வேலூரில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!வேலூர்,ஜூலை 15-வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதியம் வழங்குதல், காலி பணியிடங்களை நிரப்புதல், பணி சுமையை குறைத்தல் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் குழந்தைகள் முதல் ஆசிரியர்கள் வரை அவர்களின் நலனை காக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ் மாநில அனைத்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த அங்கன்வாடி பணியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

செய்யாறில் விடுதலை போராட்ட மாமன்னர் அழகு முத்துக்கோனின்குரு பூஜை விழா கோலாகலம்:அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்பு !செய்யாறு, ஜூலை 15 -தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட ‘மாமன்னர் அழகுமுத்துக்கோனின்’ 269வது பிறந்தநாளையொட்டி, செய்யாறில் குருபூஜை விழா கோலாகலமாக நடந்தது. அரசியல் கட்சியினர், அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு மாமன்னரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.தமிழகத்தைச் சேர்ந்தவர் மாமன்னர் அழகு முத்துக்கோன். இவர் கடந்த ‘200 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னோடி மாமன்னராகத் திகழ்ந்தவர்.இவரது 269வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப் பட்டு வருகிறது. செய்யாறு யாதவர் சங்கத் தலைவர் சுரேஷ், செயலாளர் ராஜா ஆகியோர் விழாவுக்கு தலைமை தாங்கி, மாமன்னர் அழகு முத்துக்கோனுக்கு இங்குள்ள இந்திரா காந்தி சிலை அருகே 269வது குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இங்கு நிறுவப்பட்டிருந்த மாமன்னரின் திருவுருவப் படத்திற்கு, அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள், பொறுப்பாளர்கள் பேரணியாக வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.முன்னதாக யாதவர் சங்க பொருளாளர் அஜித்குமார், ஒருங்கிணைப்பாளர்களான கோபால், சுதாகர் ஆகியோர் அனைத்து தரப்பு மக்களையும் வரவேற்றனர். விழாவில் செய்யாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் கடந்த ஆண்டு அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றுகள், பண முடிப்பு ஆகியவற்றை விழாக் குழு சார்பில் கௌரவித்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆணழகன் போட்டியில் மிஸ்டர் காட்பாடியாக பட்டம் வென்றவர் இன்று அல்லல்படும் அவலம்: தமிழ்நாடு அரசு கண்டு கொள்ளுமா?வேலூர், ஜூலை 14-வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 1997ல் காட்பாடி ரயில்வே இன்ஸ்டிடியூட் வளாகத்தில் நடந்த தமிழ்நாடு அளவிலான வேலூர் மாவட்டத்தில் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் முனுசாமி வெற்றி பெற்று ‘மிஸ்டர் காட்பாடி’ என்று பட்டம் வென்றார். ஆனால் இவருக்கு தமிழ்நாடு அரசு எவ்விதமான உதவியும் செய்யவில்லை. விளையாட்டு வீரர் கோட்டாவில் இவருக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் காட்பாடி பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு உடற்பயிற்சி செய்ய பயிற்சி அளித்து வருகிறார். உடற்பயிற்சி கூடத்தில் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வரும் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார் முனுசாமி. ஆனால் சரியான வேலையின்றி குடும்பம் நடத்த சிரமமாக நாளை கழித்து வருகிறார். இளைஞர்கள் நல்வழியில் நடக்க போதை இல்லாத வாழ்க்கை முறையை வாழ தகுந்த அறிவுரைகள் வழங்கி தொண்டு செய்து வருகிறார். அத்துடன் சமூக ஆர்வலராகவும் பொதுமக்களுக்கு தொண்டாற்றி சேவை செய்து வருகிறார். இவருக்கு தமிழ்நாடு அரசு வாழ்வாதாரம் சிறக்க ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. தமிழ்நாடு அரசு முனுசாமிக்கு ஏதாவது முன் வந்து உதவிபுரியுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளை சந்தித்து மேட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் உயர்த்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. இக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கோவை வடக்கு மாவட்ட தலைவர் எஸ். எம் .அய்யூப் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுகூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .எதிர் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனையும் நடைபெற்றது..

ஸ்ரீ பாலமுருகன் டிரேடர்ஸ் திறப்பு விழா: முதியோர்களுக்கு உணவு வழங்கி உபசரிப்பு!வேலூர், ஜூலை 13-வேலூர் அடுத்த பொய்கையில் உள்ள முதியோர் இல்லத்தில் (மோட்டூரில்) புதியதாக தொடங்கியுள்ள ஸ்ரீ பாலமுருகன் டிரேடர்ஸ் கடை திறப்பு விழாவை முன்னிட்டு முதியோர்களுக்கு காலை உணவை தனது திருக் கரங்களால் வேலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ வினோத் கண்ணன் வழங்கி நெகிழ்ச்சி அடைந்தார். இந்த உணவை உட்கொண்ட முதியோர் நாங்கள் அனைவரும் வீட்டில் எங்களது உறவினர்களுடன் அமர்ந்து உண்ட ஆத்ம திருப்தி தங்களுக்கு கிடைத்தது போன்று உள்ளது என்று உளப்பூர்வமாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எளிய நிகழ்ச்சியில் எம். எல். ஏ.,வுடன் பாலமுருகன் டிரேடர்ஸ் உரிமையாளர்கள் கேப்டன் சிவக்குமார், ரீனா சிவக்குமார், சசிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.