காட்பாடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேர்காணல் முடிந்தும் பணியிட மாற்ற உத்தரவு கிடைக்காமல் கடும் அவதி!வேலூர், ஜூலை 8-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு பெற்ற நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களுக்கு வேறு பணியிடங்கள் வழங்கக் கோரி விண்ணப்பம் செய்தனர். இப்படி விண்ணப்பம் செய்த அவர்களை வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் நேர்காணல் செய்தார். நேர்காணல் முடிந்த நிலையில் இதுநாள் வரை அதற்கான உத்தரவுகள் வழங்கப்படாமல் கிடப்பிலே உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் பணி நியமனம் செய்யப்படும் இடங்களில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்க வேண்டும். அவர்களுக்குதான் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய உத்தரவு வழங்கப்படும். ஆனால் காட்பாடி வட்டத்தில் ஓராண்டு, 6 மாதங்கள், 2 ஆண்டுகள் என்று குறுகிய காலத்தில் பணி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் வேண்டி கிராம நிர்வாக அலுவலர்கள் விண்ணப்பம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் அவர் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு வழங்க வேண்டும் என்று கோட்டாட்சியரிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் மனு செய்துவிட்டு காத்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக நேர்காணல் முடிந்தும் மாற்றுப் பணி வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சொன்னால் அதுதான் உண்மை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் காட்பாடி வட்டத்தில் தாராபடவேடு, கழிஞ்சூர், பழைய காட்பாடி, காங்கேயநல்லூர் ஆகிய இடங்களுக்கு கடுமையான போட்டி கிராம நிர்வாக அலுவலர்களிடையே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு சாரரே திரும்பத் திரும்ப தாராபடவேடு, கழிஞ்சூர், பழைய காட்பாடி, காங்கேயநல்லூர் ஆகிய இடங்களில் மீண்டும் மீண்டும் அதாவது நான்கு முறை, மூன்று முறை என்று பணியாற்றுகின்றனரே தவிர புதிய நபர்கள் யாரையும் அங்கு பணியாற்ற விடுவதில்லை என்ற ஒரு பேச்சும் அடிபடுகிறது. ஆக மொத்தத்தில் இந்த மேற்கண்ட பகுதிகளில் பணியாற்றிய நபர்களை மீண்டும் பணியாற்ற வாய்ப்பு வழங்கக் கூடாது என்று சக கிராம நிர்வாக அலுவலர்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதில் சங்கங்களும் தங்களது தலையீட்டை பயன்படுத்தி பணியிட மாற்றம் பெற்று விட துடியாய் துடிப்பதும் குறிப்பிடத்தக்கது. வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் இந்த பணியிட மாற்றம் வழங்குவதில் யார் ?யார்? இதற்கு முன்னர் இந்த குறிப்பிட்ட பகுதிகளில் பணியாற்றி விட்டு மீண்டும் அதே இடத்தை குறி வைத்து தனக்கு பணி வழங்க கேட்கின்றனர் என்பதை பார்த்துவிட்டு அவர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும் என்று சக கிராம நிர்வாக அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். நியாயமான பணியிட மாற்றம் வழங்க வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் முன்வர வேண்டும். இந்த விஷயத்தில் யாரும் விமர்சனம் செய்யும் வகையில் நடந்து கொள்ள கூடாது என்று எதிர்பார்க்கின்றனர். இதனை வேலூர் மாவட்ட ஆட்சியராக வந்துள்ள லீலா அலெக்ஸ் மேற்பார்வையிட்டு இதில் வேறு எவ்வித குளறுபடிகளும், பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் பணியிட மாற்றம் வழங்க வேண்டும் என்று சில கிராம நிர்வாக அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது .ஆக மொத்தத்தில் மாவட்ட நிர்வாகம் காட்பாடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களை வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து நியமிப்பதில் முறையான நடவடிக்கையை எடுக்கிறதா? அல்லது வழக்கம் போல் முறைகேடான பணிகளை தொடர்ந்து செய்யுமா ?என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!வேலூர், ஜூலை 8-வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பி. எஸ். லீலா அலெக்ஸ் திடீரென ஆய்வு மேற்கொண்டார் .இந்த ஆய்வின்போது பிளாட்பாரத்தை அடைத்துக் கொண்டு கடை வைத்திருந்ததை கண்டறிந்து அந்த கடைகளை உடனடியாக அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அதேபோன்று வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செயல்படுத்தப்படும் இலவச கழிவறை மற்றும் கட்டணக் கழிவறைகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் பொதுமக்களை சந்தித்து தங்களுக்கு இந்த பேருந்து நிலையத்தில் உள்ள குறைபாடுகள், அசௌகரியங்கள் ஏதாவது உள்ளதா? என்றும் கேட்டு அறிந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆய்வின்போது வேலூர் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், வேலூர் வட்டாட்சியர் பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேட்டுப்பாளையம் 07.07.2026மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக பயிற்சி வகுப்பு வேதியியல் மற்றும் இயற்பியல்துறைசார்பாக “பணிவாய்ப்பு வழிகாட்டுதல்” குறித்து நடைபெற்றது. இதில் முனைவர் போ.