பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடிநீர் மின் மோட்டார் திருட்டு: ஆய்வாளர் பிரபு நடவடிக்கை எடுப்பாரா?வேலூர்,ஜூன் 9-வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சில விஷமிகள் தவறாக பயன்படுத்திக் கொண்டு சில தினங்களுக்கு முன்பு 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குடிநீர் விநியோகம் செய்யும் மின் மோட்டாரை திருடிச் சென்றுள்ளனர். இதுவரை இது போன்ற திருட்டு சம்பவங்கள் இந்த பள்ளியில் நடந்ததேயில்லை. இளைஞர்களை ஊக்குவிக்கவே இப்பள்ளியில் விளையாட்டுக்காக அவ்வப்போது திறந்து வைக்கப்படும். இதை தவறாக பயன்படுத்திக் கொண்டு ஒரு சில விஷமிகள் இப்பள்ளியில் குடிநீர் விநியோகத்துக்கு பயன்படுத்தப்படும் மின்மோட்டாரை திருடிச் சென்றுள்ளனர். இதனால் பள்ளி திறந்து இயங்கும் வேளையில் குடிநீர் வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் தவியாய் தவித்து வருகின்றனர். எனவே இது குறித்து பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் பிரபு தீவிர விசாரணை செய்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து மின்மோட்டாரை மீட்க துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே புதிய லைன், எம்.ஜி.ஆர். நகர், கலைஞர் நகர்., ஜெ. ஜெ நகர், எம்.ஜி.ஆர். நகர், பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கருப்புசாமி பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் நடவடிக்கை எடுக்காமல் மனுவை கிடப்பில் போட்டுவிட்டு காவல் துறையில் உள்ள ஆய்வாளர் மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் வரை அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் மின் மோட்டாரை போர்க்கால அடிப்படையில் மீட்டு பள்ளியில் மீண்டும் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

செய்தியாளர்கள் பெயரை பயன்படுத்தி காவல்துறையினரை மிரட்டி பல்வேறு காரியங்களை சாதித்து பணம் பார்க்கும் அவலம்!வேலூர், ஜூன் 8-வேலூர் மாவட்டம் என்றாலே தமிழகத்தில் போலி செய்தியாளர்கள் நிறைந்த மாவட்டமாகும். திருப்பூரை அடுத்து வேலூர் மாவட்டம் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது செய்தியாளர் என்ற போர்வையில் அந்த பெயரை பயன்படுத்தி காட்பாடி, விருதம்பட்டு, பிரம்மபுரம், திருவலம், பொன்னை ஆகிய காவல் நிலையங்களில் உள்ள நிலைய எழுத்தர் முதல் காவல் ஆய்வாளர் வரை அனைவரையும் மிரட்டி முதல் தகவல் அறிக்கையை மாற்றுவது, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்காக பரிந்துரை செய்வது என்று தகாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் ஒருவர். அவருக்கு துணையாக 2 செய்தியாளர்கள் என்ற போர்வையில் போலி செய்தியாளர்கள் காரில் வலம் வந்த வண்ணம் உள்ளனர். எங்கு சென்றாலும் வழிப்பறி, திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களது பெயரை எஃப்.ஐ.ஆரில் இருந்து நீக்குவது, சிலரின் பெயரை சேர்ப்பது என்று இவர்களது விருப்பம் போல் ஒரு கும்பல் செயல்பட்டு பணம் பார்த்து வருகிறது. இதற்கு தலைமையாக ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ என்ற திரைப்படத்தின் கதை ஆசிரியரின் பெயரை கொண்ட ஒரு நபர் இதற்கு கேங் லீடராக செயல்பட்டு வருகிறாராம். இவருக்கு ஒரு போலி செய்தியாளர் கும்பல் கூஜா தூக்கிக் கொண்டு இவரது பின்னால் சுற்றித் திரிகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. கொலை வழக்கில் கூட குற்றவாளிகள் பெயரை நீக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி காவல் நிலையத்திலேயே அமர்ந்து இந்த கும்பல் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இது தனி பிரிவு போலீசாருக்கு நன்கு தெரிந்திருந்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று மேற்சொன்ன காவல் நிலையங்களில் எந்த தகவல் என்றாலும் இவர்களை கேட்காமல் நடைபெறாது என்ற வண்ணம் இவர்கள் மாற்றி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு அசாதாரண சூழ்நிலைக்கு காவல் நிலையத்தை மாற்றி விட்டது இந்த கும்பல் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இதுபோன்ற அதிர்ச்சி தகவல்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் காதுகளுக்கு எட்டியதா? இல்லையா? என்பது சிதம்பர ரகசியமாகவே உள்ளது. தனிப்பிரிவு போலீசார் நன்கு குறட்டை விட்டு தூங்குகின்றனர். காரணம் இவர்களும் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் உள்ளனர் என்பது