தவெக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கல்!வேலூர், ஜூன் 16-வேலூர் மேற்கு மாவட்டம் 34 வது வார்டு அரசமரப்பேட்டையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு, வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமையிலும், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். எம்.வினோத் கண்ணன் முன்னிலையிலும், ஸ்கூல் பேக் மற்றும் நோட்டுப் புத்தகங்கள், பள்ளி கல்வி உபகரணங்கள் என்று சுமார் 300 மாணவ, மாணவிகளுக்கு 34 வது வார்டு தவெக நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.