காஞ்சிபுரம் ‘பார் கவுன்சில்’ தேர்தல்: போட்டியின்றி தலைவர் – துணைத் தலைவர் தேர்வு !காஞ்சிபுரம், ஜூன் 7 -காஞ்சிபுரம் ‘பார் கவுன்சிலர்’ தேர்தலில் தலைவர் – துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகில் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ‘பார் அசோசியஷன் சங்கம்’ உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ‘பார் கவுன்சிலில் தேர்தல் நடத்தப்பட்டு, தலைவர் – துணைத் தலைவர் – செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். வெற்றி பெற்றவர்கள் பொறுப்பாளர்களாக அறிவிப்பார்கள். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்றைய தினத்தன்று ‘பார் கவுன்சில் ஆஃப் இந்தியா’ தேர்தல் நடத்த காஞ்சிபுரம் ‘பார் கவுன்சிலுக்கு தடை விதித்தது.இந்த தடையை எதிர்த்து வழக்கறிஞர் கார்த்திக் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ‘பார் கவுன்சில்’ தேர்தல் நடத்த அனுமதி வழங்குமாறு வாதாடினார். உயர்நீதிமன்ற அமர்வு இரண்டு நீதிபதிகள் மனுவை விசாரித்து தேர்தல் நடத்தி தலைவர் – துணைத் தலைவர் – செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவிப்பு செய்ய வேண்டும் என, ஆணை பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம்’பார் அசோசியேஷன் சங்க தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் யார் என்று முறைப்படி அறிவிக்கப்பட்டனர்.இதில் புதிய தலைவர் ஜெகன், துணைத்தலைவர் கார்த்திக் போட்டியின்றி வெற்றி பெற்றனர். அதை தொடர்ந்து செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில், 408 வாக்காளர்களை கொண்ட இந்த தேர்தலில், 277 வாக்குகள் பதிவாகியது. செயலாளர் பதவிக்கு சத்யா தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து துணை தலைவர் பதவிக்கு செல்வமணியும், பொருளாளர் பதவிக்கு யுவராணியும் தேர்வு செய்யப்ட்டனர். நூலகர் விஷ்ணு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ‘பார் கவுன்சிலில்’ உள்ள வழக்கறிஞர்கள் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.