அதிர்ச்சிகரமான தகவலாகும். இப்படி காவல் நிலையங்களை ஆட்டிப்படைக்கும் கும்பலை காவல் நிலையத்திற்குள் சேர்க்காமல் இருப்பதற்கு உண்டான வழி வகைகளை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், குறிப்பாக வடக்கு மண்டல ஐஜி மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோர் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். எந்த வழக்காக இருந்தாலும் உள்ளே சென்றால் இவர்கள்தான் என்ன என்று விசாரித்து வரும் நபரிடம் பணம் பறிப்பது ஒரு சிறு தொகையை நிலைய எழுத்தரிடம் கொடுத்து விட்டு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து கொடுத்துவிட்டு பெரிய தொகையை தங்களது பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வெளியேறுவதை தொடர்ந்து வழக்கமாக கொண்டுள்ளது இந்த கும்பல் என்று சொன்னால் அதுதான் உண்மையிலும் உண்மையாகும். ஆக மொத்தத்தில் குற்றவாளிகளை தப்பிக்க விடுவது, திருட்டு வாகனங்களை எடுத்துக் கொள்வது, விற்பனை செய்வது இப்படி பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் ஒவ்வொன்றாக கூறப்படுகிறது. மாலை 6 மணி ஆனதும் அதே காவல் நிலையத்தில் உள்ள நிலைய எழுத் தரையோ அல்லது உதவி ஆய்வாளர்கள் யாரையாவது குறி வைத்து மது பாட்டில்களையும் அவர்களிடமே பெற்றுச் செல்வது மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . இதுகுறித்து யாராவது தட்டி கேட்டால் இங்கு எல்லாம் நாங்கள் தான், எங்களை மீறி எதுவும் நடக்காது என்று மார்தட்டி கொள்கின்றனர் கொக்கரிக்கின்றனர் இந்த செய்தியாளர்கள் என்ற மாஃபியா கும்பல். இவர்களுக்கு வேலூர் மாவட்ட காவல்துறை காவல் நிலையத்திற்குள் வராதவாறு நடவடிக்கை எடுக்குமா? அல்லது காப்பு கட்டுமா? அல்லது இவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமா?.இதில் எந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக மேற்கொள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் தனிப்பிரிவு போலீசாரை கூண்டோடு இடமாற்றம் செய்துவிட்டு புதிய நபர்களை பணிக்கு அமர்த்தினால் மட்டுமே இதுபோன்ற அவலங்கள் நடைபெறாமல் தடுக்கலாம் என்று சமூக ஆர்வலர்களும், இவர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் கதை கதையாக கூறுகின்றனர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா? அல்லது கண்டும் காணாமல் விட்டு விடுவாரா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

வேட்டைக்கு சென்ற இருவர் கைது: இரண்டு நாட்டு துப்பாக்கிகள், 26 தோட்டாக்கள் பறிமுதல்வேலூர், ஜூன் 8-வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே வனவிலங்குகளை சிலர் வேட்டையாடுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் மேல்பட்டி காவல் துறையினர் குடியாத்தம் அருகே உள்ள வனப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க இருவர் நாட்டுத் துப்பாக்கிகளுடன் திரிந்து கொண்டிருந்தனர். இவர்களை பின்தொடர்ந்து சென்ற காவல் துறையினர் அவர்களை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அவர்கள் வன விலங்குகளை வேட்டையாடச் சென்றது உறுதி யானது. இதை தொடர்ந்து காவல் துறையினர் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அத்துடன் அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட கொண்டு வந்த இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 26 தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழங்குடியின மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கிய சமூக சேவகர்!வேலூர், ஜூன் 8-வேலூர் மாவட்டம், குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட காளியம்மன்பட்டி சாமியார் மலையில் உள்ள அன்னை சோனியா காந்தி நகரில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களைச் சார்ந்த 35 மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.காளியம்மன்பட்டி இளைஞர்கள் சார்பில் ஆண்டுதோறும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.இதன்படி, காளியம்மன்பட்டி அன்னை சோனியா காந்தி நகரில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த 35 மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா 7.6.2026 அன்று நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை சமூக ஊடகங்களில் கல்வி, வேலைவாய்ப்பு விழிப்புணர்வு தகவல்களை அளித்து வரும் சமூக சேவகர் தி. நந்தகுமார் வழங்கி வாழ்த்தி பேசினார்.

