திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!வேலூர், ஏப். 29-சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இதுகுறித்து விடுத்துள்ள அறிவிப்பு: வரும் 30ம் தேதி இரவு 9 மணி முதல் மே 1ம் தேதி இரவு 11.07 மணி வரை திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்.கிளாம்பாக்கத்தில் இருந்து 30ம் தேதி 548 பேருந்துகளும், மே 1ம் தேதி 565 பேருந்துகளும் இயக்கம்.மாதவரத்தில் இருந்து 30ம் தேதி 186, மே 1ம் தேதி 174 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.அதேபோன்றே வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வி.கோட்டா (வேங்கடகிரி கோட்டா) ஆந்திர ஜோதி நிருபர் கத்தியால் வெட்டி கொலை – மற்றொரு நிருபருக்குப் பலத்த காயம்!வேலூர், ஏப். 29-ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், வி.கோட்டாவில் இன்று காலை அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரஜோதி நாளிதழின் நிருபர் ஜெகன்மோகன் ரெட்டி மர்ம நபர்களால் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.சித்தூர் மாவட்டம், வி. கோட்டா ஆந்திர ஜோதி பத்திரிகையின் செய்தியாளர் ஜெகன் மோகன் ரெட்டி நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரைப் பின் தொடர்ந்து வந்து கத்திகளால் சரமாரியாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் அதிக ரத்தப்போக்கு காரணமாகச் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.அவருடன் இருந்த பிரஜாசக்தி பத்திரிகை நிருபரும் தாக்குதலைத் தடுக்க முயன்ற போது அவருக்கும் அருவாள் வெட்டு விழுந்தது. இதில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர். ஜெகன்மோகன் ரெட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இக்கொலைக்கான காரணம் குறித்துப் ஆந்திர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பட்டப்பகலில் பத்திரிகையாளர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பத்திரிகையாளர்கள் (ம) ஊடகவியலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து (என்கவுண்டர்) கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பத்திரிகையாளர் சங்கங்கள் ஆந்திர அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.இச்சம்பவத்தை கண்டித்து சித்தூரில் உள்ள பத்திரிகையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் அதே போன்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு வந்த பகிரங்க வெடிகுண்டு மிரட்டல்: ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர சோதனை!வேலூர்,ஏப்.29-வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஆட்சியர் தங்கும் இல்லம் ஆகிய இரண்டு இடங்களில் ஆர் .டி. எக்ஸ்., பாம் வைத்துள்ளதாகவும் அது இன்று (ஏப்ரல் 28) வெடிக்கும் என மாவட்ட ஆட்சியரின் இ-மெயிலுக்கு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர் குழுவினர் ஆட்சியர் அறை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அறை மற்றும் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அதேபோன்று ஆட்சியர் தங்கும் இல்ல பகுதிகளில் தீவிர வெடிகுண்டு சோதனை நடைபெற்றது. ஆனால் எங்கும் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து இந்த வெடிகுண்டு மிரட்டலை அனுப்பிய மர்ம நபர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களின் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகில் நடந்த சாலை விபத்தில் பெண் பரிதாப பலி!வேலூர், ஏப். 28-வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே நடந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.குடியாத்தம் அடுத்த கணவாய் மோட்டூர் பகுதியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த கனரக வாகனம் மின் கம்பம் மீது மோதியது. இந்த விபத்தில் உயர் மின் அழுத்த கம்பம் சாய்ந்து தரையில் விழுந்தது. இதனால் அருகில் இருந்த பெண் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அந்த பெண் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.தமிழக ஆந்திர இரு மாநில இணைப்பு போக்குவரத்து இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மின்துறை களப் பணியாளர்கள் சேதமடைந்த மின் கம்பத்தை சரி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காட்பாடியில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!வேலூர்,ஏப்.28-பெங்களூரைச் சேர்ந்தவர் மதுவாணன் (50) .இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் சென்னை ரயிலில் பயணம் செய்தார். அப்போது அதே ரயிலில் பயணம் செய்த மற்றொரு பெண் பயணியிடம் மதிவாணன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காட்பாடி ரயில்வே போலீஸார் காவல் ஆய்வாளர் மனோன்மணி தலைமையில் விரைந்து சென்று ஓடும் ரயிலில் மதிவாணனை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர் .வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவின் பேரில் மதிவாணன் வேலூர் மத்திய சிறையில் காவலில் அடைக்கப்பட்டார். இதுபோன்ற ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆதலால் முன்பதிவு செய்துள்ள ரயில் பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரோ அல்லது ரயில்வே போலீஸாரோ பாதுகாப்பு பணிக்கு நியமிக்க வேண்டுமென பெண் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குடியாத்தம் நகர மூத்த வழக்கறிஞர் கே. எம். பூபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கைத்தறி காவலன் எஸ். ரமேஷ்!வேலூர், ஏப். 28-பிறந்தநாள் காணும் முன்னாள் அரசு வழக்கறிஞர், அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர், குடியாத்தம் நகர மூத்த வழக்கறிஞர் கே. எம். பூபதியை நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து தனக்கு வாழ்த்த வயதில்லை என்று வணங்கி மகிழ்ந்தார் குடியாத்தம் நகர கைத்தறி காவலன் மற்றும் குடியாத்தம் புதிய நீதி கட்சியின் நகர செயலாளர், இளம் தொழிலதிபர் எஸ்.இரமேஷ். பிறந்த நாள் கொண்டாடி மகிழும் வழக்கறிஞர் கே. எம். பூபதி கைத்தறி காவலன் எஸ். இ ரமேஷை வாழ்த்தி, பாராட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் நண்பகல் அறுசுவை விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.

