
கஞ்சா விற்பனை செய்த மதுரை இளைஞர் கைது!வேலூர், ஜூன் 29-வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள மறைவான இடத்தில் கஞ்சாவை இளைஞர் ஒருவர் விற்பனை செய்வதாக குடியாத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குடியாத்தம் போலீசார் அந்த ரயில்வே மேம்பாலம் அருகில் விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கண்டுபிடித்தனர். பின்னர் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர் மதுரை சின்னப்பாண்டி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் சின்னபாண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.










Leave a Reply