NEET தேர்வு அரைஞாண் கயிறை அறுக்க கல்லைப் பயன்படுத்திய பெற்றோர் – காட்பாடியில் அரங்கேறிய சம்பவம்!வேலூர், மே 4-மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில், வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் ஒரு சுவாரசியமான நிகழ்வு அரங்கேறியது.தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, மாணவர் ஒருவர் அணிந்திருந்த அரைஞாண் கயிறு விதிமுறைகளின்படி அனுமதிக்கப்படாது என தெரியும். அந்த நிலையில் கயிறை அகற்ற கத்தரிக்கோல் அல்லது பிளேடு போன்ற பொருட்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.இதனையடுத்து, தேர்வு மையத்திற்கு வெளியே காத்திருந்த மாணவனின் பெற்றோர் அங்கிருந்த ஒரு கருங் கல்லைக் கொண்டு கயிறைத் தேய்த்து அறுத்து அகற்றினர். பிறகு கயிறு அகற்றப்பட்டதையடுத்து, அந்த மாணவர் நிம்மதியுடன் தேர்வு எழுத உள்ளே அனுமதிக்கப்பட்டார்.தேர்வு விதிகளால் ஏற்பட்ட இந்தச் சிறு பரபரப்பு அங்கிருந்த மற்ற பெற்றோர்களிடையே பேசுபொருளானது.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை குடும்பத்துடன் சேர்த்த தமுமுகவினர்!வேலூர், மே 4-வேலூர் மேற்கு மாவட்டம், குடியாத்தத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில்வேப்பூர் கிராமத்தில் இருப்பதாக தகவல் வந்தது.இதை அறிந்து அங்கு சென்ற தமுமுகவினர் பெண்ணைப் பற்றி விசாரித்து அவரின் குடும்பம் கீழ்விஷாரம் நகரத்தில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அங்குள்ள தமுமுக நிர்வாகி மூலம் அவரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் அவருடைய குடும்பத்தினர் குடியாத்தம் வேப்பூர் கிராமத்திற்கு விரைந்து வந்தனர்.பின்னர் தமுமுக நிர்வாகிகள் அப்பெண்ணையும், அவரின் குடும்பத்தையும் குடியாத்தம் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்து அங்குகிருந்து முறைப்படியாக அவருடைய குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டார்.முன்னதாக வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அப்பெண்ணிற்கு இருக்க இடம், உண்ண உணவு கொடுத்து தேவையான உதவிகள் செய்தனர்.இந்த மனித நேய பணியில்S.ஷஹாபுத்தீன்,தலைவர்,தமுமுக,மற்றும்மனிதநேய மக்கள் கட்சிகுடியாத்தம்வேலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்!வேலூர், மே 4-விவசாயிகளே தயவுசெய்து உங்கள் விலை பொருட்களையும், விளைந்த நெல்லையும் வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.வேலூர் மாவட்டம், வேலூர் விற்பனைக் குழு செயலாளரின் அறிவுரையின்படி, வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தினை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்யுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அணைக்கட்டு தாலுகா – தார்வழி, அணைக்கட்டு, அப்புக்கல் உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று விவசாயிகளை தனித்தனியாக சந்தித்து, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் பயன்கள் குறித்து அலுவலர் எடுத்துரைத்தார். விவசாயிகளே தயவுசெய்து உங்கள் விளை பொருட்களையும், விளைந்த நெல்லையும் வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்யும் வகையில், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.இவ்விழிப்புணர்வு நடவடிக்கையின் போது துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த பணிகளில் இளநிலை கண்காணிப்பாளர் செ. சுரேஷ்குமார் மற்றும் அலுவலக உதவியாளர் கி. அன்பரசு, துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கி விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இன்று (மே 4) வாக்கு எண்ணிக்கை – தமிழகத்தில் யார் பெறுவார் இந்த அரியாசனம்!வேலூர், மே 4-தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.தமிழ்நாட்டில் மொத்தம் 62 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.முதலில் 8:00 தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு EVM-ல் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். முன்பெல்லாம் நண்பகலிலேயே யார் ஆட்சி என்பதை கணித்துவிட முடியும்.ஆனால் தற்பொழுது உள்ள தொழில்நுட்பம் வளர்ச்சி காரணமாக விரைவில் தெரிந்து கொள்ளலாம்.தமிழகம் மட்டுமல்லாது மேற்கு வங்க தேர்தலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாலாஜா வன்னிவேடு புத்த விஹாரில் புத்த பூர்ணிமா விழா: குடியாத்தம் தலித்குமார் பங்கேற்பு!வேலூர், மே 3-பன்னாட்டு பௌத்த இளைஞர் சங்கம் தமிழ்நாடு கிளை சார்பில் வாலாஜா வன்னிவேடு பாலாற்றங்கரையில் அமைந்துள்ள புத்த விஹாரில் புத்த பூர்ணிமா (ஜெயந்தி) விழா நடைபெற்றது. மாநிலத் தலைவர் பொன். புருஷோத்தமன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கே.குசேலன் வரவேற்றார். அதன் பிறகு புத்த பூஜை மற்றும் தியானம் அனுஷ்டிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எழுத்தாளர். கவிஞர். யாழன்ஆதி சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மூத்த தலைவர் பி. லோகநாதன், பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய குடியரசு கட்சி கொள்கை பரப்பு செயலாளர் தன்ராஜ், மாவட்ட தலைவர் எஸ். தயாளன், பி. ஏகாம்பரம், வேலூர் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், கே.சுசீந்திரன், பௌத்த சமூக கல்வி அறக்கட்டளை தலைவர் இரா.சி.தலித் குமார் மற்றும் சங்க நிர்வாகிகள், உபாசகர்கள், பெண்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் சங்க பொருளாளர் எஸ்.கருணாகரன் நன்றி கூறினார்.