வேலூரில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த ஆட்டோவில் பேட்டரி திருட்டு: சிஎஸ்ஆர் கூட பதிவு செய்யாத வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார்!வேலூர், ஏப். 26-வேலூர் பிஷப் டேவிட் நகரைச் சேர்ந்தவர் தேவசகாயம் (45 ).இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் பணி முடிந்து கடந்த 20ஆம் தேதி (திங்கட்கிழமை) இரவு 11 மணிக்கு தனது வீட்டின் முன்பு வாடகை ஆட்டோவை நிறுத்தி வைத்துவிட்டு தூங்கச் சென்று விட்டார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்தபோது ஆட்டோவில் இருந்த பேட்டரியை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் தேவசகாயம் வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்குச் சென்று குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட தெற்கு குற்றப்பிரிவு போலீசார் சிஎஸ்ஆர் கூட வழங்காமல் அவரை அலைகழித்துள்ளனர். இதுநாள் வரை அந்த பேட்டரி திருட்டு போனது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, விசாரணையும் நடத்தவில்லை. சிஎஸ்ஆரும் அவருக்கு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு புகாரை பெற்றால் சிஎஸ்ஆர் தர வேண்டும் என்பது விதி. அந்த விதியை மீறி செயல்படுகின்றனர் தெற்கு காவல் நிலைய போலீசார் என்று சொன்னால் அது மிகையாகாது. இது போன்ற தகவல்கள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் காதுகளில் விழுகிறதா? அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறதா? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். மாவட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள், மறைக்கப்படும் உண்மை தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வேலையை பார்க்க நியமிக்கப்பட்ட தனிப்பிரிவு போலீசார் என்ன வேலைதான் பார்க்கின்றனர் என்று தெரியவில்லை. இவர்களும் காவல் நிலையத்தில் சீருடை அணிந்து பணியாற்றுபவர்களுடன் சேர்ந்து அவர்கள் தரும் ‘ப’ வைட்டமினுக்கு ஆசைப்பட்டு எந்த தகவலையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் மறைத்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது தெள்ளத் தெளிவாக இதில் இருந்து தெரிய வருகிறது. பொதுமக்கள் புகாரை கொடுத்துவிட்டு கிணற்றில் போன்ற கல் போன்று கையில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் அலைந்து திரிந்து கொண்டுள்ளனர். இந்த ஒரு விஷயமே அதற்கு உதாரணமாக கொள்ளலாம். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப் பிரிவு போலீசாரை கூண்டோடு மாற்றிவிட்டு புதிய நபர்களை குறிப்பாக உண்மை தன்மையை கண்டறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்பவர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்களும், பாதிக்கப்பட்ட நபர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இது போன்று தொலைந்த ஆட்டோவின் பேட்டரி கிடைக்குமா? கிடைக்காதா? நடவடிக்கை எடுப்பார்களா? எடுக்க மாட்டார்களா? தெற்கு குற்றப்பிரிவு போலீசார் என்பது சிதம்பர ரகசியமாகவே உள்ளது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இனி இதில் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காவல்துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இதுபோன்ற செயல்களால் மெல்ல இழந்து வரச் செய்கின்றது இது போன்ற சம்பவங்கள் என்று சொன்னால் அதுதான் நிதர்சனம்.