கணியம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி!வேலூர், ஜூன் 7-திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவாஜி(38). இவர் இருசக்கர வாகனத்தில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கணியம்பாடி அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கணியம்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு இறந்து கிடந்த சிவாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கணியம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாஜி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.