குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம்!வேலூர்,ஜூன் 29-வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் நேற்று (28.06.2026) முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி கணிதவியல் துறைத் தலைவர் முனைவர் செ. கருணாநிதி தலைமை தாங்கினார். இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் ஆ. தாமரை வரவேற்றார்.முன்னாள் மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் முனைவர் ந. கெஜலட்சுமி, முனைவர் மு. மலர்விழி, தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் கல்பனா மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் பா. சம்பத்குமார், முனைவர் என். குமரகுரு, முனைவர் சரஸ்வதி, முனைவர் கலைவாணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.1964 முதல் 2025 வரை கல்லூரியில் பயின்ற 150-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரியின் உள்கட்டமைப்பு மேம்பாடு, கல்வித் தர உயர்வு, தற்போதைய மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர். கல்லூரியின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து உறுதுணையாக இருப்பதாக முன்னாள் மாணவர்கள் உறுதியளித்தனர்.மேலும், முன்னாள் மாணவர்களான எஸ்.எஸ். ரமேஷ்குமார், பாலாறு மருத்துவமனை மோகன், கருணாநிதி, ஆசிரியர்கள் பரசுராமன், பிரகாசம், முத்துக்குமார், சிவபிரகாசம், சமூக ஊடகங்களில் கல்வி- வேலைவாய்ப்பு விழிப்புணர்வாளர் மற்றும் செய்தி துறை மூத்த பத்திரிக்கையாளர், பண்பாளர் பாரத் நந்தகுமார் மற்றும் வணிகவரித் துறை அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கல்லூரியில் பயின்ற மலரும் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த கல்லூரி நிர்வாகத்திற்கும், நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த பேராசிரியர்களுக்கும் முன்னாள் மாணவர்கள் நன்றியைத் தெரிவித்தனர்.