செதுக்கரை மலை உச்சியில் உள்ள ஆகாய லிங்கேஸ்வரர் சிவலிங்கம் சமூக விரோதிகளால் உடைப்பு!வேலூர், ஜூன் 8-வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள செதுக்கரை மலை உச்சியில் ஆகாய லிங்கேஸ்வரர் சமேதரராக அமையப் பெற்றுள்ளது. நூற்றாண்டுகளாக பலர் இந்த மலை உச்சியில் உள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வருகின்றனர். இந்த மலையில்9 சித்தர்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இந்த மலை மீது உள்ள ஆகாய லிங்கேஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரர் ஆகிய சிலைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூகவிரோதிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை அறிந்த இந்து முன்னணியினரும், செதுக்கரை மலையைச் சுற்றியுள்ள சிவ பக்தர்களும் ; இந்துக்களும் ஒன்றிணைந்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.இதில் மாவட்ட ,நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

குடியாத்தம் பிரம்மாஸ் சிபிஎஸ்சி பள்ளியில் கல்வித்துறை ஆய்வு நடத்த வேண்டும் :மாவட்ட ஆட்சியருக்கு அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் புகார் மனு அளிப்பு!வேலூர், ஜூன் 7-வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆர். எஸ். ரோடு அருகில் பிரம்மாஸ் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 850 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தாளாளர் ஆர். பி. செந்தில். இவர் ஒரு அரசியல் பிரமுகராக உள்ளார். இப்பள்ளியின் பின்புறத்தில் தீப்பெட்டி சம்பந்தமான மிகப்பெரிய தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வேலை மற்றும் உற்பத்தி செய்து வருபவர்களை பிரம்மாஸ் பள்ளியில் இருக்கும் லைவ் கேமராவில் பார்த்து தொழிற்சாலையில் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களையும் கண்காணித்து வருகிறார் செந்தில். ஒரு பள்ளியை நிர்வகிக்கும் பள்ளி நிர்வாகம் பள்ளி மாணவர்களை மட்டும் கண்காணிக்க வேண்டும். ஆனால் இந்த பள்ளி நிர்வாகம் சட்டத்திற்கு புறம்பாக பள்ளியின் பின்புறத்தில் உள்ள தீப்பெட்டி தொடர்பான தொழிற்சாலையை நடத்தி வருகிறார் கேமரா மூலம் கண்காணிப்பு செய்து வருகிறார்.மேலும் இந்த பள்ளியின் கிளைப் பள்ளிகள் குடியாத்தம் பகுதியில் மட்டும் தரணம்பேட்டை, கூட நகரம் மற்றும் பல்வேறு இடங்களில் குறைந்தது ஐந்து கிளை பள்ளிகள் வைத்து பிரம்மாஸ் பேரிலேயே இயங்கி வருகிறது. மேலும் ஒரு சிபிஎஸ்சி பள்ளி என்று இருந்தால் கிளை எதுவும் இருக்கக் கூடாது என விதி உள்ளது. ஆனால் இந்தப் பள்ளியில் பிரம்மாஸ் என்ற பெயரில் குடியாத்தம் பகுதியிலேயே பல்வேறு கிராமங்களில் பிரம்மாஸ் கிளை பள்ளிகள் உள்ளன. இவர் அரசியல் பிரமுகர் என்பதால் முன்னர் இருந்த திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பள்ளியின் நிர்வாகத்திற்கு ஆதரவாக இருந்து வந்தது. மேலும் இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் யாராவது இது தொடர்பான சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனு அனுப்பினால் மனு அனுப்பியுள்ள சமூக ஆர்வலர்களை இவர் மிரட்டுவது மற்றும் அவர்களை பயமுறுத்தும் வகையில் காவல்துறையில் இருக்கும் சில உயர் அதிகாரிகளை வைத்து மிரட்டுவது மற்றும் பள்ளியின் நிர்வாகம் ஒரு அரசியல் பிரமுகர் என்பதால் அவரிடம் இருக்கும் அடியாட்களை வைத்து மிரட்டுவதும், துன்புறுத்துவதும் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களையும் செய்து வருவதை இவர் தொடர்கதையாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த பள்ளிக்கு கல்வி துறையில் உள்ள ஒரு குழுவினை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெட்ட வெளிச்சத்துக்கு வரும். மேலும் இந்த பள்ளியின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகளையும், மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணம் அரசு நிர்ணயத்துள்ள கல்வி கட்டணத்திற்கு மேல் கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது என்பது