முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாள்: தாய் தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை!வேலூர், மே 21-மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளையொட்டி, தாய்த் தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மரியாதையுடனும், அமைதியான சூழலிலும் நடைபெற்றது.இந்த நிகழ்வில் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தினம் அனுசரிக்கப்பட்டதுடன், உயிர்நீத்தோருக்கு வீரவணக்கமும் செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சி ராணுவ வீரர் ரஞ்சித் குமார் தலைமையில், அவரது தோழர்களுடன் இணைந்து சர்வதேச இனப்படுகொலை நாள் நினைவாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.மேலும், இந்நிகழ்வில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி, உயிரிழந்தோரின் நினைவுகளைப் போற்றினர்.

பொன்னை அருகே வண்டல் மண் கொள்ளையில் ஈடுபட்ட 2 லாரிகள், 1 ஜேசிபி பறிமுதல்: ஓட்டுநர்கள் தப்பியோட்டம்!வேலூர், மே 31-வேலூர் மாவட்டம்,,பொன்னை அடுத்த சீனிவாசபுரம் ஏரியில் வண்டல் மண் கொள்ளையர்கள் லாரி மற்றும் ஜேசிபி கொண்டு வண்டல் மண்ணை கொள்ளையடிப்பதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக புகார் வரப்பெற்றது இதை எடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக உத்தரவின் பேரில் உன்னை போலீசார் சீனிவாசபுரம் ஏரிக்கு விரைந்து சென்றனர். அங்கு 2 லாரிகள் மற்றும் ஜேசிபி உதவியுடன் வண்டல் மண் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தனிப்பிரிவு போலீசார் மற்றும் கிராம இளைஞர்கள் சுற்றி வளைத்தனர். அவர்களை பார்த்தவுடன் வாகனங்களை அப்படியே போட்டுவிட்டு ஓட்டுநர்கள் தப்பியோடி தலைமறைவாகி விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மர்ம நபர்கள் விட்டுச் சென்றவாகனங்களை பறிமுதல் செய்துபோலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரித்த மேனல்லூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு !செய்யாறு, மே 21 -செய்யாறு அடுத்த மேனல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் கடை கோடியில் அமைந்துள்ளது மேனல்லூர் கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடப்பாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 62 மாணவ – மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், 60 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி விகிதம் 98 சதவீதமாகும். தமிழ்ச்செல்வன் என்ற மாணவன் 500க்கு 479 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்துமதி என்ற மாணவி 469 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், பவனிஷா என்ற மாணவி 456 மதிப்பெண்கள் எடுத்து 3ம் இடத்தையும் பிடித்துள்ளார்.தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் தயாளன் இனிப்பு வழங்கி பாராட்டினார். இதேபோல் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், உறுப்பினர்கள், எஸ்.எம்.சி., தலைவர், உறுப்பினர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவிகளை பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டு தலைமை ஆசிரியர் தயாளனுக்கும் – சக ஆசிரியர்களுக்கும் தங்களது நன்றியை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பேரணாம்பட்டில் புதிய வட்ட வழங்கல் அலுவலர் பொறுப்பேற்பு!வேலூர், மே 20-பேரணாம்பட்டு தாலுகாவின் புதிய வட்ட வழங்கல் அலுவலராக டாக்டர் டி. எஸ். திவ்யா பிரணவம் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு தாசில்தார் கே ராஜ்குமார், சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தார் நதியா, வருவாய் ஆய்வாளர்கள் குமார்,. சரவணன், கிராம நிர்வாக அலுவலர்கள் எம். உதயகுமார், ஜெய்சங்கர், . எம். சௌந்தர்யா, துரைமுருகன், தனசேகரன், . அருண்குமார், . நவீன் குமார், வடிவேலு, . கிராம உதவியாளர்கள் கமலாபுரம் சுரேஷ்குமார், வெங்கடேச பாபு, ஆர். பாஸ்கரன், எஸ். சுபாஷ் சந்திரபோஸ், எம். அறிவழகன், சின்னசாமி, . புகலூர் சுரேஷ்குமார், வரதன், அனிதா, ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் வாழ்த்து கூறினர்.