பொன்னை அருகே வண்டல் மண் கொள்ளையில் ஈடுபட்ட 2 லாரிகள், 1 ஜேசிபி பறிமுதல்: ஓட்டுநர்கள் தப்பியோட்டம்!வேலூர், மே 31-வேலூர் மாவட்டம்,,பொன்னை அடுத்த சீனிவாசபுரம் ஏரியில் வண்டல் மண் கொள்ளையர்கள் லாரி மற்றும் ஜேசிபி கொண்டு வண்டல் மண்ணை கொள்ளையடிப்பதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக புகார் வரப்பெற்றது இதை எடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக உத்தரவின் பேரில் உன்னை போலீசார் சீனிவாசபுரம் ஏரிக்கு விரைந்து சென்றனர். அங்கு 2 லாரிகள் மற்றும் ஜேசிபி உதவியுடன் வண்டல் மண் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தனிப்பிரிவு போலீசார் மற்றும் கிராம இளைஞர்கள் சுற்றி வளைத்தனர். அவர்களை பார்த்தவுடன் வாகனங்களை அப்படியே போட்டுவிட்டு ஓட்டுநர்கள் தப்பியோடி தலைமறைவாகி விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மர்ம நபர்கள் விட்டுச் சென்றவாகனங்களை பறிமுதல் செய்துபோலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.