
வேலூர் நறுவீ மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாட்டம்!வேலூர், ஜூலை 3-வேலூர் நறுவீ மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது, அதில் பள்ளி மாணவ, மாணவியர் சார்பில் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.மக்களின் உயிரை காப்பாற்றும் பணியில் மருத்துவ சேவை ஆற்றி வரும் மருத்துவர்களை கௌரவப்படுத்தும் வகையில் வேலூர் நறுவீ மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியர் இதில் பங்கேற்று மருத்துவர்களுக்கு பூங்கொத்து வழங்கி அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றி வரும் மருத்துவர்களை கௌரவப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை முதல் தேதி தேசிய அளவில் மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் நறுவீ மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தினம் வண்ணமயமாக கொண்டாடப்பட்டது. மருத்துவர் தினத்தையொட்டி மருத்துவர்கள் பங்கேற்க நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் மருத்துவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். விழாவையொட்டி கேக் வெட்டி விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் வேலூர் வாணி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, சன்பீம் சர்வதேச பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று நேரம் பாராமல் மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றி வரும் மருத்துவர்களை மகிழ்விக்கும் வகையில் பூங்கொத்து வழங்கியும், தேசிய மருத்துவ தின பேட்ஜ் வழங்கியும் பாராட்டி கௌரவப்படுத்தினர்.மேலும், வேலூர் பீமா ஜூவல்லரி சார்பில் வேலூர் கிளை மேலாளர் ஜெயராமன் மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் நினைவுப் பரிசு வழங்கினார்.இவ்விழாவில் நறுவீ மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத், வேலூர் வாணி வித்யாலயா குழுமத் தலைவர் சுசீ மணிவண்ணன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், ரத்த புற்று நோய் நிபுணர் டாக்டர் மாமன் சாண்டி, பொது மருத்துவ நிபுணர் டாக்டர் குரியன் தாமஸ், காது மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் மேரி குரியன், மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் டாக்டர் அருணா கேக்ரே, ஆனி ரெஜ்ஜி, சந்தோஷ் சாமுவேல், அகிலா ஸ்ரீ, குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் சோனியா மேரி குரியன், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பூபே’, தலைமை நிதி அலுவலர் வெங்கட்ரங்கம், பொது மேலாளர் நிதின் சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.










Leave a Reply