ஒரு கூடுதல் அதிர்ச்சி தகவலாகும். எனவே இப்பள்ளியின் வெளிப்புறத்தில் உள்ள அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டணத் தொகையை தகவல் பலகையில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது அரசு விடுத்துள்ள உத்தரவு ஆகும். ஆனால் இப்பள்ளியில் தகவல் பலகையில் இதுநாள் வரையில் எவ்விதமான தகவலும் எழுதுவதில்லை, எழுதப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தாங்கள் நேர்மையான அதிகாரிகளை அனுப்பி இந்த பள்ளியில் ஆய்வு செய்தால் இங்கே என்னென்ன குறைகள் மற்றும் ஊழல்கள் நடைபெறுகிறது என்பது தெரியவரும். எனவே இந்த மனுவின் உண்மை நிலையை கண்டுபிடித்து பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எந்தவித இடர்பாடும் இல்லாமல் இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்துக் கொடுக்குமாறு அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என இந்த அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ம.சி.கார்த்திக் ஜி ,வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ்க்கு புகார் மனுவை அனுப்பியுள்ளார். இந்த புகார் மனுவின் மீது மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது . மாவட்ட நிர்வாகம் என்ன செய்கிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கணியம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி!வேலூர், ஜூன் 7-திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவாஜி(38). இவர் இருசக்கர வாகனத்தில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கணியம்பாடி அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கணியம்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு இறந்து கிடந்த சிவாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கணியம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாஜி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் ‘பார் கவுன்சில்’ தேர்தல்: போட்டியின்றி தலைவர் – துணைத் தலைவர் தேர்வு !காஞ்சிபுரம், ஜூன் 7 -காஞ்சிபுரம் ‘பார் கவுன்சிலர்’ தேர்தலில் தலைவர் – துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகில் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ‘பார் அசோசியஷன் சங்கம்’ உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ‘பார் கவுன்சிலில் தேர்தல் நடத்தப்பட்டு, தலைவர் – துணைத் தலைவர் – செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். வெற்றி பெற்றவர்கள் பொறுப்பாளர்களாக அறிவிப்பார்கள். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்றைய தினத்தன்று ‘பார் கவுன்சில் ஆஃப் இந்தியா’ தேர்தல் நடத்த காஞ்சிபுரம் ‘பார் கவுன்சிலுக்கு தடை விதித்தது.இந்த தடையை எதிர்த்து வழக்கறிஞர் கார்த்திக் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ‘பார் கவுன்சில்’ தேர்தல் நடத்த அனுமதி வழங்குமாறு வாதாடினார். உயர்நீதிமன்ற அமர்வு இரண்டு நீதிபதிகள் மனுவை விசாரித்து தேர்தல் நடத்தி தலைவர் – துணைத் தலைவர் – செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவிப்பு செய்ய வேண்டும் என, ஆணை பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம்’பார் அசோசியேஷன் சங்க தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் யார் என்று முறைப்படி அறிவிக்கப்பட்டனர்.இதில் புதிய தலைவர் ஜெகன், துணைத்தலைவர் கார்த்திக் போட்டியின்றி வெற்றி பெற்றனர். அதை தொடர்ந்து செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில், 408 வாக்காளர்களை கொண்ட இந்த தேர்தலில், 277 வாக்குகள் பதிவாகியது. செயலாளர் பதவிக்கு சத்யா தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து துணை தலைவர் பதவிக்கு செல்வமணியும், பொருளாளர் பதவிக்கு யுவராணியும் தேர்வு செய்யப்ட்டனர். நூலகர் விஷ்ணு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ‘பார் கவுன்சிலில்’ உள்ள வழக்கறிஞர்கள் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.