வேலூரில் ஆடுகள் திருட்டு: பரதராமி சந்தையில் விற்க முயன்ற இருவர் கைது!வேலூர்,மே 2-வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஆடுகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவரது ஆட்டு கொட்டையிலிருந்து ஆடுகள் அடிக்கடி திருடு போனது. இதையடுத்து விஜயகுமார் தனது ஆடுகள் எங்காவது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார்களா? என்று ஒவ்வொரு சந்தையாக தேடிச் சென்றார். அப்போது பரதராமி சந்தைக்குச் சென்று பார்த்தபோது அங்கு அவரின் ஆடுகளை இரண்டு பேர் விற்பனைக்காக கட்டி வைத்திருந்ததை பார்த்தார். உடனே அங்கிருந்து காட்பாடி போலீசாருக்கு விஜயகுமார் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து காட்பாடி போலீசார் விரைந்து சென்று பரதராமி சந்தையில் விஜயகுமாருக்குச் சொந்தமான ஆடுகளை கடத்திச் சென்று விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த கோபி (23), சுரேஷ் (40) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். பின்னர் காட்பாடி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் விஜயகுமாருக்கு சொந்தமான ஆடுகளை திருடி விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். இந்த ஆடுகளை திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் காட்பாடி போலீசார்.