
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!வேலூர், ஜூலை 8-வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பி. எஸ். லீலா அலெக்ஸ் திடீரென ஆய்வு மேற்கொண்டார் .இந்த ஆய்வின்போது பிளாட்பாரத்தை அடைத்துக் கொண்டு கடை வைத்திருந்ததை கண்டறிந்து அந்த கடைகளை உடனடியாக அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அதேபோன்று வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செயல்படுத்தப்படும் இலவச கழிவறை மற்றும் கட்டணக் கழிவறைகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் பொதுமக்களை சந்தித்து தங்களுக்கு இந்த பேருந்து நிலையத்தில் உள்ள குறைபாடுகள், அசௌகரியங்கள் ஏதாவது உள்ளதா? என்றும் கேட்டு அறிந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆய்வின்போது வேலூர் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், வேலூர் வட்டாட்சியர் பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.










Leave a Reply