
திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை குடியிருப்பு நண்பர்கள் 30-ஆண்டுகளுக்கு பின்னர் சந்திப்பு: நெகிழ்ச்சி கொண்டாட்டம்!திருப்பத்தூர்,ஜூலை7வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம், கேதாண்டப்பட்டியில் பழமை வாய்ந்த 50 ஆண்டுகளை நெருங்கும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை உள்ளது. இதில் அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்களுக்கு குடியிருப்புகள் உள்ளன. அந்த குடியிருப்பில் வசித்த அந்தக் கால பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக், பொறியியல் படித்த மாணவர்கள் தற்போது தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள், அரசு பணியாளர்கள், என பல்வேறு துறைகளில் அரசு பணிகளில் இருந்து வருகின்றனர்.இவர்களின் சந்திப்பு (நண்பர்கள் ஒன்று கூடல் விழா) நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை திருமண மண்டபத்தில் நடந்தது.இந்நிகழ்வுக்கு 89தில் வாணியம்பாடி முன்னாள் தினமலர் நிருபரும், தற்போதைய வேலூர் மாவட்ட மூத்த பத்திரிக்கையாளர் கே.எம். வாரியார் தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி மேலாளர் யோகசுந்தரம் வரவேற்றார். ஜான்சன்&ஜான்சன் பிரிவு ஒரகடம் மேலாளர் விஜயகுமார், தொழிலதிபர் வீரமணிகண்டன், மஸ்கட்டில் பொறியாளராக பணிபுரியும் லட்சுமிகாந்த், பொறியாளர் வெங்கடேஷ், தொழிலதிபர்கள் டி.கே.ரவி, கேபிள் லோகநாதன், வெள்ளியங்கிரி, திருப்பத்தூர் சர்க்கரை ஆலை பணியாளர்கள் சங்கர், வி.வி.செல்வராஜ, பார்த்தீபன்,, மற்றும் மகேந்திரன், ராஜேந்திரன், ஹரி, ரமேஷ், வெங்கட், கிரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.










Leave a Reply