காட்பாடியில் குட்கா கடத்தியவர் கைது: 10.5 கிலோ குட்கா பறிமுதல்!வேலூர், ஜூன் 6-வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி அருகே காட்பாடி காவல் நிலைய போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர்.அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அவரது உடமைகளை போலீஸார் சோதனையிட்டனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ‘ஹான்ஸ்’ மற்றும் ‘கூல் லிப்’ ஆகிய புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காகக் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.அவரிடமிருந்து மொத்தம் 10.5 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை (270 ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் 270 கூல் லிப் பாக்கெட்டுகள்) போலீஸார் பறிமுதல் செய்தனர்.இதனைத் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டம், ஆழ்வார்திருநகர், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பழனி (53) என்பவர் மீது காட்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.