Archives
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Month:
May 2026
வேலூரில் ஆடுகள் திருட்டு: பரதராமி சந்தையில் விற்க முயன்ற இருவர் கைது!வேலூர்,மே 2-வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஆடுகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவரது ஆட்டு கொட்டையிலிருந்து ஆடுகள் அடிக்கடி திருடு போனது. இதையடுத்து விஜயகுமார் தனது ஆடுகள் எங்காவது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார்களா? என்று ஒவ்வொரு சந்தையாக தேடிச் சென்றார். அப்போது பரதராமி சந்தைக்குச் சென்று பார்த்தபோது அங்கு அவரின் ஆடுகளை இரண்டு பேர் விற்பனைக்காக கட்டி வைத்திருந்ததை பார்த்தார். உடனே அங்கிருந்து காட்பாடி போலீசாருக்கு விஜயகுமார் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து காட்பாடி போலீசார் விரைந்து சென்று பரதராமி சந்தையில் விஜயகுமாருக்குச் சொந்தமான ஆடுகளை கடத்திச் சென்று விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த கோபி (23), சுரேஷ் (40) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். பின்னர் காட்பாடி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் விஜயகுமாருக்கு சொந்தமான ஆடுகளை திருடி விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். இந்த ஆடுகளை திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் காட்பாடி போலீசார்.
காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பணியாளருக்கு பணி நிறைவு: ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் பாராட்டு!வேலூர், மே 2-காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி பணிநிறைவு பெற்ற ஆர்.ஜீவா, ஆய்வக உதவியாளராக பணிநிறைவு பெற்ற டி.மணி ஆகிய இருவருக்கும் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா தலைமை தாங்கினார். பள்ளி உதவித்தலைமையாசிரியர் எம்.மாரிமுத்து வரவேற்று பேசினார். ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட தலைவர் முனைவர். செ.நா.ஜனார்த்தனன், அ.கலைச்செல்வன், உயர்நிலை உதவி தலைமையாசிரியர் பி.கணேசன், இடைநிலை உதவி தலைமையாசிரியை பி.ரோசலின் பொன்னி உள்ளிட்டோர் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி பாராட்டி பேசினர்.ஆசிரியர்கள் சுகந்தி, திலகலட்சுமி, எஸ்.வெங்கடேசன், நிவேதிதா, ஆகியோர் வாழ்த்தி பேசினர்.அறிவியல் ஆசிரியர் பி.பாலச்சந்தர் நன்றி கூறினார்.
மேட்டுப்பாளையம் 140 ஆம் ஆண்டு தொழிலாளர் தினத்தை சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சிநடைபெற்றது
1
…
11
12
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.