமிர்தம், சுண்டல், சாம்பார் சாதம் ஆகிய பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. குங்குமம், சந்தனம், மஞ்சள், செந்தூரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஶ்ரீபக்த ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ கண்ணன் பட்டாச்சாரியார் வெகுவிமரிசையாக செய்திருந்தார்.
முதல்வரை பாலிமர் T V தலைவர் கல்யாண சுந்தரம் தனது குடும்பத்தினருடன் சந்தித்தார்.
வேலூர் சரக காவல்துறை முதுநிலை நிர்வாக அலுவலருக்கு பணிநிறைவு பாராட்டு விழா!வேலூர், ஜூலை 4-வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில், வேலூர் சரக காவல் துறையில் முதுநிலை நிர்வாக அலுவலராக பணியாற்றி பணி நிறைவு பெற்று, அலுவலகத்தின் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிஸராகவும் பணியாற்றிய எஸ். டீக்காராமனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) மகேஷ் கலந்துகொண்டு, எஸ். டீக்காராமனுக்கு பணி நிறைவு வாழ்த்துக்களைத் தெரிவித்து, பொன்னாடை போர்த்தி கவுரவித்து, நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதனைத் தொடர்ந்து வேலூர் ஏ.எஸ்.பி. தனுஷ்குமார், திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎஸ்பி (HQ) சிவாஅனு பாண்டியன், வேலூர் டி.எஸ்.பி. இருதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, இவரின் சிறப்பான பணியைப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசுகளை வழங்கி பணி நிறைவு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், காவல்துறையைச் சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் திரளாகக் கலந்து கொண்டு, எஸ். டீக்காராமனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, அவரது நீண்டகால அர்ப்பணிப்புமிக்க காவல் பணியைப் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
நமது மேட்டுப்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் திரு சுனில் ஆனந்த் அவர்கள் திம்மம்பாளையம் புதூரில் நடைபெற்ற அருள் மிகு செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட தருணம்
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க புதிய உறுப்பினர்கள் இணையும் விழா!ராணிபேட்டை, ஜூலை 3-தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டத்தில் சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றது.இந்நிகழ்வில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பூபதி, மாநிலப் பொதுச் செயலாளர் சுந்தரராஜன் , மாநிலச் செயலாளர் (வடக்கு மண்டலம்) பக்கிரிசாமி , ஒருங்கிணைந்த வேலூர்–திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் சற்குணம், திருப்பத்தூர், கடலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பாளர்கள், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் கபிலன், மாவட்டப் பொருளாளர் சங்கரநாராயணன், மாவட்டத் துணைத் தலைவர் மணிகண்டன், மாவட்ட மகளிர் அணி தலைவர் கலையரசி, சோளிங்கர் வட்டத் தலைவர் நவநீதன், ஆற்காடு வட்டத் தலைவர் வெங்கடேசன், நெமிலி வட்டத் தலைவர் டோமேஷசன் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் அனைத்து வட்ட நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை மனமார்ந்த வரவேற்புடன் சங்கத்தில் இணைத்துக் கொண்டனர்.சங்கத்தின் ஒற்றுமையையும், வளர்ச்சியையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இவ்விழா, மிகுந்த உற்சாகத்துடனும், சிறப்புடனும் நிறைவுற்றது.புதியதாக இணைந்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். சங்கத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை முன்னெடுத்து, அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, உறுப்பினர்களின் நலன்களையும், சங்கத்தின் வளர்ச்சியையும் மேலும் உயர்த்திட அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள்.இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்திய சோளிங்கர் வட்டத் தலைவர் நவநீதனுக்கும், நெமிலி வட்ட நிர்வாகிகளுக்கும், விழா வெற்றிக்கு ஒத்துழைத்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று மு. வெங்கடேசன், B.A., (Ex-Army)மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம், ராணிப்பேட்டை மாவட்டம் தெரிவித்துள்ளார்.
