ஸ்ரீ பாலமுருகன் டிரேடர்ஸ் திறப்பு விழா: முதியோர்களுக்கு உணவு வழங்கி உபசரிப்பு!வேலூர், ஜூலை 13-வேலூர் அடுத்த பொய்கையில் உள்ள முதியோர் இல்லத்தில் (மோட்டூரில்) புதியதாக தொடங்கியுள்ள ஸ்ரீ பாலமுருகன் டிரேடர்ஸ் கடை திறப்பு விழாவை முன்னிட்டு முதியோர்களுக்கு காலை உணவை தனது திருக் கரங்களால் வேலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ வினோத் கண்ணன் வழங்கி நெகிழ்ச்சி அடைந்தார். இந்த உணவை உட்கொண்ட முதியோர் நாங்கள் அனைவரும் வீட்டில் எங்களது உறவினர்களுடன் அமர்ந்து உண்ட ஆத்ம திருப்தி தங்களுக்கு கிடைத்தது போன்று உள்ளது என்று உளப்பூர்வமாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எளிய நிகழ்ச்சியில் எம். எல். ஏ.,வுடன் பாலமுருகன் டிரேடர்ஸ் உரிமையாளர்கள் கேப்டன் சிவக்குமார், ரீனா சிவக்குமார், சசிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.