சிவக்குமார் வேதியியல் துறை கௌரவ விரிவுரையாளர் வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் மோ.செந்தில்குமார், மாணவர்கள் மனவளத்தை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். முதல்வர் பொறுப்பு முனைவர் G.A ஜெயசங்கர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் திரு மகேஷ் துளசி Founder & CEO , Bodhi Academic Consulting , பணிவாய்ப்பு வழிகாட்டுதல் பற்றி மாணவர்களுக்கு Emotional Intelligence, visual & kinesthetic பற்றி எடுத்துரைத்தார். முனைவர் C. செல்வகுமார், இயற்பியல் துறை கௌரவ விரிவுரையாளர் நன்றி உரை நிகழ்த்தினார்.உணவு இடைவேளைக்கு பிறகு முன்னாள் சிறந்த மாணவர்கள் செல்வி M.ரோஜா & S.அர்ச்சினி ஆங்கில துறை பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியை மாணவர்கள் இடையே தங்கள் அனுபவத்தையும், கடின உழைப்பு விடாமுயற்சி செய்தியுடன் அனுபவத்தையும் எடுத்துரைத்தார். முனைவர் M.ஜெயலட்சுமி இயற்பியல்துறை கௌரவ விரிவுரையாளர், வரவேற்று முனைவர் K.சங்கர் வேதியியல்துறை கௌரவ விரிவுரையாளர் நன்றி உரை வழங்கினர். வேதியியல்துறை தலைவர் முனைவர் தி.சாந்தி மற்றும் இயற்பியல் துறை தலைவர் முனைவர் R.பாலன் உடன் இருந்தனர். முனைவர் தி.சாந்தி வேலைவாய்ப்பு மையம் சார்பில் TNPSC & TN Skill development free Coaching Class மற்றும் Career Guidence Campus Interview பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

காஞ்சிபுரத்தில் த.வெ.க.,வின் வெற்றிக்கு பாடுபட்டமதன்குமார் முதல் வரிசையில் அமரவைத்து அழகு பார்த்தார்வனத் துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் !காஞ்சிபுரம், ஜூலை 7 -காஞ்சிபுரத்தில் முதல்வர் விஜய்யின் 52வது பிறந்த நாளையொட்டி, த.வெ.க., சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்ட மேடையில் முதல் வரிசையில் மாற்றுத்திறனாளி வாலிபரை அமர வைத்து அழகு பார்த்தார், வனத் துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார்.அவர் டட்காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், த.வெ.க., சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கூட்டத்திற்கு காஞ்சிபுரம் நகர செயலாளர் மொய்தீன் தலைமை தாங்கினார்.வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத் துறை அமைச்சர் தென்னரசு, வனத் துறை அமைச்சர்ஆர்.வி.ரஞ்சித்குமார் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர்.த.வெ.க.,வின் கொள்கை பரப்பு இணை செயலாளர் லயோலா மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தமிழக அரசு 55 நாட்களில் மக்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்கள், தி.மு.க., – அ.தி.மு.க.,வினரால் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். ணஞகூட்டத்தில் வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் பேசும்போது; ‘காஞ்சிபுரம் பஸ் நிலையம் மூச்சு முட்டும் அளவுக்கு தினம் – தினம் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என, தி.மு.க., – அ.தி.மு.க.,வினர் மாறி மாறி பேசி வந்தது தான் மிச்சம். நான் அமைச்சராக பொறுப்பேற்ற 40 நாட்களில் காஞ்சிபுரத்திற்கு புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக பொன்னேரிக்கரை அருகே 10 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து முடித்துள்ளேன். இதற்கான பணிகள் ஒரு சில மாதங்களில் தொடங்கப்படும். இந்த ஆண்டு இறுதியில் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை குடியிருப்பு நண்பர்கள் 30-ஆண்டுகளுக்கு பின்னர் சந்திப்பு: நெகிழ்ச்சி கொண்டாட்டம்!திருப்பத்தூர்,ஜூலை7வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம், கேதாண்டப்பட்டியில் பழமை வாய்ந்த 50 ஆண்டுகளை நெருங்கும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை உள்ளது. இதில் அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்களுக்கு குடியிருப்புகள் உள்ளன. அந்த குடியிருப்பில் வசித்த அந்தக் கால பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக், பொறியியல் படித்த மாணவர்கள் தற்போது தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள், அரசு பணியாளர்கள், என பல்வேறு துறைகளில் அரசு பணிகளில் இருந்து வருகின்றனர்.இவர்களின் சந்திப்பு (நண்பர்கள் ஒன்று கூடல் விழா) நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை திருமண மண்டபத்தில் நடந்தது.இந்நிகழ்வுக்கு 89தில் வாணியம்பாடி முன்னாள் தினமலர் நிருபரும், தற்போதைய வேலூர் மாவட்ட மூத்த பத்திரிக்கையாளர் கே.எம். வாரியார் தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி மேலாளர் யோகசுந்தரம் வரவேற்றார். ஜான்சன்&ஜான்சன் பிரிவு ஒரகடம் மேலாளர் விஜயகுமார், தொழிலதிபர் வீரமணிகண்டன், மஸ்கட்டில் பொறியாளராக பணிபுரியும் லட்சுமிகாந்த், பொறியாளர் வெங்கடேஷ், தொழிலதிபர்கள் டி.கே.ரவி, கேபிள் லோகநாதன், வெள்ளியங்கிரி, திருப்பத்தூர் சர்க்கரை ஆலை பணியாளர்கள் சங்கர், வி.வி.செல்வராஜ, பார்த்தீபன்,, மற்றும் மகேந்திரன், ராஜேந்திரன், ஹரி, ரமேஷ், வெங்கட், கிரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.