வேலூர் நறுவீ மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாட்டம்!வேலூர், ஜூலை 3-வேலூர் நறுவீ மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது, அதில் பள்ளி மாணவ, மாணவியர் சார்பில் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.மக்களின் உயிரை காப்பாற்றும் பணியில் மருத்துவ சேவை ஆற்றி வரும் மருத்துவர்களை கௌரவப்படுத்தும் வகையில் வேலூர் நறுவீ மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியர் இதில் பங்கேற்று மருத்துவர்களுக்கு பூங்கொத்து வழங்கி அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றி வரும் மருத்துவர்களை கௌரவப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை முதல் தேதி தேசிய அளவில் மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் நறுவீ மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தினம் வண்ணமயமாக கொண்டாடப்பட்டது. மருத்துவர் தினத்தையொட்டி மருத்துவர்கள் பங்கேற்க நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் மருத்துவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். விழாவையொட்டி கேக் வெட்டி விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் வேலூர் வாணி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, சன்பீம் சர்வதேச பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று நேரம் பாராமல் மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றி வரும் மருத்துவர்களை மகிழ்விக்கும் வகையில் பூங்கொத்து வழங்கியும், தேசிய மருத்துவ தின பேட்ஜ் வழங்கியும் பாராட்டி கௌரவப்படுத்தினர்.மேலும், வேலூர் பீமா ஜூவல்லரி சார்பில் வேலூர் கிளை மேலாளர் ஜெயராமன் மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் நினைவுப் பரிசு வழங்கினார்.இவ்விழாவில் நறுவீ மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத், வேலூர் வாணி வித்யாலயா குழுமத் தலைவர் சுசீ மணிவண்ணன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், ரத்த புற்று நோய் நிபுணர் டாக்டர் மாமன் சாண்டி, பொது மருத்துவ நிபுணர் டாக்டர் குரியன் தாமஸ், காது மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் மேரி குரியன், மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் டாக்டர் அருணா கேக்ரே, ஆனி ரெஜ்ஜி, சந்தோஷ் சாமுவேல், அகிலா ஸ்ரீ, குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் சோனியா மேரி குரியன், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பூபே’, தலைமை நிதி அலுவலர் வெங்கட்ரங்கம், பொது மேலாளர் நிதின் சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பொறுப்பேற்பு!வேலூர், ஜூலை 2-வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், கிராம வளர்ச்சி புதிய வட்டார வளர்ச்சி அலுவலராக மீனா பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னையில் நம்ம மேட்டுப்பாளையம் சிஐடியுரத்ததான தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் நினைவு பரிசை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் வழங்கினார்!
காட்பாடி விருதம்பட்டு பகுதியில் தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்த சுகாதார அலுவலர்!வேலூர் ஜூலை 1-வேலூர் மாநகராட்சி, 1வது மண்டலம், காட்பாடி, வார்டு 15ல் காட்பாடி 1வது மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் கே. சிவக்குமார் விருதம்பட்டு பகுதியில் தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேடுகளை திடீரென ஆய்வு செய்தார். அத்துடன் வீடுகளில் சேகரிக்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தனித்தனியாக தூய்மை பணியாளர்கள் சேகரிக்கிறார்களா? என்பதை முறையாக ஆய்வு செய்தார். அத்துடன் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வராத வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று தூய்மை பணியாளர்களுக்கு சில பல அறிவுரைகளை அப்போது அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் இறை தொண்டு செய்து வரும் இராமசாமி TV மெக்கானிக் அவர்கள் 26.06.2026 வாத நோயால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார் அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் 28..06.2026 அன்று இரவு 9 மணியளவில் மருத்துவமனையில் காலமானார் அவர் விருப்பப்படி அவரது மனைவி ராணி மற்றும் அவரது மகள் யமுனா அவரது சகோதரர் சுப்பிரமணியன் அவர்கள் முழு சம்மதத்துடன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு இன்று 12.30 மணியளவில் உடல் தானம் வழங்கப்பட்டது
1
…
14
15
16
…
123
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.