உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் தொடக்கம்! வேலூர் ,ஜூன் 6 -வேலூர் மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அன்பூண்டி ஏரிக்கரையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ் ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்தார். இந்நிகழ்வின் போது அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த.வேலழகன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர். பிரேமலதா ,பொய்கை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், மாவட்ட பசுமை ஒருங்கிணைப்பாளர் செல்வி. நாகதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வினோத்குமார், செல்வகுமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த ஆயிரம் மரக்கன்றுகளும் வளர்ந்து வேலூர் மாவட்டத்தை பசுமையாக்கும் என்று மாவட்ட நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைவரும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்து இந்த சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’ என்ற ஸ்லோகன் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.