Archives
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Month:
July 2026
மாநகராட்சி கால்வாய் கட்டும் பணியில் மெத்தனம் காட்பாடி அருப்பு மேட்டில் தட்டிக் கேட்கும் மக்களுக்கு ஆபாச வார்த்தை கொலை மிரட்டல்
சென்னையில் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆட்டோ கட்டணம் மறு நிர்ணயம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது அதில் கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு சார்பில் நா. லோகு கலந்து கொண்டு போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு விஜய் பார்த்திபன் அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்கப்பட்டபோது எடுத்த படம்
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு குறை தீர்வு மனு நாள்!வேலூர், ஜூலை 10-வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.U. சிவராமன் உத்தரவின் பேரில், 08.07.2026-ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பழனி (தலைமையிடம்), உதவி காவல் கண்காணிப்பாளர் B.S.தனுஷ் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் குறை தீர்வு மனு நாளில் 45 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோவையில் மறைந்த மூத்த தலைவர்ஜோதிபாசு 112-வது பிறந்தநாளையொட்டி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் சிறப்பு பேரவை
சிறு தாமூர் ஸ்ரீனிவாச அறக்கட்டளை நிர்வகிக்கும்கற்றல் வசதியில் கல்வி திட்ட விழா!
கிராம நிர்வாக அலுவலர்கள் 10 பேர் மட்டுமே கலந்து கொண்ட பணியிட மாற்றத்திற்கான நேர்காணல்!வேலூர், ஜூலை 9-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் நேர்காணல் நடத்தினார். இந்த நேர்காணல் காட்பாடி வட்டத்தில் ஜமாபந்தி முடிந்தவுடன் நடந்தது. ஆனால் இந்த நேர்காணலில் கிராம நிர்வாக அலுவலர்கள் பெரும்பாலும் யாரும் கலந்து கொள்ளவில்லை. கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் அன்பரசன், விநாயகம், இளங்கோவன், சரவணன், வெங்கடேசன் உள்ளிட்ட 10 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். சங்கத்தின் நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டிய இடங்களை தேர்வு செய்து கொள்கின்றனர். குறிப்பாக அவர்கள் தேர்வு செய்த இடங்கள் போக மீதமுள்ள இடங்களில் மற்றவர்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டிய அவலநிலை தொடர்ந்து நிலவுகிறது. இப்படி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு இதற்கு முன்பு காட்பாடி வட்டாட்சியராக இருந்த ஜெகதீஸ்வரன்(எ)ஜெகன் கேட்பதையெல்லாம் செய்து கொடுத்து அவர்களை தவறான பாதையில் அழைத்து சென்றார். அத்துடன் இதேநிலை தற்போதும் தொடர ஆரம்பித்துள்ளது. ஜெகன் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பிறகும் காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி பணியிலும் குறுக்கீடு செய்த வண்ணம் உள்ளார் என்ற தகவல் காட்டுத்தீ போல வருவாய் துறையில் பரவி வருகிறது. ஜெகன் வெளியில் சென்ற பிறகும் காட்பாடி வட்டத்தில் தனிக்கவனம் செலுத்தி ஆணையிட்டு வருகிறார் என்றே சொல்லலாம். கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடமாற்றத்திலும் இன்றுவரை அதேநிலை தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் சங்க நிர்வாகிகள் தொடர்ந்து மூக்கை நுழைத்து கொள்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக தாராபடவேடு, பழைய காட்பாடி, கழிஞ்சூர், காங்கேயநல்லூர், சேனூர், வஞ்சூர், கரசமங்கலம், வண்டறந்தாங்கல், பிரம்மபுரம், சேவூர் ஆகிய கிராமங்கள் அடங்கும். இந்த இடங்களில் மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் 3 முறை, 4 முறை என்று இங்கு பணியாற்றியவர்களே மீண்டும் அதே இடங்களை குறிவைத்து மற்ற யாருக்கும் இந்த இடங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்து தட்டிப்பறிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். காட்பாடி வட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்களை கலந்து பணியமர்த்த ஈரோட்டில் இருந்து வேலூர் கோட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நபர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சக கிராம நிர்வாக அலுவலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். சங்கத்தை தூக்கி குப்பையில் வீசிவிட்டு முறையாக பணியிடமாற்றம் வழங்க கோட்டாட்சியர் முன்வர வேண்டும். இந்த ஆண்டு முறைகேடு ஏதும் நடைபெறாமல் தகுதி வாய்ந்த விஏஓக்களை பணியமர்த்த வேண்டூம் கோட்டாட்சியர். சங்கத்தின் கொட்டத்தை அடக்க வேண்டும் கோட்டாட்சியர். குறிப்பாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் புதிய நபர்களை நியமனம் செய்யப்பட வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். கோட்டாட்சியர் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
‘மாறுவோம் மாற்றுவோம்’அண்ணாமல தொடங்கிய புதுக் கட்சிக்கு செய்யாறில் வரவேற்பு !செய்யாறு, ஜூலை 9 -அண்ணாமலை தொடங்கிய புதுக் கட்சிக்கு, செய்யாறில் புது தொண்டர்கள் உற்சாகத்துடன் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். அரசியலில் ஆர்வம் கொண்ட இவர், தனது உயர்பதியை உதறிவிட்டு, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இவருக்கு மாநில தலைவர் பதவியும் வழங்கி அக்கட்சி அழகு பார்த்தது. தி.மு.க., – அ.தி.மு.க., ஆகிய மூத்த கட்சிகளை ஆடவிட்டவர்.பொறுப்பு வகித்த இவரது கட்சியிலேயே இவருக்கு எதிராக பொறாமை வெடித்தது. இதையும் மீறி அண்ணாமலை தனது பணிகளை தொடர்ந்து ஆற்றி வந்தார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் இவருக்கு வேட்பாளருக்கான ‘டிக்கெட்டை’ கொடுக்க கட்சி மேலிடம் மறுத்துவிட்டது. இதனால், விரக்தி அடைந்த அண்ணாமலை பா.ஜ.க., கட்சியிலிருந்து முழுமையாக விலகி விட்டார். இதற்கான கடிதத்தையும் டெல்லியில் வழங்கினார். இந்த கையோடு அண்ணாமலை கடந்த மாதம் தமிழகத்தில் புது கட்சியை ஒன்றை துவக்கினார்.கட்சி துவங்கிய அதே நாளில், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள், படித்தவர்கள், இளம் பெண்கள் இணைய தல மூலமாக உறுப்பினர்களாக சேர்ந்தனர். செய்யாறில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அண்ணாமலை கட்சியில் இணைந்துள்ளனர். செய்யாறு வெங்கட்ராயன் சேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், இங்குள்ள புதிய உறுப்பினர்களை வழி நடத்தி வருகிறார். அண்ணாமலையின் புதிய கட்சியை குறித்து, பொது மக்கள், வியாபாரிகள், இளைஞர்கள், இளம் பெண்களிடம் ‘மாறுவோம் மாற்றுவோம்’ – ‘போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்’ என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அண்ணாமலையின் புதிய கட்சிக்கென, செய்யாறில் அனைத்து தரப்பு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.
மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுகப் பயிற்சி நிறைவு விழா
பணியிடை மாற்றம் என்ற பெயரில் வெள்ளி திரை மிஞ்சும் அளவிற்கு ஊராட்சி ஒன்றியங்களில் நாடகங்கள் அரங்கேற்றம்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
1
…
3
4
5
…
8
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.