காட்பாடி ரெட் கிராஸ் சங்கம் சார்பில் 2வது நாளாக நீர் மோர் வழங்கல்!வேலூர், மே 3-கடும் கோடை வெயிலை முன்னிட்டு காட்பாடி ரெட் கிராஸ் சங்கம் சார்பில் 2வது நாளாக நீர் மோர் வழங்கி பொதுமக்களை குளிர வைத்தனர்.வேலூரில் கடும் வெயிலை முன்னிட்டு பொதுமக்களுக்கும், பாதசாரிகளுக்கும் காட்பாடி ரெட் கிராஸ் சங்கமும், காந்திநகர் புத்து மாரியம்மன் ஆலய நிர்வாகிகளும் இணைந்து 2வது நாளான இன்றும் கத்திரி வெயில் முடிவடையும் நாளான மே 28ஆம் தேதி வரை தினமும் நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை நீர் மோர் வழங்கும் நிகழ்வு 2வது நாளாக நடைபெற்றது.காட்பாடி காந்திநகர், தனபாக்கியம் திருமண மண்டப பேருந்து நிறுத்தம் புத்து கோயில் அருகில் நீர் மோர் வழங்கும் நிகழ்வு 2வது நாளாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு காட்பாடி ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத் தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தனது 63வது பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கி வைத்தார்.மேலாண்மைக்குழு உறுப்பினர் தணிகைசெல்வம், அமுதா, செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளர் வி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட மேலாண்மை குழு உறுப்பினர் முனைவர். ஆர். சீனிவாசன், காட்பாடி அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, மருத்துவக் குழு தலைவர் டாக்டர். வீ.தீனபந்து, மேலாண்மை குழு உறுப்பினர்கள் நாராயணா தங்கவேல் நாடார், எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், ஆர்.ராதாகிருஷ்ணன், ஏ.ஸ்ரீதரன் ஜெயின், ஆனந்தகுமார், ஆர். சுதாகர், எஸ்.தன்வின், எஸ்.தைவிக், செ.ஜ.சோமசுந்தரம்,எம்.டீக்காராமன், எஸ்.பன்னீர்செல்வம், மனோகர், லக்ஷ்மணன், குமரவேல், பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நகர பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பொதுமக்கள், நடைபாதையில் செல்வோர், வியாபாரிகள் உள்ளிட்ட இந்த சாலையை கடந்து சென்ற அனைவருக்கும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை தொடர்ந்து இடைவிடாது நீர் மோர் வழங்கினர்.

வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து வாங்கும் பணியை ஆய்வு செய்த சுகாதார அலுவலர்!வேலூர், மே 3 -வேலூர் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் உத்தரவின் பேரில், வேலூர் மாநகராட்சி காட்பாடி மண்டலம் 1, வார்டு 9 -காந்திநகர் பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கில் குப்பைகளை உரமாக்கும் பணியை மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வீடு வீடாகச் செல்லும் தூய்மை பணியாளர்கள் மற்றும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து வாங்குகின்றனரா? என நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அனைத்து குப்பைகளையும் ஒரே கலவையாக வழங்கிய இல்லத்தரசிகளுக்கு சில அறிவுரைகளை சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் வழங்கினார். மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்து இல்லந்தோறும் வாங்க வேண்டும் என தூய்மை பணியாளர்களுக்கும் சில அறிவுரைகளை அப்போது அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.